<p><span style="color: #993300"><strong>வீடெனப்படுவது... </strong></span></p>.<p>அதிகாலை<br /> ஊரிலிருந்து<br /> தவிர்க்க முடியாத தகவலொன்று<br /> கைபேசியில் சொல்லப்பட...<br /> ஆற அமர யோசித்துப்<br /> பொருத்தமான பொய்யன்றை<br /> ஆபீஸில் சொல்லிவிட்டு<br /> அவசியம் வருமாறு<br /> அவசரமாய் கிளம்பிவிட்டனர்<br /> அப்பா, அம்மா, தங்கை.</p>.<p>எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற<br /> ஆறேழு நாட்களுக்குமான<br /> ஆடைகள், இதர பொருட்களுடன்<br /> ஒட்டிக்கொண்டு<br /> வீடும் சென்றுவிட<br /> என்னுடன் மிச்சம் இருப்பவை<br /> சில சுவர்கள், பொருட்கள்,<br /> சில ஜன்னல்கள், கதவுகள்,<br /> ஃபிரிஜ்ஜில் மிஞ்சிய நேற்றைய மாவு,<br /> இவற்றுடன்<br /> ஹாலில் அமர்ந்து<br /> தம் அடிக்கக் கொஞ்சம் சுதந்திரமும்<br /> நிறைய தனிமையும்!</p>.<p><strong>- கோநா </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>அஞ்சல் செய்யப்படாத கடிதம் </strong></span></p>.<p>ஒளி குறைந்த<br /> முன்னிரவுப் பொழுதொன்றில்<br /> கண்டெடுக்க நேர்ந்தது<br /> அஞ்சல் செய்யப்படாத<br /> என் பழைய கடிதமொன்றை...</p>.<p>எந்த சுவாரஸ்யமும் இல்லை<br /> அதை இப்போது வாசிப்பதில்,<br /> அது என்<br /> சொல்லப்படாத காதலைச் சுமந்திருக்கிறது<br /> என்பதைத் தவிர.</p>.<p>மீண்டும் அதைத்<br /> தொலைக்க முடியவில்லை என்னால்<br /> முகம் தெரியாதவர்களால்<br /> வாசிக்கப்பட்டு<br /> விமர்சிக்கப்படும் என்பதால்.</p>.<p>அழிக்கவும் மனதில்லை அதனை<br /> என் சொல்லாத காதலின்<br /> ஒரே சாட்சியாக<br /> இருக்கிறது என்பதால்.</p>.<p>இறுதியில் அதை<br /> நானே இருத்திக்கொள்வதென முடிவானது<br /> அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்<br /> என்னில் அது உண்டுபண்ணாவிடினும்<br /> குறைந்தபட்சமாய்<br /> இதே போன்றதொரு<br /> அஞ்சல் செய்யப்படாத கடிதம்<br /> அவளிடமும்<br /> இருக்கக் கூடும் இன்னும்<br /> என்ற நம்பிக்கையை<br /> உண்டுபண்ணியதற்காகவாவது!</p>.<p><strong>- பெ.பார்த்திபன் </strong></p>.<p><span style="color: #003300"><strong>பயணக் கட்டுரை </strong></span></p>.<p>நாலு பத்து வண்டிக்கு<br /> நாலு மணிக்குக் கிளம்பினால்<br /> போதாதா என்றாள்.<br /> நாலு பத்துக்கு வந்தபோது<br /> நாலு பத்து வண்டி<br /> நாலு மணிக்கே போனதாம்.<br /> நாலு மணி வண்டியை<br /> நாலு பத்து வண்டியாகச் சொன்னேன் என<br /> அஞ்சு முப்பது வரையில்<br /> பேசிக்கொண்டு இருந்தாள்.<br /> அஞ்சு நாப்பது வண்டியை<br /> அஞ்சு முப்பதுக்குத்தான் இனி<br /> வண்டியெனச் சொல்ல<br /> அனுபவம்தான் கற்றுத் தந்தது.<br /> போக,<br /> அஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்<br /> இவள் பேசாமல் இருந்ததும்<br /> அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்<br /> ஆச்சர்யமாக வேறு இருந்தது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #003300"><strong>விட்டு விடுங்கள்! </strong></span></p>.<p>கவிதை<br /> எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?<br /> கதை<br /> எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?<br /> இலக்கிய அனுபவம்<br /> என்றால் என்ன தெரியுமா?<br /> ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்<br /> என்னைக் கொஞ்சம்<br /> தனியே வாசிக்க விடுங்கள்!</p>.<p><strong>- லதாமகன் </strong></p>.<p><span style="color: #993300"><strong>புதிர்</strong> </span></p>.<p>தற்செயலாகத்தான்<br /> பார்த்துக்கொள்கிறோம்<br /> உண்ணுமிடத்தில்<br /> மாடிப் படிகளில்<br /> தேநீர் அருந்துகையில்<br /> இருக்கையின் அருகில்<br /> எதிர்ப்படுகையில்<br /> தற்செயலாகத்தான்<br /> நொடிக்கு ஒரு முறை<br /> எனக்கு உன் நினைவு<br /> வருவதைப்போல<br /> தற்செயலாகத்தான்!</p>.<p><strong>- ராகவ்</strong></p>
<p><span style="color: #993300"><strong>வீடெனப்படுவது... </strong></span></p>.<p>அதிகாலை<br /> ஊரிலிருந்து<br /> தவிர்க்க முடியாத தகவலொன்று<br /> கைபேசியில் சொல்லப்பட...<br /> ஆற அமர யோசித்துப்<br /> பொருத்தமான பொய்யன்றை<br /> ஆபீஸில் சொல்லிவிட்டு<br /> அவசியம் வருமாறு<br /> அவசரமாய் கிளம்பிவிட்டனர்<br /> அப்பா, அம்மா, தங்கை.</p>.<p>எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற<br /> ஆறேழு நாட்களுக்குமான<br /> ஆடைகள், இதர பொருட்களுடன்<br /> ஒட்டிக்கொண்டு<br /> வீடும் சென்றுவிட<br /> என்னுடன் மிச்சம் இருப்பவை<br /> சில சுவர்கள், பொருட்கள்,<br /> சில ஜன்னல்கள், கதவுகள்,<br /> ஃபிரிஜ்ஜில் மிஞ்சிய நேற்றைய மாவு,<br /> இவற்றுடன்<br /> ஹாலில் அமர்ந்து<br /> தம் அடிக்கக் கொஞ்சம் சுதந்திரமும்<br /> நிறைய தனிமையும்!</p>.<p><strong>- கோநா </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>அஞ்சல் செய்யப்படாத கடிதம் </strong></span></p>.<p>ஒளி குறைந்த<br /> முன்னிரவுப் பொழுதொன்றில்<br /> கண்டெடுக்க நேர்ந்தது<br /> அஞ்சல் செய்யப்படாத<br /> என் பழைய கடிதமொன்றை...</p>.<p>எந்த சுவாரஸ்யமும் இல்லை<br /> அதை இப்போது வாசிப்பதில்,<br /> அது என்<br /> சொல்லப்படாத காதலைச் சுமந்திருக்கிறது<br /> என்பதைத் தவிர.</p>.<p>மீண்டும் அதைத்<br /> தொலைக்க முடியவில்லை என்னால்<br /> முகம் தெரியாதவர்களால்<br /> வாசிக்கப்பட்டு<br /> விமர்சிக்கப்படும் என்பதால்.</p>.<p>அழிக்கவும் மனதில்லை அதனை<br /> என் சொல்லாத காதலின்<br /> ஒரே சாட்சியாக<br /> இருக்கிறது என்பதால்.</p>.<p>இறுதியில் அதை<br /> நானே இருத்திக்கொள்வதென முடிவானது<br /> அதிகபட்சமாய் எந்த நம்பிக்கையையும்<br /> என்னில் அது உண்டுபண்ணாவிடினும்<br /> குறைந்தபட்சமாய்<br /> இதே போன்றதொரு<br /> அஞ்சல் செய்யப்படாத கடிதம்<br /> அவளிடமும்<br /> இருக்கக் கூடும் இன்னும்<br /> என்ற நம்பிக்கையை<br /> உண்டுபண்ணியதற்காகவாவது!</p>.<p><strong>- பெ.பார்த்திபன் </strong></p>.<p><span style="color: #003300"><strong>பயணக் கட்டுரை </strong></span></p>.<p>நாலு பத்து வண்டிக்கு<br /> நாலு மணிக்குக் கிளம்பினால்<br /> போதாதா என்றாள்.<br /> நாலு பத்துக்கு வந்தபோது<br /> நாலு பத்து வண்டி<br /> நாலு மணிக்கே போனதாம்.<br /> நாலு மணி வண்டியை<br /> நாலு பத்து வண்டியாகச் சொன்னேன் என<br /> அஞ்சு முப்பது வரையில்<br /> பேசிக்கொண்டு இருந்தாள்.<br /> அஞ்சு நாப்பது வண்டியை<br /> அஞ்சு முப்பதுக்குத்தான் இனி<br /> வண்டியெனச் சொல்ல<br /> அனுபவம்தான் கற்றுத் தந்தது.<br /> போக,<br /> அஞ்சு முப்பதிலிருந்து அஞ்சு நாப்பது வரையில்<br /> இவள் பேசாமல் இருந்ததும்<br /> அஞ்சு நாப்பது வண்டி அஞ்சு நாப்பதுக்கே வந்ததும்<br /> ஆச்சர்யமாக வேறு இருந்தது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #003300"><strong>விட்டு விடுங்கள்! </strong></span></p>.<p>கவிதை<br /> எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?<br /> கதை<br /> எப்படி வாசிக்க வேண்டும் தெரியுமா?<br /> இலக்கிய அனுபவம்<br /> என்றால் என்ன தெரியுமா?<br /> ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்<br /> என்னைக் கொஞ்சம்<br /> தனியே வாசிக்க விடுங்கள்!</p>.<p><strong>- லதாமகன் </strong></p>.<p><span style="color: #993300"><strong>புதிர்</strong> </span></p>.<p>தற்செயலாகத்தான்<br /> பார்த்துக்கொள்கிறோம்<br /> உண்ணுமிடத்தில்<br /> மாடிப் படிகளில்<br /> தேநீர் அருந்துகையில்<br /> இருக்கையின் அருகில்<br /> எதிர்ப்படுகையில்<br /> தற்செயலாகத்தான்<br /> நொடிக்கு ஒரு முறை<br /> எனக்கு உன் நினைவு<br /> வருவதைப்போல<br /> தற்செயலாகத்தான்!</p>.<p><strong>- ராகவ்</strong></p>