<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff6600"><strong>ரகசியம் அல்லாத ரகசியம்! </strong></span></p>.<p> என்னிடம் சொல்வதற்கு<br /> தன்னிடம்<br /> ஒரு ரகசியம் வைத்திருப்பதாக<br /> ஓடி வந்து சொல்கிறாள்<br /> குழந்தை.</p>.<p>மேலும் அதை<br /> யாரிடமும்<br /> சொல்லிவிடக் கூடாதென<br /> சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.</p>.<p>பின்பும்<br /> பல பீடிகைகளுடன்<br /> காதில் கிசுகிசுக்கிறாள்.</p>.<p>அது ஒன்றும்<br /> அத்தனைப் பெரிய<br /> பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.<br /> ரகசியமே அல்ல என்று<br /> அதைப் புறந்தள்ளவும்<br /> முடியாத<br /> அந்த ரகசியத்தை<br /> உங்களிடம்<br /> என்னால் சொல்ல முடியாது<br /> சத்தியத்தை மீறி.</p>.<p> நாளை அவளே<br /> உங்களிடம் சொல்வாள்</p>.<p>''என்னிடம் ஒரு ரகசியம்<br /> உள்ளது<br /> யாரிடமும்<br /> சொல்லிவிடாதீர்கள்''<br /> என்றபடிக்கு!</p>.<p><strong>- இரா.பூபாலன்</strong></p>.<p><span style="color: #ff0000"><strong></strong></span><span style="color: #ff0000"><strong>மனப் பால்</strong></span></p>.<p>சகுனம் சரி இல்லை<br /> திரும்பி வந்துவிட்டேன்<br /> மனதில் ஓடும்<br /> ஆயிரம் பூனைகளை<br /> என்ன செய்ய?</p>.<p><strong>- வெண்பா</strong></p>.<p><span style="color: #800000"><strong>தலையணை தைலம் </strong></span></p>.<p>தலையணை அருகே<br /> தைலம்<br /> ஒவ்வொரு வீட்டிலும்<br /> வெவ்வேறு வாசனையோடு.</p>.<p><strong>- நலங்கிள்ளி </strong></p>.<p><span style="color: #339966"><strong>பொம்மை உலகம் </strong></span></p>.<p>ஒவ்வொருவரிடமும்<br /> இருக்கிறது<br /> ஒரு கரடி பொம்மையோ<br /> தன்னைச் செதுக்கிக்கொள்ளும்<br /> பெண் பொம்மையோ<br /> நெளிந்து நிற்கும்<br /> ஒரு தோழி பொம்மையோ...</p>.<p>சில பொம்மைகள்<br /> கை கூட்டி முழங்கால் மடித்து<br /> கண் சாய்த்து அமர்ந்து</p>.<p>ஸ்நேகிதனை<br /> கண் கொட்டாமல்<br /> அல்லும் பகலும்<br /> கண்ணாடி கவருக்குள்ளிருந்து<br /> பார்த்தபடி</p>.<p>அவர்கள் தன்னோடு<br /> தன் கவலைகளோடு<br /> பேசிக்கொள்ளும்போது<br /> காதுகள் கொடுத்து</p>.<p>மகிழ்ச்சியாய்<br /> தோழர்கள் ஆடும்போது<br /> புன்னகைத்தபடி</p>.<p>கூட இருப்பதே<br /> ஒரு தவமாய் இயற்றி<br /> விட்டுச் சென்ற<br /> இடத்திலேயே காத்துக்கிடந்து</p>.<p>புறக்கணித்தோ<br /> பரணிலோ<br /> குப்பைத் தொட்டியிலோ<br /> வீசிச் செல்லும்<br /> நண்பர்களைக் குறை கூறாமல்<br /> அங்கும் மௌனமாய்...<br /> அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்...</p>.<p><strong>- தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #800080"><strong>பயத்தின் திசைகள் </strong></span></p>.<p>அடிப்பானோ என்று நாயும்...<br /> கடிக்குமோ என்று நானும்...<br /> எப்போதும் ஓடியிருக்கிறோம்<br /> எதிரெதிர் திசைகளில்!</p>.<p><strong>- சொ.சேகர் </strong></p>.<p><span style="color: #003366"><strong>பாராட்டு விழா </strong></span></p>.<p>எது எதுக்கு<br /> யார் யார்<br /> யார் யாருக்கு நடத்தலாம்?</p>.<p>சாதனையாளர்க்கோ<br /> சமூகத் தொண்டர்க்கோ<br /> வீரர்க்கோ என்றில்லை<br /> யார் யார்க்கு வேண்டுமானாலும்<br /> எதற்கு வேண்டுமானாலும்<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>அதிகம் கொலை செய்தவர்க்கு<br /> கொலைக்குத்<br /> துணை நின்றவர்க்கு<br /> கொலை செய்யப்பட்டவர்க்கு<br /> பயன் பெற்றதற்கு<br /> பயன் பெறுவதற்கு<br /> பிரபலமாவதற்கு<br /> விழா நடத்துவதற்கு<br /> மனத்தில் இடம் பிடிப்பதற்கு<br /> சும்மா பாராட்டுவதற்கு<br /> பாராட்டு விழா நடத்தியதற்கு<br /> சிலரைப் புறக்கணிப்பதற்கு</p>.<p>பிறர்தான் நடத்த<br /> வேண்டுமென்பதில்லை<br /> பிறர் பெயரில் நாமேகூட<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>அல்லது<br /> பிறரைத் தூண்டி<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>பாராட்டு விழாக்கள்<br /> பாராட்டுவதற்காக மட்டும்<br /> நடத்தப்படுவதில்லை!</p>.<p><strong>- யாழினி முனுசாமி </strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff6600"><strong>ரகசியம் அல்லாத ரகசியம்! </strong></span></p>.<p> என்னிடம் சொல்வதற்கு<br /> தன்னிடம்<br /> ஒரு ரகசியம் வைத்திருப்பதாக<br /> ஓடி வந்து சொல்கிறாள்<br /> குழந்தை.</p>.<p>மேலும் அதை<br /> யாரிடமும்<br /> சொல்லிவிடக் கூடாதென<br /> சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.</p>.<p>பின்பும்<br /> பல பீடிகைகளுடன்<br /> காதில் கிசுகிசுக்கிறாள்.</p>.<p>அது ஒன்றும்<br /> அத்தனைப் பெரிய<br /> பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.<br /> ரகசியமே அல்ல என்று<br /> அதைப் புறந்தள்ளவும்<br /> முடியாத<br /> அந்த ரகசியத்தை<br /> உங்களிடம்<br /> என்னால் சொல்ல முடியாது<br /> சத்தியத்தை மீறி.</p>.<p> நாளை அவளே<br /> உங்களிடம் சொல்வாள்</p>.<p>''என்னிடம் ஒரு ரகசியம்<br /> உள்ளது<br /> யாரிடமும்<br /> சொல்லிவிடாதீர்கள்''<br /> என்றபடிக்கு!</p>.<p><strong>- இரா.பூபாலன்</strong></p>.<p><span style="color: #ff0000"><strong></strong></span><span style="color: #ff0000"><strong>மனப் பால்</strong></span></p>.<p>சகுனம் சரி இல்லை<br /> திரும்பி வந்துவிட்டேன்<br /> மனதில் ஓடும்<br /> ஆயிரம் பூனைகளை<br /> என்ன செய்ய?</p>.<p><strong>- வெண்பா</strong></p>.<p><span style="color: #800000"><strong>தலையணை தைலம் </strong></span></p>.<p>தலையணை அருகே<br /> தைலம்<br /> ஒவ்வொரு வீட்டிலும்<br /> வெவ்வேறு வாசனையோடு.</p>.<p><strong>- நலங்கிள்ளி </strong></p>.<p><span style="color: #339966"><strong>பொம்மை உலகம் </strong></span></p>.<p>ஒவ்வொருவரிடமும்<br /> இருக்கிறது<br /> ஒரு கரடி பொம்மையோ<br /> தன்னைச் செதுக்கிக்கொள்ளும்<br /> பெண் பொம்மையோ<br /> நெளிந்து நிற்கும்<br /> ஒரு தோழி பொம்மையோ...</p>.<p>சில பொம்மைகள்<br /> கை கூட்டி முழங்கால் மடித்து<br /> கண் சாய்த்து அமர்ந்து</p>.<p>ஸ்நேகிதனை<br /> கண் கொட்டாமல்<br /> அல்லும் பகலும்<br /> கண்ணாடி கவருக்குள்ளிருந்து<br /> பார்த்தபடி</p>.<p>அவர்கள் தன்னோடு<br /> தன் கவலைகளோடு<br /> பேசிக்கொள்ளும்போது<br /> காதுகள் கொடுத்து</p>.<p>மகிழ்ச்சியாய்<br /> தோழர்கள் ஆடும்போது<br /> புன்னகைத்தபடி</p>.<p>கூட இருப்பதே<br /> ஒரு தவமாய் இயற்றி<br /> விட்டுச் சென்ற<br /> இடத்திலேயே காத்துக்கிடந்து</p>.<p>புறக்கணித்தோ<br /> பரணிலோ<br /> குப்பைத் தொட்டியிலோ<br /> வீசிச் செல்லும்<br /> நண்பர்களைக் குறை கூறாமல்<br /> அங்கும் மௌனமாய்...<br /> அங்கீகரிப்பும் அனுமதிப்புமாய்...</p>.<p><strong>- தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #800080"><strong>பயத்தின் திசைகள் </strong></span></p>.<p>அடிப்பானோ என்று நாயும்...<br /> கடிக்குமோ என்று நானும்...<br /> எப்போதும் ஓடியிருக்கிறோம்<br /> எதிரெதிர் திசைகளில்!</p>.<p><strong>- சொ.சேகர் </strong></p>.<p><span style="color: #003366"><strong>பாராட்டு விழா </strong></span></p>.<p>எது எதுக்கு<br /> யார் யார்<br /> யார் யாருக்கு நடத்தலாம்?</p>.<p>சாதனையாளர்க்கோ<br /> சமூகத் தொண்டர்க்கோ<br /> வீரர்க்கோ என்றில்லை<br /> யார் யார்க்கு வேண்டுமானாலும்<br /> எதற்கு வேண்டுமானாலும்<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>அதிகம் கொலை செய்தவர்க்கு<br /> கொலைக்குத்<br /> துணை நின்றவர்க்கு<br /> கொலை செய்யப்பட்டவர்க்கு<br /> பயன் பெற்றதற்கு<br /> பயன் பெறுவதற்கு<br /> பிரபலமாவதற்கு<br /> விழா நடத்துவதற்கு<br /> மனத்தில் இடம் பிடிப்பதற்கு<br /> சும்மா பாராட்டுவதற்கு<br /> பாராட்டு விழா நடத்தியதற்கு<br /> சிலரைப் புறக்கணிப்பதற்கு</p>.<p>பிறர்தான் நடத்த<br /> வேண்டுமென்பதில்லை<br /> பிறர் பெயரில் நாமேகூட<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>அல்லது<br /> பிறரைத் தூண்டி<br /> நடத்திக்கொள்ளலாம்</p>.<p>பாராட்டு விழாக்கள்<br /> பாராட்டுவதற்காக மட்டும்<br /> நடத்தப்படுவதில்லை!</p>.<p><strong>- யாழினி முனுசாமி </strong></p>