<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> ப</strong>.தினோரு மணிக்கு மட்டுமே . வெளியே வர வேண்டும்.<p>காலையில் ஒரு முறை<br /> மத்தியானம் ஒருமுறை<br /> குழாயில் தண்ணீர் வரும்</p>.<p>வேளை தப்பி<br /> வெளியே வருபவர்கள்<br /> மைதானம் பெருக்க வேண்டும்</p>.<p>கடும் விதிகளை அறியாமல்<br /> வயிறு பிசையும்</p>.<p>உள்ளாடை நனைந்து<br /> ஈரம் பரவும்</p>.<p>உள்ள யாரு, வெளிய வா<br /> உரத்து ஒலிக்கும்<br /> அதிகாரக் குரலுக்குப் பயந்து<br /> பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்</p>.<p>தண்ணீர் போகாமல்<br /> வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன<br /> நாப்கின்களால் நிறையும்<br /> கழிப்பறை பீங்கான்கள்.</p>.<p><strong>தி</strong>னம் பத்து பேர்<br /> அந்த நேரத்துக்குப்<br /> போக மாட்டேன்றீங்க</p>.<p>என்ன சொன்னாலும்<br /> உங்க இஷ்டத்துக்குத்தான்<br /> போவீங்க<br /> பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது<br /> அதிகாரத்தின் குரல்</p>.<p>கூச்சம் தொலைக்கலாம்<br /> நின்று மாற்றவாவது<br /> இடம் வேண்டுமல்லவா <br /> கழிப்பறையில்.</p>.<p>மாசத்துக்கு<br /> மூணு, நாலு நாள்<br /> லீவு எடுத்தா என்ன பண்றது?</p>.<p>பதில் எதிர்பார்க்காமல்<br /> ஒலிக்கும் கேள்வி<br /> அறை முழுதும் பரவும்</p>.<p>வெட்கம் பூசிய சிரிப்புகளும்<br /> நமுட்டுப் புன்னகைகளும்<br /> வலி தோய்ந்த மௌனங்களும்<br /> ஆங்காங்கு எழும்<br /> கொடுக்குள்ள விலங்கொன்று<br /> விஷம் இறக்கிய மகிழ்வில்<br /> இடம் நகரும்.</p>.<p>அங்க நின்னு பேசின<br /> இங்க நின்னு பேசினன்னு<br /> பேச்சு வந்தது<br /> படிச்சது போதும்னு<br /> சோறாக்க வேண்டியதுதான்</p>.<p>அங்க பார்த்தேன்<br /> இங்க பார்த்தேன்<br /> இப்படித் தொட்டேன்<br /> அப்படித் தொட்டேன்னு<br /> யார்கிட்டயாவது சொன்ன<br /> பள்ளிக்கூடம் வர முடியாது</p>.<p>காலையில சீக்கிரம் வரணும்<br /> சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்<br /> படிக்கிறேன்னு திமிரா<br /> உங்கம்மாகிட்ட சொன்னா<br /> வீட்டவிட்டு வெளிய வர முடியாது<br /> சொல்றபடி நடந்துக்க</p>.<p>இதெல்லாம் படிக்க வரலன்னு<br /> யார் அழுதா<br /> ஏறிக்கிட்டு நின்ன இடத்துல<br /> நிக்குது பாரு<br /> எல்லாம் ஜோடி ஜோடியா<br /> இந்த வயசுல</p>.<p>தவறாமல் படித்துத்<br /> தொலைக்க வேண்டியிருக்கிறது<br /> மாதராய்ப் பிறந்திடவே நல்ல<br /> மாதவம் செய்திட வேண்டுமம்மா. </p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> கட்டுன ஆளத் தவிர<br /> ஏறெடுத்துப் பார்க்க முடியுமா<br /> அப்ப ஏது இந்த கசமுசால்லாம்</p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> காலேஜ் படிக்கும்போதுதான்<br /> கண்ணயே நிமிரவிடுவோம்</p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> 2 படிக்கும்போதுதான்<br /> அதுகூட ஒண்ணு ரெண்டுதான்<br /> </p>.<p>இப்ப காலம் கெட்டுப்போச்சு<br /> எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்<br /> ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு</p>.<p>எல்லாக் காலத்திலும்<br /> கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்<br /> ஆறு வயதுக் குழந்தை<br /> பலாத்கார வழக்கில்.</p>.<p> முதல் ரத்தம் பார்த்துக்<br /> கலங்கி<br /> பாதி வகுப்பில் வெளியேறும்<br /> பெண்<br /> ஒரு செவிலித் தாய்க்கான<br /> பிரியத்தை விட்டுச் செல்கிறாள்<br /> தன் வகுப்பறையிடம்!</p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> ப</strong>.தினோரு மணிக்கு மட்டுமே . வெளியே வர வேண்டும்.<p>காலையில் ஒரு முறை<br /> மத்தியானம் ஒருமுறை<br /> குழாயில் தண்ணீர் வரும்</p>.<p>வேளை தப்பி<br /> வெளியே வருபவர்கள்<br /> மைதானம் பெருக்க வேண்டும்</p>.<p>கடும் விதிகளை அறியாமல்<br /> வயிறு பிசையும்</p>.<p>உள்ளாடை நனைந்து<br /> ஈரம் பரவும்</p>.<p>உள்ள யாரு, வெளிய வா<br /> உரத்து ஒலிக்கும்<br /> அதிகாரக் குரலுக்குப் பயந்து<br /> பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்</p>.<p>தண்ணீர் போகாமல்<br /> வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன<br /> நாப்கின்களால் நிறையும்<br /> கழிப்பறை பீங்கான்கள்.</p>.<p><strong>தி</strong>னம் பத்து பேர்<br /> அந்த நேரத்துக்குப்<br /> போக மாட்டேன்றீங்க</p>.<p>என்ன சொன்னாலும்<br /> உங்க இஷ்டத்துக்குத்தான்<br /> போவீங்க<br /> பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது<br /> அதிகாரத்தின் குரல்</p>.<p>கூச்சம் தொலைக்கலாம்<br /> நின்று மாற்றவாவது<br /> இடம் வேண்டுமல்லவா <br /> கழிப்பறையில்.</p>.<p>மாசத்துக்கு<br /> மூணு, நாலு நாள்<br /> லீவு எடுத்தா என்ன பண்றது?</p>.<p>பதில் எதிர்பார்க்காமல்<br /> ஒலிக்கும் கேள்வி<br /> அறை முழுதும் பரவும்</p>.<p>வெட்கம் பூசிய சிரிப்புகளும்<br /> நமுட்டுப் புன்னகைகளும்<br /> வலி தோய்ந்த மௌனங்களும்<br /> ஆங்காங்கு எழும்<br /> கொடுக்குள்ள விலங்கொன்று<br /> விஷம் இறக்கிய மகிழ்வில்<br /> இடம் நகரும்.</p>.<p>அங்க நின்னு பேசின<br /> இங்க நின்னு பேசினன்னு<br /> பேச்சு வந்தது<br /> படிச்சது போதும்னு<br /> சோறாக்க வேண்டியதுதான்</p>.<p>அங்க பார்த்தேன்<br /> இங்க பார்த்தேன்<br /> இப்படித் தொட்டேன்<br /> அப்படித் தொட்டேன்னு<br /> யார்கிட்டயாவது சொன்ன<br /> பள்ளிக்கூடம் வர முடியாது</p>.<p>காலையில சீக்கிரம் வரணும்<br /> சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்<br /> படிக்கிறேன்னு திமிரா<br /> உங்கம்மாகிட்ட சொன்னா<br /> வீட்டவிட்டு வெளிய வர முடியாது<br /> சொல்றபடி நடந்துக்க</p>.<p>இதெல்லாம் படிக்க வரலன்னு<br /> யார் அழுதா<br /> ஏறிக்கிட்டு நின்ன இடத்துல<br /> நிக்குது பாரு<br /> எல்லாம் ஜோடி ஜோடியா<br /> இந்த வயசுல</p>.<p>தவறாமல் படித்துத்<br /> தொலைக்க வேண்டியிருக்கிறது<br /> மாதராய்ப் பிறந்திடவே நல்ல<br /> மாதவம் செய்திட வேண்டுமம்மா. </p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> கட்டுன ஆளத் தவிர<br /> ஏறெடுத்துப் பார்க்க முடியுமா<br /> அப்ப ஏது இந்த கசமுசால்லாம்</p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> காலேஜ் படிக்கும்போதுதான்<br /> கண்ணயே நிமிரவிடுவோம்</p>.<p>எங்க காலத்துல எல்லாம்<br /> 2 படிக்கும்போதுதான்<br /> அதுகூட ஒண்ணு ரெண்டுதான்<br /> </p>.<p>இப்ப காலம் கெட்டுப்போச்சு<br /> எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்<br /> ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு</p>.<p>எல்லாக் காலத்திலும்<br /> கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்<br /> ஆறு வயதுக் குழந்தை<br /> பலாத்கார வழக்கில்.</p>.<p> முதல் ரத்தம் பார்த்துக்<br /> கலங்கி<br /> பாதி வகுப்பில் வெளியேறும்<br /> பெண்<br /> ஒரு செவிலித் தாய்க்கான<br /> பிரியத்தை விட்டுச் செல்கிறாள்<br /> தன் வகுப்பறையிடம்!</p>