<p><span style="color: #800000"><strong>மௌனம் </strong></span></p>.<p>தோளில் தட்டிக்கொடுத்து<br /> பஸ்ஸிலிருந்து இறங்கினான்<br /> சுற்றி வந்து ஜன்னலோரம் நின்று<br /> கையசைத்தான்</p>.<p>திரும்பி நடந்தான்<br /> ஏதும் சொல்லாமல்</p>.<p>கீழுதடு அழுந்த<br /> ஓர் அழுகை துடித்தது அவளுக்கு<br /> வார்த்தைகள் வெட்டிக்கொண்டு<br /> ரத்தம் கசிகிறது<br /> கூடுதல் உப்பாக!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>பொழுது </strong></span></p>.<p>வாசலில்<br /> சைக்கிள் நிற்கிறது</p>.<p>சைக்கிள் நிழல் சரிந்து<br /> வாசலில்கிடக்கிறது</p>.<p>நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்<br /> சைக்கிளுக்கு வந்துவிடுகிறது</p>.<p>சரிந்து சரிந்து சைக்கிளையும் பின்<br /> வாசலையும்கூடத் தாண்டுகிறது நிழல்</p>.<p>பிறகு சைக்கிள் மட்டுமே<br /> வாசலில் நின்றுகொண்டு இருக்கிறது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>மழை இரவு </strong></span></p>.<p>இரவு பெய்த மழை<br /> மழை பெய்த இரவு<br /> இரண்டுக்குமிடையில்<br /> எங்கோ தங்கி நிற்கின்றன<br /> தெளிந்த பூமியும்<br /> அது நனைந்த வாசமும்!</p>.<p><strong>- ஸ்வரூப் மணிகண்டன்</strong></p>.<p><span style="color: #993300"><strong>புத்திசாலிகளுக்கான புதிர் </strong></span></p>.<p>கடைசியில் ஒரு கேள்வி<br /> மிஞ்சியது</p>.<p>பதிலை மாற்றி அமைத்துப்<br /> பார்த்தேன்</p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>ஒரு பதில் மிஞ்சியது</p>.<p>கேள்வியைப் பதிலாகவும்<br /> பதிலைக் கேள்வியாகவும்<br /> பொருத்திப் பார்த்தேன்</p>.<p>அப்பவும்<br /> ஒரு கேள்வி - பதில்<br /> மிஞ்சியது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #008080"><strong>தொட்டி மீன் </strong></span></p>.<p>மனிதர்களற்ற வீட்டின்<br /> தொட்டியினுள் சலனமற்று<br /> வாழ்தலின் பொருட்டு<br /> உலாவும் மீனுக்கு<br /> சமுத்திரத்தின் சுதந்திரமோ<br /> வலை நோக்கிய போராட்டமோ<br /> எதுவாகினும்<br /> தெரிவதில்லை!</p>.<p><strong>- ராஜு</strong></p>
<p><span style="color: #800000"><strong>மௌனம் </strong></span></p>.<p>தோளில் தட்டிக்கொடுத்து<br /> பஸ்ஸிலிருந்து இறங்கினான்<br /> சுற்றி வந்து ஜன்னலோரம் நின்று<br /> கையசைத்தான்</p>.<p>திரும்பி நடந்தான்<br /> ஏதும் சொல்லாமல்</p>.<p>கீழுதடு அழுந்த<br /> ஓர் அழுகை துடித்தது அவளுக்கு<br /> வார்த்தைகள் வெட்டிக்கொண்டு<br /> ரத்தம் கசிகிறது<br /> கூடுதல் உப்பாக!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>பொழுது </strong></span></p>.<p>வாசலில்<br /> சைக்கிள் நிற்கிறது</p>.<p>சைக்கிள் நிழல் சரிந்து<br /> வாசலில்கிடக்கிறது</p>.<p>நிமிர்ந்து நிமிர்ந்து நிழல்<br /> சைக்கிளுக்கு வந்துவிடுகிறது</p>.<p>சரிந்து சரிந்து சைக்கிளையும் பின்<br /> வாசலையும்கூடத் தாண்டுகிறது நிழல்</p>.<p>பிறகு சைக்கிள் மட்டுமே<br /> வாசலில் நின்றுகொண்டு இருக்கிறது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>மழை இரவு </strong></span></p>.<p>இரவு பெய்த மழை<br /> மழை பெய்த இரவு<br /> இரண்டுக்குமிடையில்<br /> எங்கோ தங்கி நிற்கின்றன<br /> தெளிந்த பூமியும்<br /> அது நனைந்த வாசமும்!</p>.<p><strong>- ஸ்வரூப் மணிகண்டன்</strong></p>.<p><span style="color: #993300"><strong>புத்திசாலிகளுக்கான புதிர் </strong></span></p>.<p>கடைசியில் ஒரு கேள்வி<br /> மிஞ்சியது</p>.<p>பதிலை மாற்றி அமைத்துப்<br /> பார்த்தேன்</p>.<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>ஒரு பதில் மிஞ்சியது</p>.<p>கேள்வியைப் பதிலாகவும்<br /> பதிலைக் கேள்வியாகவும்<br /> பொருத்திப் பார்த்தேன்</p>.<p>அப்பவும்<br /> ஒரு கேள்வி - பதில்<br /> மிஞ்சியது!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>.<p><span style="color: #008080"><strong>தொட்டி மீன் </strong></span></p>.<p>மனிதர்களற்ற வீட்டின்<br /> தொட்டியினுள் சலனமற்று<br /> வாழ்தலின் பொருட்டு<br /> உலாவும் மீனுக்கு<br /> சமுத்திரத்தின் சுதந்திரமோ<br /> வலை நோக்கிய போராட்டமோ<br /> எதுவாகினும்<br /> தெரிவதில்லை!</p>.<p><strong>- ராஜு</strong></p>