<p><strong>இ</strong>து வானத்தின் சுமையைக் கடலறிதல்</p>.<p><strong>ம</strong>ழை ஓய்ந்த பிறகுதான் பார்க்கக் கிடைத்தது<br /> வட்டங்களற்ற வட்டமாய் குளத்தை</p>.<p><strong>எ</strong>ல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய<br /> எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்<br /> இலை நுனியில் மழைத் துளி</p>.<p><strong>அ</strong>ப்போது பார்க்கிற முகம்<br /> எப்போதும் பார்க்கிற முகம் இல்லை</p>.<p><strong>மா</strong>ர்புப் புற்களில் விரல்கள் நுழைத்து<br /> இறுக்கிய தருணத்தில்<br /> தெரிந்துகொண்டேன் எனக்கான மதிப்பெண்</p>.<p><strong>இ</strong>ரவு முடிந்த விடியலில்<br /> எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்<br /> எல்லோரையும்</p>.<p><strong>அ</strong>டி வயிற்றில் தலை சாய்த்தல் சுகம்<br /> தலை வருடல் வாய்த்தல் சுகமோ சுகம்</p>.<p><strong>அ</strong>ந்த மூன்று நாட்களில் நீ தாய்</p>.<p><strong>நா</strong>ன் நீயாகி நீ நானாகி நுழைந்து<br /> நீ நீயாக நான் நானாக<br /> வெளியேறினோம்</p>.<p><strong>ப</strong>யன்படத்தான் செய்கிறது<br /> தும்பி பிடித்த அனுபவம்!</p>
<p><strong>இ</strong>து வானத்தின் சுமையைக் கடலறிதல்</p>.<p><strong>ம</strong>ழை ஓய்ந்த பிறகுதான் பார்க்கக் கிடைத்தது<br /> வட்டங்களற்ற வட்டமாய் குளத்தை</p>.<p><strong>எ</strong>ல்லாக் கிளைகளிலும் ஊர்ந்து திரும்பிய<br /> எறும்புக்குக் கிடைத்தது கடைசியாய்<br /> இலை நுனியில் மழைத் துளி</p>.<p><strong>அ</strong>ப்போது பார்க்கிற முகம்<br /> எப்போதும் பார்க்கிற முகம் இல்லை</p>.<p><strong>மா</strong>ர்புப் புற்களில் விரல்கள் நுழைத்து<br /> இறுக்கிய தருணத்தில்<br /> தெரிந்துகொண்டேன் எனக்கான மதிப்பெண்</p>.<p><strong>இ</strong>ரவு முடிந்த விடியலில்<br /> எப்படித்தான் சந்திக்கிறார்களோ மணமக்கள்<br /> எல்லோரையும்</p>.<p><strong>அ</strong>டி வயிற்றில் தலை சாய்த்தல் சுகம்<br /> தலை வருடல் வாய்த்தல் சுகமோ சுகம்</p>.<p><strong>அ</strong>ந்த மூன்று நாட்களில் நீ தாய்</p>.<p><strong>நா</strong>ன் நீயாகி நீ நானாகி நுழைந்து<br /> நீ நீயாக நான் நானாக<br /> வெளியேறினோம்</p>.<p><strong>ப</strong>யன்படத்தான் செய்கிறது<br /> தும்பி பிடித்த அனுபவம்!</p>