<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>அ</strong>வள் வண்ண நட்சத்திரங்களின்<br /> எஜமானி<br /> இன்னும் திறக்கப்படாத கடை ஓரத்தில்<br /> சாத்திவைத்திருந்த<br /> ஒட்டுப்போட்ட மேசையை நிமிர்த்தினாள்.<br /> காலொடிந்த அதற்கு<br /> கற்கால் பொறுத்திச் சமன் செய்து<br /> கடைவிரித்தாள்.<br /> நீர் தெளித்துப் பரப்பிய வாழையிலையின்<br /> மரகத வெளிச்சத்தில்<br /> கண்கள் கூசிய சூரியனோ<br /> மெள்ள மெள்ள மேகங்களை நகர்த்தி<br /> இமைத்தாள்.<br /> சிறு கூடையைக் கவிழ்த்து<br /> ஒரு மல்லிகை பௌர்ணமி செய்தாள்.<br /> அந்தி நிலவிலிருந்து உருவிய<br /> </p>.<p>அரும்பு நாகத்தைச் சுழற்றிவைத்தாள்.<br /> விரித்து நிறுத்திய குடை<br /> ஒரு குட்டிப் பிரபஞ்சமாகிக் குளிர் பரப்ப<br /> மேலும் நட்சத்திரங்களைக் குவித்தாள்.<br /> எப்படிப்பட்ட பூக்காரிக்கும்<br /> எப்படியோ ஓர் அழகு மிளிரப்<br /> பணித்திருக்கிறது இயற்கை<br /> தொடுத்த நட்சத்திரத் தோரணம் அளக்க<br /> சற்று நீளமான வரம்பெற்றிருந்தன<br /> முழங்கைகள்<br /> அவ்வப்போது தூவானமாகும் விரல்களால்<br /> ஒவ்வொரு பூவாய்ச் சுருக்கிட்டு<br /> புன்னகைகளை உயிரூட்டினாள்<br /> வாசனைகளின் நந்தகுமாரி.<br /> வந்து போவோரின் கைகளுக்குள்<br /> அவள் கொஞ்சம் வானத்தையும்<br /> கொஞ்சம் அழகையும்<br /> கொஞ்சம் வெளிச்சத்தையும்<br /> கொடுத்தனுப்புகிறாள்.<br /> இரவு கவிழ்ந்து<br /> மின் பூக்கள் பூத்தபோது<br /> தன் பூக்கள் வெளிச்சத்திலேயே<br /> பிரகாசித்திருந்தாள்<br /> பழையபடி மூடிய கடையோரம்<br /> தன் வனத்தையும் வானத்தையும்<br /> ஒதுக்கிவைத்துவிட்டு<br /> இருப்புகளைப் பார்த்தபோது<br /> அப்படி ஓர் கனத்த இருள் அவளைக்<br /> கசக்க ஆரம்பித்தது.</p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>அ</strong>வள் வண்ண நட்சத்திரங்களின்<br /> எஜமானி<br /> இன்னும் திறக்கப்படாத கடை ஓரத்தில்<br /> சாத்திவைத்திருந்த<br /> ஒட்டுப்போட்ட மேசையை நிமிர்த்தினாள்.<br /> காலொடிந்த அதற்கு<br /> கற்கால் பொறுத்திச் சமன் செய்து<br /> கடைவிரித்தாள்.<br /> நீர் தெளித்துப் பரப்பிய வாழையிலையின்<br /> மரகத வெளிச்சத்தில்<br /> கண்கள் கூசிய சூரியனோ<br /> மெள்ள மெள்ள மேகங்களை நகர்த்தி<br /> இமைத்தாள்.<br /> சிறு கூடையைக் கவிழ்த்து<br /> ஒரு மல்லிகை பௌர்ணமி செய்தாள்.<br /> அந்தி நிலவிலிருந்து உருவிய<br /> </p>.<p>அரும்பு நாகத்தைச் சுழற்றிவைத்தாள்.<br /> விரித்து நிறுத்திய குடை<br /> ஒரு குட்டிப் பிரபஞ்சமாகிக் குளிர் பரப்ப<br /> மேலும் நட்சத்திரங்களைக் குவித்தாள்.<br /> எப்படிப்பட்ட பூக்காரிக்கும்<br /> எப்படியோ ஓர் அழகு மிளிரப்<br /> பணித்திருக்கிறது இயற்கை<br /> தொடுத்த நட்சத்திரத் தோரணம் அளக்க<br /> சற்று நீளமான வரம்பெற்றிருந்தன<br /> முழங்கைகள்<br /> அவ்வப்போது தூவானமாகும் விரல்களால்<br /> ஒவ்வொரு பூவாய்ச் சுருக்கிட்டு<br /> புன்னகைகளை உயிரூட்டினாள்<br /> வாசனைகளின் நந்தகுமாரி.<br /> வந்து போவோரின் கைகளுக்குள்<br /> அவள் கொஞ்சம் வானத்தையும்<br /> கொஞ்சம் அழகையும்<br /> கொஞ்சம் வெளிச்சத்தையும்<br /> கொடுத்தனுப்புகிறாள்.<br /> இரவு கவிழ்ந்து<br /> மின் பூக்கள் பூத்தபோது<br /> தன் பூக்கள் வெளிச்சத்திலேயே<br /> பிரகாசித்திருந்தாள்<br /> பழையபடி மூடிய கடையோரம்<br /> தன் வனத்தையும் வானத்தையும்<br /> ஒதுக்கிவைத்துவிட்டு<br /> இருப்புகளைப் பார்த்தபோது<br /> அப்படி ஓர் கனத்த இருள் அவளைக்<br /> கசக்க ஆரம்பித்தது.</p>