<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>மூன்று பூனைக் குட்டிகள் வேண்டி <br /> நானும் நித்யாவும் <br /> நெருக்கமானோம்.</p>.<p>பூனைக் குட்டிகளைப் பிடித்து<br /> மடியில் தூக்கிவைப்பேன் என<br /> நித்யா என்னைச் சுற்றி வந்தாள்.</p>.<p>பூனைக்கு என்ன புவா வேணும்?<br /> பூனைக்கு எப்பப் பசிக்கும்?<br /> பூனை எப்படிப் பாச்சி குடிக்கும்?<br /> அம்மா பூனை எப்ப வெளியே போவும்?<br /> எனக்கும் தெரியாத பதில்களுக்காக<br /> என்னைக் கேள்விகளால் நிரப்பினாள்.</p>.<p>பூனைக் குட்டிகள் வேண்டி<br /> நித்யா என்னை நெருங்கிவர<br /> விரோதத்துடன்<br /> என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது<br /> அம்மா பூனை.</p>.<p>ஒரு சுபமுகூர்த்த வேளையில்<br /> அம்மா பூனையுடன்<br /> குட்டிப் பூனைகள்<br /> வெளியேறின<br /> அறையைவிட்டு.</p>.<p>பூனைக் குட்டிகளைத் தேடிவந்த<br /> நித்யாவுக்கு<br /> சொல்வதற்குப் பதில் இல்லாததால்<br /> பால்மடி புதைத்துக்கொண்டேன்<br /> அவளை ஒரு பூனைக் குட்டியாக்கி.</p>.<p>நித்யா<br /> பூனைக் குட்டிகள்பற்றிய கனவில் இருந்தாள்.<br /> அவளுக்கு<br /> இரண்டு பூனைக் குட்டிகள்<br /> தேவையாயிருந்தன.<br /> ஒன்று அவளுக்கு.<br /> இரண்டாவது அவள் தம்பிக்கு.<br /> தம்பிக்கும் சேர்த்தே<br /> பூனைக் குட்டி கேட்பாள்<br /> எப்பொழுதும்.<br /> பூனைக் குட்டிபற்றிய தீராத ஆர்வமிருந்தாலும்<br /> அம்மா பூனைபற்றிய பயத்திலிருந்தாள்.</p>.<p>அம்மா பூனையை வெளியில் அனுப்ப<br /> என்ன வழி என ஓயாமல் கேட்டாள்.<br /> ரகசியம் புரிந்தது<br /> நித்யாவின் குரலில் வழிவது<br /> அம்மா பூனையாகும் தாகம்.</p>.<p>பூனைக் குட்டிகள்<br /> வெளியேறிய பின்னும்<br /> நித்யா<br /> குட்டிகள் இருந்த இடத்தைத்<br /> தேடி வந்தாள்.<br /> வெள்ள பூன இங்க படுக்கும்.<br /> கருப்புப் பூன அங்க வெளாடும்<br /> பச்ச பூன இங்க குதிக்கும்<br /> அம்மா பூன ஒன்ன மொறைக்கும்<br /> நித்யாவின் வார்த்தைகளில் <br /> ரத்தக் கவுச்சியுடன்<br /> பூனைக் குட்டிகள்<br /> பிறந்து தவழ்கின்றன<br /> மீண்டும் அதே இடத்தில்.</p>.<p>நித்யா<br /> அவள் அப்பாவுடன்<br /> வண்டியில் போகிறாள்.<br /> என்னைப் பார்த்தவுடன்<br /> இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சிரிப்பு.<br /> கண்கள் முழுக்க<br /> பூனைக் குட்டிகள் பற்றிய கேள்விகள்.<br /> நித்யாவுக்கு நினைவில்<br /> நான் என்னவாக இருப்பேன்?<br /> கண் திறவாமல்<br /> அம்மா முலை முட்டும்<br /> சின்னஞ்சிறிய பூனையானேன் நான்.</p>.<p> குட்டிப் பூன எங்க போச்சு?<br /> அம்மா பூன தூக்கிப்போச்சா?<br /> பூனகிட்ட கூட்டிக்கிட்டுப் போறியா?<br /> பூனையைத் தொட்டுப் பார்க்கலாமா?<br /> அம்மா பூனை<br /> குட்டிப் பூனைக்கு<br /> புவா ஊட்டுமா?<br /> மர்மங்கள் விலக்கும்<br /> கேள்விகளால் என்னைத் துளைக்கும்<br /> நித்யாவை உற்றுப் பார்த்தேன்<br /> நித்யாவின் உடல்<br /> ஒரு பூனைக் குட்டியாகிக்கொண்டிருந்தது!</p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>மூன்று பூனைக் குட்டிகள் வேண்டி <br /> நானும் நித்யாவும் <br /> நெருக்கமானோம்.</p>.<p>பூனைக் குட்டிகளைப் பிடித்து<br /> மடியில் தூக்கிவைப்பேன் என<br /> நித்யா என்னைச் சுற்றி வந்தாள்.</p>.<p>பூனைக்கு என்ன புவா வேணும்?<br /> பூனைக்கு எப்பப் பசிக்கும்?<br /> பூனை எப்படிப் பாச்சி குடிக்கும்?<br /> அம்மா பூனை எப்ப வெளியே போவும்?<br /> எனக்கும் தெரியாத பதில்களுக்காக<br /> என்னைக் கேள்விகளால் நிரப்பினாள்.</p>.<p>பூனைக் குட்டிகள் வேண்டி<br /> நித்யா என்னை நெருங்கிவர<br /> விரோதத்துடன்<br /> என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது<br /> அம்மா பூனை.</p>.<p>ஒரு சுபமுகூர்த்த வேளையில்<br /> அம்மா பூனையுடன்<br /> குட்டிப் பூனைகள்<br /> வெளியேறின<br /> அறையைவிட்டு.</p>.<p>பூனைக் குட்டிகளைத் தேடிவந்த<br /> நித்யாவுக்கு<br /> சொல்வதற்குப் பதில் இல்லாததால்<br /> பால்மடி புதைத்துக்கொண்டேன்<br /> அவளை ஒரு பூனைக் குட்டியாக்கி.</p>.<p>நித்யா<br /> பூனைக் குட்டிகள்பற்றிய கனவில் இருந்தாள்.<br /> அவளுக்கு<br /> இரண்டு பூனைக் குட்டிகள்<br /> தேவையாயிருந்தன.<br /> ஒன்று அவளுக்கு.<br /> இரண்டாவது அவள் தம்பிக்கு.<br /> தம்பிக்கும் சேர்த்தே<br /> பூனைக் குட்டி கேட்பாள்<br /> எப்பொழுதும்.<br /> பூனைக் குட்டிபற்றிய தீராத ஆர்வமிருந்தாலும்<br /> அம்மா பூனைபற்றிய பயத்திலிருந்தாள்.</p>.<p>அம்மா பூனையை வெளியில் அனுப்ப<br /> என்ன வழி என ஓயாமல் கேட்டாள்.<br /> ரகசியம் புரிந்தது<br /> நித்யாவின் குரலில் வழிவது<br /> அம்மா பூனையாகும் தாகம்.</p>.<p>பூனைக் குட்டிகள்<br /> வெளியேறிய பின்னும்<br /> நித்யா<br /> குட்டிகள் இருந்த இடத்தைத்<br /> தேடி வந்தாள்.<br /> வெள்ள பூன இங்க படுக்கும்.<br /> கருப்புப் பூன அங்க வெளாடும்<br /> பச்ச பூன இங்க குதிக்கும்<br /> அம்மா பூன ஒன்ன மொறைக்கும்<br /> நித்யாவின் வார்த்தைகளில் <br /> ரத்தக் கவுச்சியுடன்<br /> பூனைக் குட்டிகள்<br /> பிறந்து தவழ்கின்றன<br /> மீண்டும் அதே இடத்தில்.</p>.<p>நித்யா<br /> அவள் அப்பாவுடன்<br /> வண்டியில் போகிறாள்.<br /> என்னைப் பார்த்தவுடன்<br /> இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சிரிப்பு.<br /> கண்கள் முழுக்க<br /> பூனைக் குட்டிகள் பற்றிய கேள்விகள்.<br /> நித்யாவுக்கு நினைவில்<br /> நான் என்னவாக இருப்பேன்?<br /> கண் திறவாமல்<br /> அம்மா முலை முட்டும்<br /> சின்னஞ்சிறிய பூனையானேன் நான்.</p>.<p> குட்டிப் பூன எங்க போச்சு?<br /> அம்மா பூன தூக்கிப்போச்சா?<br /> பூனகிட்ட கூட்டிக்கிட்டுப் போறியா?<br /> பூனையைத் தொட்டுப் பார்க்கலாமா?<br /> அம்மா பூனை<br /> குட்டிப் பூனைக்கு<br /> புவா ஊட்டுமா?<br /> மர்மங்கள் விலக்கும்<br /> கேள்விகளால் என்னைத் துளைக்கும்<br /> நித்யாவை உற்றுப் பார்த்தேன்<br /> நித்யாவின் உடல்<br /> ஒரு பூனைக் குட்டியாகிக்கொண்டிருந்தது!</p>