<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>உயில்மொழி </strong></span></p>.<p> <strong>எ</strong>ன்னுயிர்<br /> பிரியும் வேளையில்<br /> தலைமாட்டிலும்<br /> கால்மாட்டிலும்<br /> நின்றவர்கள்<br /> நீங்கள்தானா?</p>.<p> இமைகளை<br /> மூடிவிட்டது<br /> எந்த விரல்கள்?</p>.<p> நாடிக் கட்டுக்காய்<br /> கிழிக்கப்பட்ட துணி<br /> எவருடையது?</p>.<p> அசுத்தங்கள் நீக்கி<br /> என் பிரேதத்தைக்<br /> குளிப்பாட்டி<br /> கபன் பொதிந்தவர்கள்<br /> யாரெல்லாம்?</p>.<p> வியர்வை சிந்த<br /> எனக்கான<br /> கபர் குழியை<br /> வெட்டியவர்கள் எவர்?</p>.<p> என் ஜனாஸாவைச்<br /> சுமந்து சென்ற<br /> தோள்கள்<br /> எவருடையவை?</p>.<p> என் பிரிவிற்காய்<br /> கண்ணீர் வழிந்த<br /> கன்னங்கள் எத்தனை?</p>.<p> என் வாழ்காலத்தில்<br /> உங்களைக் கடக்க நேர்ந்த<br /> பொழுதுகளில்<br /> உங்களுக்காகப்<br /> புன்னகைத்திருக்கின்றேனா<br /> நான்?</p>.<p><strong>- வி.எஸ்.முஹம்மது அமீன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>நாராய்... நாராய்! செங்கால் நாராய்! </strong></span></p>.<p> <strong>நா</strong>ராய்! நாராய்! செங்கால் நாராய்!<br /> பனங்கிழங்குகளைப் பிளந்தன்ன<br /> அலகுடையோய்! நாராய்!</p>.<p> அந்திவேளையில் தென்திசை நோக்கி<br /> நீ செல்லும் வழியில்<br /> குன்றம் தாண்டியதும்<br /> இலைகள் உதிர்ந்த<br /> பூவரச மரமிருக்கும்;<br /> அதனருகே -<br /> கூரைகள் பிரிந்த குடிசை வாசலில்<br /> அரசாங்கம் தந்த<br /> இலவசச் சேலையுடுத்தி<br /> பாலுக்கு அழுதிடும்<br /> பச்சைக் குழந்தையை<br /> இடுப்பில் ஏந்திக்கொண்டு நிற்பாள்<br /> பூவேறாத கார்குழலி ஒருத்தி.</p>.<p> கரைதேடும் கட்டுமரம்போல<br /> அழுதிடும் குழந்தையிடம்<br /> ''இதோ அப்பா வந்திடுவார்'' என்று<br /> ஆறுதல் சொல்லியபடி<br /> கணவன் வரும் வழிபார்த்து நிற்பாள்.<br /> அவளிடம் போய்ச் சொல்வாய்:<br /> ''உனது கணவன் டாஸ்மாக் சரக்கை<br /> மிதமிஞ்சிக் குடித்துவிட்டு<br /> மண்ணோடு புரண்டு<br /> மாரியம்மன் தெப்பக்குளம் அருகே<br /> மயங்கிக்கிடக்கிறான்'' என்று.</p>.<p><strong>- முத்து நாடன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>அந்த நாட்கள் </strong></span></p>.<p><strong>அ</strong>ந்த மூன்று நாட்களில்<br /> கோயிலுக்குள் செல்வது<br /> தீட்டாகவே இருக்கட்டும்...<br /> எந்த மூன்று நாட்களில்<br /> பெண் தெய்வங்கள்<br /> கோயிலுக்குள் இருக்காதெனக்<br /> கொஞ்சம் சொல்லுங்களேன்?</p>.<p><strong>- க.பொன்ராஜ் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>எப்படி இருந்திருக்கக் கூடும்? </strong></span></p>.<p> <strong>ஜ</strong>ன்னலோரப் புறாக்களின்<br /> சிறகடிப்போடு<br /> புலர்ந்த அந்தக் காலைப் பொழுது.</p>.<p> முதல் அழைப்பிலேயே கண் விழித்து<br /> முகம் பார்த்துச் சிரித்த மகன்.</p>.<p> பையனை ஏற்றிவிட்டுவந்த<br /> பள்ளிக்கூடப் பேருந்தில்<br /> சிரித்த முகங்களோடு<br /> சீருடைச் செல்லங்கள்.</p>.<p> எப்போதும்போலன்றி இவளும்<br /> இன்முகம்கொண்டொரு சிரிப்புடன்.</p>.<p> வழியெங்கும் நெரிசலின்றி வரவேற்ற<br /> வழக்கமான சாலை.</p>.<p> அவனது அலுவலக<br /> அடுக்குமாடிக் கட்டடத்தின்</p>.<p>அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த<br /> இவன் வயது இளைஞன் ஒருவனின்<br /> மாரடைப்புபற்றிய செய்தி<br /> வந்து சேர்ந்ததும்<br /> அந்த ஒரு காலைப்பொழுதில்தான்.</p>.<p> எப்படி இருந்திருக்கக் கூடும்<br /> அவனின் காலைப்பொழுது?</p>.<p><strong>- செல்வராஜ் ஜெகதீசன்</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>உயில்மொழி </strong></span></p>.<p> <strong>எ</strong>ன்னுயிர்<br /> பிரியும் வேளையில்<br /> தலைமாட்டிலும்<br /> கால்மாட்டிலும்<br /> நின்றவர்கள்<br /> நீங்கள்தானா?</p>.<p> இமைகளை<br /> மூடிவிட்டது<br /> எந்த விரல்கள்?</p>.<p> நாடிக் கட்டுக்காய்<br /> கிழிக்கப்பட்ட துணி<br /> எவருடையது?</p>.<p> அசுத்தங்கள் நீக்கி<br /> என் பிரேதத்தைக்<br /> குளிப்பாட்டி<br /> கபன் பொதிந்தவர்கள்<br /> யாரெல்லாம்?</p>.<p> வியர்வை சிந்த<br /> எனக்கான<br /> கபர் குழியை<br /> வெட்டியவர்கள் எவர்?</p>.<p> என் ஜனாஸாவைச்<br /> சுமந்து சென்ற<br /> தோள்கள்<br /> எவருடையவை?</p>.<p> என் பிரிவிற்காய்<br /> கண்ணீர் வழிந்த<br /> கன்னங்கள் எத்தனை?</p>.<p> என் வாழ்காலத்தில்<br /> உங்களைக் கடக்க நேர்ந்த<br /> பொழுதுகளில்<br /> உங்களுக்காகப்<br /> புன்னகைத்திருக்கின்றேனா<br /> நான்?</p>.<p><strong>- வி.எஸ்.முஹம்மது அமீன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>நாராய்... நாராய்! செங்கால் நாராய்! </strong></span></p>.<p> <strong>நா</strong>ராய்! நாராய்! செங்கால் நாராய்!<br /> பனங்கிழங்குகளைப் பிளந்தன்ன<br /> அலகுடையோய்! நாராய்!</p>.<p> அந்திவேளையில் தென்திசை நோக்கி<br /> நீ செல்லும் வழியில்<br /> குன்றம் தாண்டியதும்<br /> இலைகள் உதிர்ந்த<br /> பூவரச மரமிருக்கும்;<br /> அதனருகே -<br /> கூரைகள் பிரிந்த குடிசை வாசலில்<br /> அரசாங்கம் தந்த<br /> இலவசச் சேலையுடுத்தி<br /> பாலுக்கு அழுதிடும்<br /> பச்சைக் குழந்தையை<br /> இடுப்பில் ஏந்திக்கொண்டு நிற்பாள்<br /> பூவேறாத கார்குழலி ஒருத்தி.</p>.<p> கரைதேடும் கட்டுமரம்போல<br /> அழுதிடும் குழந்தையிடம்<br /> ''இதோ அப்பா வந்திடுவார்'' என்று<br /> ஆறுதல் சொல்லியபடி<br /> கணவன் வரும் வழிபார்த்து நிற்பாள்.<br /> அவளிடம் போய்ச் சொல்வாய்:<br /> ''உனது கணவன் டாஸ்மாக் சரக்கை<br /> மிதமிஞ்சிக் குடித்துவிட்டு<br /> மண்ணோடு புரண்டு<br /> மாரியம்மன் தெப்பக்குளம் அருகே<br /> மயங்கிக்கிடக்கிறான்'' என்று.</p>.<p><strong>- முத்து நாடன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>அந்த நாட்கள் </strong></span></p>.<p><strong>அ</strong>ந்த மூன்று நாட்களில்<br /> கோயிலுக்குள் செல்வது<br /> தீட்டாகவே இருக்கட்டும்...<br /> எந்த மூன்று நாட்களில்<br /> பெண் தெய்வங்கள்<br /> கோயிலுக்குள் இருக்காதெனக்<br /> கொஞ்சம் சொல்லுங்களேன்?</p>.<p><strong>- க.பொன்ராஜ் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>எப்படி இருந்திருக்கக் கூடும்? </strong></span></p>.<p> <strong>ஜ</strong>ன்னலோரப் புறாக்களின்<br /> சிறகடிப்போடு<br /> புலர்ந்த அந்தக் காலைப் பொழுது.</p>.<p> முதல் அழைப்பிலேயே கண் விழித்து<br /> முகம் பார்த்துச் சிரித்த மகன்.</p>.<p> பையனை ஏற்றிவிட்டுவந்த<br /> பள்ளிக்கூடப் பேருந்தில்<br /> சிரித்த முகங்களோடு<br /> சீருடைச் செல்லங்கள்.</p>.<p> எப்போதும்போலன்றி இவளும்<br /> இன்முகம்கொண்டொரு சிரிப்புடன்.</p>.<p> வழியெங்கும் நெரிசலின்றி வரவேற்ற<br /> வழக்கமான சாலை.</p>.<p> அவனது அலுவலக<br /> அடுக்குமாடிக் கட்டடத்தின்</p>.<p>அடுத்தொரு மாடியில் நிகழ்ந்த<br /> இவன் வயது இளைஞன் ஒருவனின்<br /> மாரடைப்புபற்றிய செய்தி<br /> வந்து சேர்ந்ததும்<br /> அந்த ஒரு காலைப்பொழுதில்தான்.</p>.<p> எப்படி இருந்திருக்கக் கூடும்<br /> அவனின் காலைப்பொழுது?</p>.<p><strong>- செல்வராஜ் ஜெகதீசன்</strong></p>