"சூப்பரா இருக்குங்க... எதுக்கு இத்தனை வாங்குனீங்க?"
"சூப்பரா இருக்குன்னு நீயே சொல்றதானே!"
"ஆமாங்க, ஃப்ரெஷ்ஷாவும் இருக்கு!"
"ஆமா, பூவா இருக்குறதைவிட மொட்டு மொட்டா இருக்குறது நல்லா இருக்கு!" என்று கூறிக்கொண்டே பால் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு, அந்த ரோஜாச் செடிகளைத் தோட்டப் பகுதியில் நல்ல இடமாகத் தேடி நட்டான் திலீப். அதற்குத் தண்ணீர் ஊற்றி முடிக்கவும் காபி வரவும் சரியாக இருந்தது. ஒரு செடியைப் புதிதாக வைத்ததாலோ அல்லது அந்த ரோஜா மொட்டுக்களை அருகில் பார்த்ததாலோ, அந்த காலைப் பொழுதை ரம்மியமாக உணர்ந்தான்.
"சாயங்காலம் சீக்கிரமா வாங்க. அபிக்குட்டியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகணும். ரன்னிங் நோஸ்!"
"ஆமா, நானும் பார்த்தேன். 5 மணிக்கு வர்றேன்."
அலுவலகப் பரபரப்பு உந்தித் தள்ளியபோதும், புறப்படும் முன் மீண்டும் ஒருமுறை ரோஜா மொட்டுக் களை ஆசையாகப் பார்த்துக்கொண்டான்.
வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டவனை எதிர்கொண்டார் டெஸ்பாட்ச் சுந்தரம்.
"திலீப் ஸார்! கோடவுன்ல சில டாக்குமென்ட்ஸ் எடுக்கலாம்னு போனா, ஒரு பூனை குட்டி போட்டுஇருக்கு. கேசவனை விட்டு தூக்கிப் போடச் சொல்லிவிடலாமா?"
"ஐயோ பாவம் சார்! அந்த டாக்குமென்ட்ஸ் அவ்வளவு அவசரமா?"
"இல்லை. ஆனா..."
"அவசரம் இல்லைன்னா ரெண்டு நாள் போகட்டும். குட்டிங்க போயிடும்!"
"ஓ.கே. சார்!"
வழக்கம் போல் 7 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு அபிக்குட்டியைப் பார்த்ததும்தான் ஹாஸ் பிட்டல் மேட்டர் நினைவுக்கு வந்தது.
"ஸாரி கல்பனா... ஒரு மீட்டிங்!"
"தெரியும். உங்க செல் நாட் ரீச்சபிள். அதான் நானே போய்ட்டு வந்துட்டேன்!"
"குட்! என்ன சொன்னார் டாக்டர்?"
"சும்மா நார்மல்தான். அப்புறம்...’
"ஒரு நிமிஷம்" என்றவன், காலையில்வைத்த ரோஜாச் செடியின் மொட்டுக்களில் ஒன்று மலர்ந்து இருப் பதைக் கண்டான். கத்திரிக்கோல்கொண்டு காம் பைச் சாய்வாக வெட்டி, ஆசையாக அபிக் குட்டி யிடம் நீட்டினான்.
"ஹை! சூப்பர் ரோஸ்!"
"தேங்க்யூ சொல்லு!"
"த்...தே...ங்...டேங்கூ!"
"ஹாஹா..." என்றவாறே உடை மாற்றி அமர்ந்தவன் அனிச்சையாக ரிமோட்டைக் கையில் எடுத்தான்.
"என்னங்க..."
"ம்... நைட் டிபனே பண்ணிரு!"
"அது இல்லைங்க... ஹாஸ்பிட்டல்ல அப்பிடியே செக் பண்ணேன். நாள் தள்ளிப் போயிருக்கு. கன்ஃபர்ம் பண்ணிட்டார் டாக்டர்!"
"வாட் நான்சென்ஸ். அறிவு இல்லையா? எத்தனை தடவை சொல்றது. இப்ப இருக்கிற நிலைமை தெரியுமா உனக்கு? நோ வே... நாளைக்குப் போய் க்ளீன் பண்றோம். தட்ஸ் ஆல்!"
ரோஜாவின் இன்னொரு மொட்டு இதழ் விரித்துஇருந்தது!
|