<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> ஒரு சொட்டு இரவு </strong>.<p><strong>கு</strong>ழாயின்<br /> வட்ட வாயில்<br /> குளிர்ந்து தொங்கும்<br /> ஒரு<br /> சொட்டு இரவை</p>.<p>ஜன்னல் ஊடே நுழைந்த<br /> சொற்ப வெயில்<br /> தாகம் தீரப் பருகுகிறது<br /> கொஞ்சமாக!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #993300"><strong>தேர்வு மயக்கம் </strong></span></p>.<p><strong>எ</strong>தைக் கேட்டு எதைப் பெறுவதென<br /> நமக்குள் குழப்பம் வர<br /> இரு விரல் நீட்டி ஒன்றைத் தொடு என்கிறாய்...<br /> ஒளிரும் உனது இரு விரல்களில்<br /> ஒளிந்திருக்கும் இரவை<br /> எனக்குத் தந்துவிட்டு<br /> நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு!</p>.<p><strong>- ஸ்வரூப் மணிகண்டன் </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>மழலை இலக்கணம் </strong></span></p>.<p><strong>நே</strong>கா குட்டியோடு<br /> அக்கா வீட்டுக்கு வருகிறாள்<br /> என்று தெரிந்ததும்<br /> புத்தகங்களைக் கிழித்துவிடுவாளென்று<br /> உயரத்தில்<br /> பாதுகாப்பாக வைத்தேன்<br /> வீட்டுக்குள் நுழைந்ததும்<br /> 'எப்போ வந்தீங்க...’ என்று கேட்டதற்கு<br /> 'நாளைக்கு வந்தோம்...’ என்று<br /> அவள் சொன்னதும்<br /> பாதுகாப்பாக வைத்திருந்த<br /> நன்னூல் புத்தகம்<br /> கிழிந்துபோனது!</p>.<p><strong> - கட்டளைஜெயா </strong></p>.<p><span style="color: #003300"><strong>தேநீர் வேளை </strong></span></p>.<p><strong>கா</strong>லையில் தேநீர் அருந்துகையில்<br /> சீனி குறைவாய் இருக்கிறதென<br /> இனிப்பை அள்ளிப் போட்டு<br /> கரண்டியால் கலக்கிக்கொள்கிறான்<br /> மகன்.</p>.<p>சூடாய் இருக்க வேண்டும்<br /> செய்தித்தாள் வேண்டும்<br /> கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்<br /> தொலைக்காட்சியும்<br /> அப்பாவுக்கு.</p>.<p>பூ வேலைப்பாடுடன் கூடிய<br /> தேநீர்க் குவளை<br /> மகளுக்கு.</p>.<p>எப்படி இருந்தாலும்<br /> அருந்திக்கொள்வாள் அம்மா<br /> இந்த வாழ்க்கையை!</p>.<p><strong>- விஜய் மகேந்திரன் </strong></p>.<p><span style="color: #800080"><strong>மூன்று தலைமுறை சாவி </strong></span></p>.<p><strong>அ</strong>ம்மா மாதிரியே<br /> சாவி வைத்திருக்கிறாள் இவளும்</p>.<p>அம்மா திறந்த<br /> கதவையே திறக்கிறாள்</p>.<p>நெட்டுப் பத்தி, பட்டாசாலை<br /> என்பாள் அம்மா<br /> ரேழி, ஹால்<br /> என்கிறாள் இவள்</p>.<p>மற்றபடி<br /> அம்மா மாதிரியே<br /> சிரித்து அழுது சோறு பொங்கி<br /> கதவைப் பூட்டிக்கொள்கிறாள்</p>.<p>என்ன ஒன்று</p>.<p>திண்ணையில் தூங்கிய அப்பத்தா<br /> சாவியைத் திறகுச்சி என்றாள்<br /> சாவியை சாவி என்றாள் அம்மா!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> ஒரு சொட்டு இரவு </strong>.<p><strong>கு</strong>ழாயின்<br /> வட்ட வாயில்<br /> குளிர்ந்து தொங்கும்<br /> ஒரு<br /> சொட்டு இரவை</p>.<p>ஜன்னல் ஊடே நுழைந்த<br /> சொற்ப வெயில்<br /> தாகம் தீரப் பருகுகிறது<br /> கொஞ்சமாக!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #993300"><strong>தேர்வு மயக்கம் </strong></span></p>.<p><strong>எ</strong>தைக் கேட்டு எதைப் பெறுவதென<br /> நமக்குள் குழப்பம் வர<br /> இரு விரல் நீட்டி ஒன்றைத் தொடு என்கிறாய்...<br /> ஒளிரும் உனது இரு விரல்களில்<br /> ஒளிந்திருக்கும் இரவை<br /> எனக்குத் தந்துவிட்டு<br /> நீ பகல் கொள்ளைக்காரியாய் மாறிவிடு!</p>.<p><strong>- ஸ்வரூப் மணிகண்டன் </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>மழலை இலக்கணம் </strong></span></p>.<p><strong>நே</strong>கா குட்டியோடு<br /> அக்கா வீட்டுக்கு வருகிறாள்<br /> என்று தெரிந்ததும்<br /> புத்தகங்களைக் கிழித்துவிடுவாளென்று<br /> உயரத்தில்<br /> பாதுகாப்பாக வைத்தேன்<br /> வீட்டுக்குள் நுழைந்ததும்<br /> 'எப்போ வந்தீங்க...’ என்று கேட்டதற்கு<br /> 'நாளைக்கு வந்தோம்...’ என்று<br /> அவள் சொன்னதும்<br /> பாதுகாப்பாக வைத்திருந்த<br /> நன்னூல் புத்தகம்<br /> கிழிந்துபோனது!</p>.<p><strong> - கட்டளைஜெயா </strong></p>.<p><span style="color: #003300"><strong>தேநீர் வேளை </strong></span></p>.<p><strong>கா</strong>லையில் தேநீர் அருந்துகையில்<br /> சீனி குறைவாய் இருக்கிறதென<br /> இனிப்பை அள்ளிப் போட்டு<br /> கரண்டியால் கலக்கிக்கொள்கிறான்<br /> மகன்.</p>.<p>சூடாய் இருக்க வேண்டும்<br /> செய்தித்தாள் வேண்டும்<br /> கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்<br /> தொலைக்காட்சியும்<br /> அப்பாவுக்கு.</p>.<p>பூ வேலைப்பாடுடன் கூடிய<br /> தேநீர்க் குவளை<br /> மகளுக்கு.</p>.<p>எப்படி இருந்தாலும்<br /> அருந்திக்கொள்வாள் அம்மா<br /> இந்த வாழ்க்கையை!</p>.<p><strong>- விஜய் மகேந்திரன் </strong></p>.<p><span style="color: #800080"><strong>மூன்று தலைமுறை சாவி </strong></span></p>.<p><strong>அ</strong>ம்மா மாதிரியே<br /> சாவி வைத்திருக்கிறாள் இவளும்</p>.<p>அம்மா திறந்த<br /> கதவையே திறக்கிறாள்</p>.<p>நெட்டுப் பத்தி, பட்டாசாலை<br /> என்பாள் அம்மா<br /> ரேழி, ஹால்<br /> என்கிறாள் இவள்</p>.<p>மற்றபடி<br /> அம்மா மாதிரியே<br /> சிரித்து அழுது சோறு பொங்கி<br /> கதவைப் பூட்டிக்கொள்கிறாள்</p>.<p>என்ன ஒன்று</p>.<p>திண்ணையில் தூங்கிய அப்பத்தா<br /> சாவியைத் திறகுச்சி என்றாள்<br /> சாவியை சாவி என்றாள் அம்மா!</p>.<p><strong>- பா.ராஜாராம் </strong></p>