<p><span style="color: #993300"><strong>சொல்லாத காதல்பற்றி... </strong></span></p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td style="text-align: right">##~##</td> </tr> </tbody> </table>.<p>உணர்தலின் ருசி தெரிகிறது<br /> நம் இருவருக்கும்</p>.<p>கிணற்று ஆழத்தின் சேற்றில்<br /> பதுக்கிவைத்துக்கொள்கிறோம்<br /> வார்த்தைகளை<br /> உடைந்த வளையல்களைப்போல</p>.<p>யாராவது முதலில் திரி கொளுத்தித்<br /> தொடங்கிவிடலாம்<br /> எல்லாம் நம் வசம் இருக்கிறது</p>.<p>எதுவும் முடியும்<br /> மிக பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளலாம்<br /> இருந்தும் வேண்டாம்</p>.<p>உறவு வைரம் போன்றது<br /> அதைக்கொண்டே அதை<br /> அறுத்துக்கொள்ளும் தன்மை அதற்கு</p>.<p>இந்தக் கவிதை<br /> இத்துடன் முடிந்துபோவது<br /> உன் குடும்பத்துக்கும் எனக்கும் மிக நல்லது!</p>.<p><span style="color: #ff6600"><strong>- முத்துவேல் </strong></span></p>.<p><span style="color: #0000ff"><strong>கலைமகளின் வீணை... </strong></span></p>.<p>விடுதிக்கென்று<br /> விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்<br /> நுழைய நுழைவுக் கட்டணம்<br /> கராத்தே கற்றுக்கொள்ள<br /> கறாராகக் கட்டணம்<br /> தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு<br /> தனியே கட்டணம்<br /> சீருடைக்கென்று<br /> சிறப்புக் கட்டணம்<br /> பாடப் புத்தகம் வாங்க<br /> பல நூறு கட்டணம்<br /> கேள்வித்தாளுக்குக் கட்டணம்<br /> இதை எதிர்த்துக்<br /> கேள்வி கேட்டாலும் கட்டணம்<br /> விடைத்தாளுக்குக் கட்டணம்<br /> இதுபோல் எத்தனையோ<br /> விடை தெரியாக் கட்டணம்...<br /> ஏதேதோ காரணம் சொல்லி<br /> எக்கச்சக்கமாய்<br /> கட்டணம் வாங்கிய பின்னும்<br /> குழந்தைகள் சரியாகப்<br /> படிக்கவில்லையே என்று கேட்டால்<br /> பதில் சொல்கிறார்கள்<br /> பள்ளியில்...<br /> 'வீட்டில் சொல்லிக்கொடுங்கள்’ என!</p>.<p><span style="color: #ff6600"><strong>- ஆதலையூர் சூரியகுமார் </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>துண்டுப் பிரசுரம் </strong></span></p>.<p>சாலை ஓரமாக நின்றிருக்கும்<br /> மரமொன்று<br /> அவ்வழி செல்வோர் தலையில்<br /> துண்டுப் பிரசுரங்களாய்<br /> தன்இலைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது<br /> வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என<br /> அதில் எழுதியிருப்பதாய்<br /> உணர்கிறேன்!</p>.<p><span style="color: #ff6600"><strong>- கட்டளை ஜெயா </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>நனையாத மழை </strong></span></p>.<p>தொலைக்காட்சிப் படமொன்றில்<br /> பெய்யத் துவங்கிய மழைக்கு<br /> குடை விரிக்கத் துவங்கினாள்<br /> சிறுமி அதிஸ்யா.<br /> பிறகு சலிப்புற்று<br /> நனையத் துவங்கினாள்.<br /> வீட்டிற்குள் ஏன்<br /> ஈரமாகவில்லையென<br /> நச்சரிக்கத் தொடங்கினாள்.<br /> உள்ளே பெய்யாத<br /> அம்மழை<br /> இறங்கத் துவங்கிற்று<br /> அவள் கண்களின் வழியே!</p>.<p><span style="color: #ff6600"><strong>- க.அம்சப்ரியா </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>களை </strong></span></p>.<p>புற்றுநோயைப்போலத்<br /> தொடங்கிவிட்டது சந்தேகம்</p>.<p>மிகவும் கொடியதது</p>.<p>இதயத்தில் வேர்வைத்து<br /> மார்பு வரை பாசியாகப் பரவி<br /> தவணையில் குடிக்கிறது உயிரை</p>.<p>அழுகிய மாம்பழத்தின்<br /> ஒரு பகுதியை நீக்கி<br /> உண்ணுகின்ற சகிப்பு<br /> உனக்கும் இல்லை எனக்கும் இல்லை</p>.<p>போலிக்கௌரவம், தாலியின் பொருட்டு<br /> ஒப்புக்காகத் தொடர்கிறதெனில்<br /> அவ்வுறவை<br /> தீட்டிய பாலரிவாள்கொண்டு<br /> அறுத்துக்கொள்ளலாம்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- முத்துவேல்</strong></span></p>
<p><span style="color: #993300"><strong>சொல்லாத காதல்பற்றி... </strong></span></p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td style="text-align: right">##~##</td> </tr> </tbody> </table>.<p>உணர்தலின் ருசி தெரிகிறது<br /> நம் இருவருக்கும்</p>.<p>கிணற்று ஆழத்தின் சேற்றில்<br /> பதுக்கிவைத்துக்கொள்கிறோம்<br /> வார்த்தைகளை<br /> உடைந்த வளையல்களைப்போல</p>.<p>யாராவது முதலில் திரி கொளுத்தித்<br /> தொடங்கிவிடலாம்<br /> எல்லாம் நம் வசம் இருக்கிறது</p>.<p>எதுவும் முடியும்<br /> மிக பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளலாம்<br /> இருந்தும் வேண்டாம்</p>.<p>உறவு வைரம் போன்றது<br /> அதைக்கொண்டே அதை<br /> அறுத்துக்கொள்ளும் தன்மை அதற்கு</p>.<p>இந்தக் கவிதை<br /> இத்துடன் முடிந்துபோவது<br /> உன் குடும்பத்துக்கும் எனக்கும் மிக நல்லது!</p>.<p><span style="color: #ff6600"><strong>- முத்துவேல் </strong></span></p>.<p><span style="color: #0000ff"><strong>கலைமகளின் வீணை... </strong></span></p>.<p>விடுதிக்கென்று<br /> விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்<br /> நுழைய நுழைவுக் கட்டணம்<br /> கராத்தே கற்றுக்கொள்ள<br /> கறாராகக் கட்டணம்<br /> தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு<br /> தனியே கட்டணம்<br /> சீருடைக்கென்று<br /> சிறப்புக் கட்டணம்<br /> பாடப் புத்தகம் வாங்க<br /> பல நூறு கட்டணம்<br /> கேள்வித்தாளுக்குக் கட்டணம்<br /> இதை எதிர்த்துக்<br /> கேள்வி கேட்டாலும் கட்டணம்<br /> விடைத்தாளுக்குக் கட்டணம்<br /> இதுபோல் எத்தனையோ<br /> விடை தெரியாக் கட்டணம்...<br /> ஏதேதோ காரணம் சொல்லி<br /> எக்கச்சக்கமாய்<br /> கட்டணம் வாங்கிய பின்னும்<br /> குழந்தைகள் சரியாகப்<br /> படிக்கவில்லையே என்று கேட்டால்<br /> பதில் சொல்கிறார்கள்<br /> பள்ளியில்...<br /> 'வீட்டில் சொல்லிக்கொடுங்கள்’ என!</p>.<p><span style="color: #ff6600"><strong>- ஆதலையூர் சூரியகுமார் </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>துண்டுப் பிரசுரம் </strong></span></p>.<p>சாலை ஓரமாக நின்றிருக்கும்<br /> மரமொன்று<br /> அவ்வழி செல்வோர் தலையில்<br /> துண்டுப் பிரசுரங்களாய்<br /> தன்இலைகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது<br /> வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என<br /> அதில் எழுதியிருப்பதாய்<br /> உணர்கிறேன்!</p>.<p><span style="color: #ff6600"><strong>- கட்டளை ஜெயா </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>நனையாத மழை </strong></span></p>.<p>தொலைக்காட்சிப் படமொன்றில்<br /> பெய்யத் துவங்கிய மழைக்கு<br /> குடை விரிக்கத் துவங்கினாள்<br /> சிறுமி அதிஸ்யா.<br /> பிறகு சலிப்புற்று<br /> நனையத் துவங்கினாள்.<br /> வீட்டிற்குள் ஏன்<br /> ஈரமாகவில்லையென<br /> நச்சரிக்கத் தொடங்கினாள்.<br /> உள்ளே பெய்யாத<br /> அம்மழை<br /> இறங்கத் துவங்கிற்று<br /> அவள் கண்களின் வழியே!</p>.<p><span style="color: #ff6600"><strong>- க.அம்சப்ரியா </strong></span></p>.<p><span style="color: #993300"><strong>களை </strong></span></p>.<p>புற்றுநோயைப்போலத்<br /> தொடங்கிவிட்டது சந்தேகம்</p>.<p>மிகவும் கொடியதது</p>.<p>இதயத்தில் வேர்வைத்து<br /> மார்பு வரை பாசியாகப் பரவி<br /> தவணையில் குடிக்கிறது உயிரை</p>.<p>அழுகிய மாம்பழத்தின்<br /> ஒரு பகுதியை நீக்கி<br /> உண்ணுகின்ற சகிப்பு<br /> உனக்கும் இல்லை எனக்கும் இல்லை</p>.<p>போலிக்கௌரவம், தாலியின் பொருட்டு<br /> ஒப்புக்காகத் தொடர்கிறதெனில்<br /> அவ்வுறவை<br /> தீட்டிய பாலரிவாள்கொண்டு<br /> அறுத்துக்கொள்ளலாம்!</p>.<p><span style="color: #0000ff"><strong>- முத்துவேல்</strong></span></p>