<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>த்தனை தாமதமாகவா<br /> வருவது என ஊடினேன் -<br /> அவனோடு சேர்ந்து இரவும் -<br /> கை பிடித்துக் கெஞ்சுகிறது.</p>.<p>சுடர் விளக்கிருக்கக் கூடாதுதான்;<br /> இரவும் இருக்க வேண்டாமென்றால் -<br /> நாணம் புரிந்த செவிலியாய்<br /> அவளை ஆரத் தழுவுகிறது இரவு.</p>.<p>காதலின் வழியாக நடந்து வந்தவன்தான்<br /> ஆசையின் குதிரைப் பாய்ச்சலில் அவனை<br /> ஏற்றிவிடுவது நீதான் என்றேன்.<br /> அதிகாலையில் ஒரு நடைவண்டியோடு<br /> காத்திருந்தது இரவு.</p>.<p>கூந்தல் முடிக்கும் விரல் நுனியில்<br /> சிக்கிய ஓரிழையெனச் சுருட்டிப்<br /> போடத்தான் ஆசை<br /> அந்த ஊடலை.<br /> மணல் அருவி வெளித் தள்ளும்<br /> கரையான் புற்றைப் போல்<br /> அதுவோ நகக் கண்களெங்கும்!</p>.<p> நீள் கனவுச் சிகையவிழ்த்து<br /> சோம்பல் முறிக்கும்<br /> அதிகாலையென அந்த நினைவு.<br /> நிலம் சுகிக்கும் வெற்றிலைச்<br /> சுவைத்தலென அக்கூடல்.<br /> காமமென்பது தேகங்களின் சேர்க்கைதான்.<br /> சிட்டிகைக் காதல் சேர்ந்தாலோ -<br /> நல்ல சாவும்கூட.</p>.<p>சுனையைச் சூலுற்றிருக்கும்<br /> சுடுமணம் காதல் நமது.<br /> வார்த்தைகள் வேண்டாத<br /> பெருஞ்சுகத்தில் கைகோத்துப்<br /> பாலை கடப்போம் வா.</p>.<p>கை மாற்றினாலும்<br /> கவனிக்காமல்<br /> பாசாங்கித்தாலும்<br /> பாலூட்டத்தான் வேண்டியதிருக்கிறது<br /> காதலுக்கு</p>.<p>கால் விரல் நீவிச் சொடுக்கெடுக்கிறது காதல்<br /> அண்ணாந்து பார்த்தபடி காத்திருக்கிறது காமம்.</p>.<p>தேடுதலின் சுகத்தில் முக்கி முக்கித் திளைக்கிறது காதல்<br /> ஒரே மூச்சில் முங்கிக் குளித்துக் கரையேறுகிறது காமம்.</p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>த்தனை தாமதமாகவா<br /> வருவது என ஊடினேன் -<br /> அவனோடு சேர்ந்து இரவும் -<br /> கை பிடித்துக் கெஞ்சுகிறது.</p>.<p>சுடர் விளக்கிருக்கக் கூடாதுதான்;<br /> இரவும் இருக்க வேண்டாமென்றால் -<br /> நாணம் புரிந்த செவிலியாய்<br /> அவளை ஆரத் தழுவுகிறது இரவு.</p>.<p>காதலின் வழியாக நடந்து வந்தவன்தான்<br /> ஆசையின் குதிரைப் பாய்ச்சலில் அவனை<br /> ஏற்றிவிடுவது நீதான் என்றேன்.<br /> அதிகாலையில் ஒரு நடைவண்டியோடு<br /> காத்திருந்தது இரவு.</p>.<p>கூந்தல் முடிக்கும் விரல் நுனியில்<br /> சிக்கிய ஓரிழையெனச் சுருட்டிப்<br /> போடத்தான் ஆசை<br /> அந்த ஊடலை.<br /> மணல் அருவி வெளித் தள்ளும்<br /> கரையான் புற்றைப் போல்<br /> அதுவோ நகக் கண்களெங்கும்!</p>.<p> நீள் கனவுச் சிகையவிழ்த்து<br /> சோம்பல் முறிக்கும்<br /> அதிகாலையென அந்த நினைவு.<br /> நிலம் சுகிக்கும் வெற்றிலைச்<br /> சுவைத்தலென அக்கூடல்.<br /> காமமென்பது தேகங்களின் சேர்க்கைதான்.<br /> சிட்டிகைக் காதல் சேர்ந்தாலோ -<br /> நல்ல சாவும்கூட.</p>.<p>சுனையைச் சூலுற்றிருக்கும்<br /> சுடுமணம் காதல் நமது.<br /> வார்த்தைகள் வேண்டாத<br /> பெருஞ்சுகத்தில் கைகோத்துப்<br /> பாலை கடப்போம் வா.</p>.<p>கை மாற்றினாலும்<br /> கவனிக்காமல்<br /> பாசாங்கித்தாலும்<br /> பாலூட்டத்தான் வேண்டியதிருக்கிறது<br /> காதலுக்கு</p>.<p>கால் விரல் நீவிச் சொடுக்கெடுக்கிறது காதல்<br /> அண்ணாந்து பார்த்தபடி காத்திருக்கிறது காமம்.</p>.<p>தேடுதலின் சுகத்தில் முக்கி முக்கித் திளைக்கிறது காதல்<br /> ஒரே மூச்சில் முங்கிக் குளித்துக் கரையேறுகிறது காமம்.</p>