<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>அலையாடும் பிரார்த்தனைகள்</strong></span></p>.<p> <strong>ரா</strong>மேஸ்வரத்துக்கும்<br /> கச்சத்தீவுக்கும் நடுவில்<br /> வேலப்பன் கைதான செய்தியுடன்<br /> பேரலை ஒன்று கரை மோதியது<br /> கொந்தளித்த குப்பம்<br /> மந்திரி வந்து போகும் சாலையை<br /> வழிமறித்துப் போட்டதும்<br /> வக்கணையில் இரைந்தது வங்கக் கடல்<br /> துக்கத்தில் கதறியழும்<br /> வேலம்மாளின் கண்ணீரைத்<br /> தூண்டிலிடத் தொடங்கின<br /> </p>.<p>தரையிறங்கிய கேமராக்கள்<br /> அயல் தேசக் கடற்காவல்<br /> அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை<br /> அனுசுயா அக்கா சொல்லிச் செல்ல<br /> பாண்டியாடும் நீலவேணியுள்<br /> பிரவேசித்தது அழுகை<br /> கண்களில் கசிந்த கண்ணீரில்<br /> கரைந்தது கடற்கரை<br /> அந்தக் கடற்குப்பத்தில்<br /> நங்கூரமிட்டிருந்த ஐயமும் அதிருப்தியும்<br /> அக்கரை தேசத்தின்<br /> அதிபரையோ அல்லது அமைச்சரையோ<br /> தவிக்கவிட்ட தகவல் இல்லை<br /> உள்ளூர்க்காரனின் உறுத்தல்கூட<br /> ஒரு சில விநாடியுள் உறைந்துபோயிருக்கலாம்<br /> ''சுறாவுக்கு எரச்சியாயிருந்தா<br /> எஞ்சீவன் கெடந்து துடிச்சிருக்காது<br /> சூழ்ச்சிக்காரன் வலையில<br /> சிக்கியாத் தவிக்கணும் பாவி''<br /> வேலம்மாள் வீசிய வாய்ச் சொல்<br /> ஆடாமல் அசையாமல்<br /> நிறுத்திவைத்தது அலைகளை<br /> அவ்வொரு கணம்<br /> வீசிய காற்றின் வேகத்துக்கு<br /> ஈடுகொடுக்க முடியாத மாதா கோயில் மணி<br /> டணீர் டணீரென ஒலிக்கத் துவங்கியதும்<br /> ''இம்மணியோசை<br /> கடல் கடந்து தவமிருக்கும்<br /> கௌதம புத்தரின் காதுகளைத்<br /> துளைக்கச் சொல்லிப் பிரார்த்திப்போம்<br /> வேலப்பனின் விடுதலை வேண்டி<br /> தமிழகத்தின் நம்பிக்கையைச் சமர்ப்பிப்போம்''<br /> என முடித்துக்கொண்டார்<br /> கேமராமேன் வெற்றியுடன் உடனிருந்த<br /> ஹாட் நியூஸ் செய்தியாளர்.</p>.<p><strong>- கொ.மா.கோ.இளங்கோ</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>மலைப் பாதை</strong></span></p>.<p><strong>52</strong> கொண்டை ஊசி வளைவுகள்<br /> நேர்க் கோட்டில் வந்தது<br /> பெயர் தெரியாச் சிறு பறவை.</p>.<p><strong>- ப.உமா மகேஸ்வரி</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>நான் என்ன செய்யட்டும்? </strong></span></p>.<p><strong>பா</strong>வுப் பட்டறையில் அப்பாவுக்கு வேலை<br /> அம்மா வாசலில் பணியாரம் சுட்டு விற்பாள்<br /> அண்ணன் குள்ளனாகப் பிறந்ததால்<br /> பெண் தேடி ஓய்ந்தாகிவிட்டது<br /> அக்காவுக்கும் மாமாவுக்கும்<br /> குடியால் நித்தமும் யுத்தம்<br /> நேற்றுதான் கடிதத்தில் காதல் சொன்னான்<br /> அண்ணனின் தோழன் பாண்டி<br /> அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று<br /> சத்தியமாய் தெரியவில்லை<br /> உடனே மறுத்துவிட்டால்<br /> கொடுத்த கடன் திரும்பக் கேட்டு<br /> அப்பாவை நச்சரிப்பானோ?<br /> குழப்பம்.</p>.<p><strong>- பாசு.ஓவியச் செல்வன்</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?</strong></span></p>.<p><strong>எ</strong>னக்குப்<br /> பட்டம் விட ஆசை<br /> நாய்க்குட்டி பிடிக்கும்<br /> பூனைக்குட்டி கொஞ்சுவேன்<br /> ரசம் சாதம் விருப்பம்<br /> நடனமாடத் துடிப்பேன்<br /> பாட்டுப் பாடித் திரிவேன்<br /> சூரியனை ரசிப்பேன்<br /> மழை வந்தால் நனைவேன்<br /> கொஞ்சினால் சிரிப்பேன்<br /> மிரட்டினால் நடிப்பேன்<br /> புரிந்தால் படிப்பேன் என்று<br /> உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?</p>.<p><strong> - வீரா</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>அலையாடும் பிரார்த்தனைகள்</strong></span></p>.<p> <strong>ரா</strong>மேஸ்வரத்துக்கும்<br /> கச்சத்தீவுக்கும் நடுவில்<br /> வேலப்பன் கைதான செய்தியுடன்<br /> பேரலை ஒன்று கரை மோதியது<br /> கொந்தளித்த குப்பம்<br /> மந்திரி வந்து போகும் சாலையை<br /> வழிமறித்துப் போட்டதும்<br /> வக்கணையில் இரைந்தது வங்கக் கடல்<br /> துக்கத்தில் கதறியழும்<br /> வேலம்மாளின் கண்ணீரைத்<br /> தூண்டிலிடத் தொடங்கின<br /> </p>.<p>தரையிறங்கிய கேமராக்கள்<br /> அயல் தேசக் கடற்காவல்<br /> அப்பாவை அள்ளிக்கொண்டு போனதை<br /> அனுசுயா அக்கா சொல்லிச் செல்ல<br /> பாண்டியாடும் நீலவேணியுள்<br /> பிரவேசித்தது அழுகை<br /> கண்களில் கசிந்த கண்ணீரில்<br /> கரைந்தது கடற்கரை<br /> அந்தக் கடற்குப்பத்தில்<br /> நங்கூரமிட்டிருந்த ஐயமும் அதிருப்தியும்<br /> அக்கரை தேசத்தின்<br /> அதிபரையோ அல்லது அமைச்சரையோ<br /> தவிக்கவிட்ட தகவல் இல்லை<br /> உள்ளூர்க்காரனின் உறுத்தல்கூட<br /> ஒரு சில விநாடியுள் உறைந்துபோயிருக்கலாம்<br /> ''சுறாவுக்கு எரச்சியாயிருந்தா<br /> எஞ்சீவன் கெடந்து துடிச்சிருக்காது<br /> சூழ்ச்சிக்காரன் வலையில<br /> சிக்கியாத் தவிக்கணும் பாவி''<br /> வேலம்மாள் வீசிய வாய்ச் சொல்<br /> ஆடாமல் அசையாமல்<br /> நிறுத்திவைத்தது அலைகளை<br /> அவ்வொரு கணம்<br /> வீசிய காற்றின் வேகத்துக்கு<br /> ஈடுகொடுக்க முடியாத மாதா கோயில் மணி<br /> டணீர் டணீரென ஒலிக்கத் துவங்கியதும்<br /> ''இம்மணியோசை<br /> கடல் கடந்து தவமிருக்கும்<br /> கௌதம புத்தரின் காதுகளைத்<br /> துளைக்கச் சொல்லிப் பிரார்த்திப்போம்<br /> வேலப்பனின் விடுதலை வேண்டி<br /> தமிழகத்தின் நம்பிக்கையைச் சமர்ப்பிப்போம்''<br /> என முடித்துக்கொண்டார்<br /> கேமராமேன் வெற்றியுடன் உடனிருந்த<br /> ஹாட் நியூஸ் செய்தியாளர்.</p>.<p><strong>- கொ.மா.கோ.இளங்கோ</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>மலைப் பாதை</strong></span></p>.<p><strong>52</strong> கொண்டை ஊசி வளைவுகள்<br /> நேர்க் கோட்டில் வந்தது<br /> பெயர் தெரியாச் சிறு பறவை.</p>.<p><strong>- ப.உமா மகேஸ்வரி</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>நான் என்ன செய்யட்டும்? </strong></span></p>.<p><strong>பா</strong>வுப் பட்டறையில் அப்பாவுக்கு வேலை<br /> அம்மா வாசலில் பணியாரம் சுட்டு விற்பாள்<br /> அண்ணன் குள்ளனாகப் பிறந்ததால்<br /> பெண் தேடி ஓய்ந்தாகிவிட்டது<br /> அக்காவுக்கும் மாமாவுக்கும்<br /> குடியால் நித்தமும் யுத்தம்<br /> நேற்றுதான் கடிதத்தில் காதல் சொன்னான்<br /> அண்ணனின் தோழன் பாண்டி<br /> அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று<br /> சத்தியமாய் தெரியவில்லை<br /> உடனே மறுத்துவிட்டால்<br /> கொடுத்த கடன் திரும்பக் கேட்டு<br /> அப்பாவை நச்சரிப்பானோ?<br /> குழப்பம்.</p>.<p><strong>- பாசு.ஓவியச் செல்வன்</strong></p>.<p><span style="color: rgb(153, 51, 102);"><strong>உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?</strong></span></p>.<p><strong>எ</strong>னக்குப்<br /> பட்டம் விட ஆசை<br /> நாய்க்குட்டி பிடிக்கும்<br /> பூனைக்குட்டி கொஞ்சுவேன்<br /> ரசம் சாதம் விருப்பம்<br /> நடனமாடத் துடிப்பேன்<br /> பாட்டுப் பாடித் திரிவேன்<br /> சூரியனை ரசிப்பேன்<br /> மழை வந்தால் நனைவேன்<br /> கொஞ்சினால் சிரிப்பேன்<br /> மிரட்டினால் நடிப்பேன்<br /> புரிந்தால் படிப்பேன் என்று<br /> உங்களுக்குத் தெரியுமா டீச்சர்?</p>.<p><strong> - வீரா</strong></p>