<p><strong>அ</strong>ழகான துள்ளல் பாடல் ஒன்றுக்கு <br /> முழுமையாய் ஆடி முடித்து வியர்வை உதிர்த்த உடல்களை <br /> குளிக்கவைத்த பிறகு பேசவைத்துப் பாருங்கள் <br /> கேட்கலாம் இசை</p>.<p><strong>அ</strong>தற்குப் பிறகும் விடுகிறானா பார்... பழம் நறுக்கிக் கொடுத்து<br /> பச்சைத் தேநீர் கொடுத்து<br /> கால் விரல்களில் சொடுக்கெடுத்துப் படுத்துகிறான்</p>.<p><strong>க</strong>ண்கள் திறக்காதே முழுமையாகப் பார்க்கலாம் திருடப்படுவதை</p>.<p><strong>ப</strong>த்து நத்தைகள் நடந்து காட்டிய பாதையைக் கடந்தது<br /> ஆமையின் மீது எறும்பு</p>.<p><strong>ஆ</strong>றடிச் சாலையில் ஆயுள் பயணம்</p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>பூ</strong>ச்செடிதான்<br /> ஒரே ஒரு வேறுபாடு<br /> இது வருடிக் கொடுத்த பிறகு தண்ணீர் ஊற்றுதல்</p>.<p><strong>ஒ</strong>ற்றை இசைப் பலகையில் எத்தனை இசைக் கருவிகள்</p>.<p><strong>கை</strong>பேசியில் காதல் கொள் காமம் கொல்</p>.<p><strong>உ</strong>டைகளற்ற நேரத்திலும் இருக்கின்றன இன்னும்<br /> அவிழ்க்கப்பட வேண்டிய ஆடைகள்</p>.<p><strong>எ</strong>ன்னடா கொடுமையிது<br /> கசக்கிய தாளில்தான் எழுத வேண்டியிருக்கிறது<br /> இந்தக் கவிதையை மட்டும்!</p>
<p><strong>அ</strong>ழகான துள்ளல் பாடல் ஒன்றுக்கு <br /> முழுமையாய் ஆடி முடித்து வியர்வை உதிர்த்த உடல்களை <br /> குளிக்கவைத்த பிறகு பேசவைத்துப் பாருங்கள் <br /> கேட்கலாம் இசை</p>.<p><strong>அ</strong>தற்குப் பிறகும் விடுகிறானா பார்... பழம் நறுக்கிக் கொடுத்து<br /> பச்சைத் தேநீர் கொடுத்து<br /> கால் விரல்களில் சொடுக்கெடுத்துப் படுத்துகிறான்</p>.<p><strong>க</strong>ண்கள் திறக்காதே முழுமையாகப் பார்க்கலாம் திருடப்படுவதை</p>.<p><strong>ப</strong>த்து நத்தைகள் நடந்து காட்டிய பாதையைக் கடந்தது<br /> ஆமையின் மீது எறும்பு</p>.<p><strong>ஆ</strong>றடிச் சாலையில் ஆயுள் பயணம்</p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>பூ</strong>ச்செடிதான்<br /> ஒரே ஒரு வேறுபாடு<br /> இது வருடிக் கொடுத்த பிறகு தண்ணீர் ஊற்றுதல்</p>.<p><strong>ஒ</strong>ற்றை இசைப் பலகையில் எத்தனை இசைக் கருவிகள்</p>.<p><strong>கை</strong>பேசியில் காதல் கொள் காமம் கொல்</p>.<p><strong>உ</strong>டைகளற்ற நேரத்திலும் இருக்கின்றன இன்னும்<br /> அவிழ்க்கப்பட வேண்டிய ஆடைகள்</p>.<p><strong>எ</strong>ன்னடா கொடுமையிது<br /> கசக்கிய தாளில்தான் எழுத வேண்டியிருக்கிறது<br /> இந்தக் கவிதையை மட்டும்!</p>