<p><strong>மூ</strong>டிய இமைகளின் மேல் உருட்டும் <br /> எலுமிச்சை உன் உடல்</p>.<p><strong>கா</strong>ம்பிலிருந்து விழும் பழம் நீ<br /> குளத்திலிருந்து எழும் விறால் நான்</p>.<p><strong>எ</strong>ல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும்<br /> உருண்டுகொண்டுதான் இருக்கின்றன<br /> பாறைக்குள் கூழாங்கல்</p>.<p><strong>இ</strong>டி மின்னலுக்குப் பிறகு தேடக் கிடைத்தது<br /> எதிர்க் காளான்</p>.<p><strong>பு</strong>ரண்டு படுத்த உன் முதுகில்தான் பார்த்தேன்<br /> முழுமையான உன் முகம்</p>.<p><strong>எ</strong>ல்லா மழைகளுக்கும் பிறகான<br /> மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது<br /> நீ விரும்பிச் செய்த மழை</p>.<p><strong>அ</strong>ப்படியெல்லாம் ஒன்றுமில்லை<br /> அதுவும் உடுத்திக்கொள்ளுதல்தான்</p>.<p><strong>கு</strong>ருவி பேசி குருவிகள் பேசி<br /> அமைதிகொண்டது பாறை</p>.<p><strong>ப</strong>ற்களுக்குக் கடிக்கக் கிடைத்த காம்பின்<br /> ஒற்றை முடியிலிருந்துதான்<br /> தொடங்கியிருக்க வேண்டும் நரம்பிசை</p>.<p><strong>ஆ</strong>மாம்<br /> தண்ணீர் தெளித்துக்<br /> கோலம் போடுவதற்காகத்தான் விழித்தாய்</p>
<p><strong>மூ</strong>டிய இமைகளின் மேல் உருட்டும் <br /> எலுமிச்சை உன் உடல்</p>.<p><strong>கா</strong>ம்பிலிருந்து விழும் பழம் நீ<br /> குளத்திலிருந்து எழும் விறால் நான்</p>.<p><strong>எ</strong>ல்லா அருவிப் புகைக்கு உள்ளேயும்<br /> உருண்டுகொண்டுதான் இருக்கின்றன<br /> பாறைக்குள் கூழாங்கல்</p>.<p><strong>இ</strong>டி மின்னலுக்குப் பிறகு தேடக் கிடைத்தது<br /> எதிர்க் காளான்</p>.<p><strong>பு</strong>ரண்டு படுத்த உன் முதுகில்தான் பார்த்தேன்<br /> முழுமையான உன் முகம்</p>.<p><strong>எ</strong>ல்லா மழைகளுக்கும் பிறகான<br /> மூச்சுகள் ஓய்ந்த பிறகு வாய்த்தது<br /> நீ விரும்பிச் செய்த மழை</p>.<p><strong>அ</strong>ப்படியெல்லாம் ஒன்றுமில்லை<br /> அதுவும் உடுத்திக்கொள்ளுதல்தான்</p>.<p><strong>கு</strong>ருவி பேசி குருவிகள் பேசி<br /> அமைதிகொண்டது பாறை</p>.<p><strong>ப</strong>ற்களுக்குக் கடிக்கக் கிடைத்த காம்பின்<br /> ஒற்றை முடியிலிருந்துதான்<br /> தொடங்கியிருக்க வேண்டும் நரம்பிசை</p>.<p><strong>ஆ</strong>மாம்<br /> தண்ணீர் தெளித்துக்<br /> கோலம் போடுவதற்காகத்தான் விழித்தாய்</p>