<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>போர் நிலம் </strong></span></span></p>.<p> வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன<br /> பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும்<br /> பெருத்த வண்டிகளிலும்<br /> அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்<br /> நிலத்தை அள்ளிச் செல்லுவதாக<br /> வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.</p>.<p>போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை<br /> இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது<br /> கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ<br /> தன் தந்தையைக் குறித்தோ<br /> எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை<br /> தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.</p>.<p> தரப்பால் துண்டுகளுடன்<br /> சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு<br /> பொம்மை வீடுகளைக்<br /> குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர் <br /> சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத<br /> பொம்மை வீட்டுக்குள்<br /> காற்றும் புழுதியும் வெம்மையும்<br /> நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.</p>.<p> பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய<br /> நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி<br /> சேற்றில் குளிக்கும்<br /> குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்<br /> வீடுகளுக்காகப் போர் தொடங்குகிறது.<br /> </p>.<p>யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற<br /> நிலத்தின் வாசனையைக் குழந்தைகள் முகர்கின்றனர்<br /> வெடிபொருட்களின் புகை<br /> இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது<br /> நஞ்சூறி நீலமாகிய தண்ணீரைக் குடித்து<br /> குழந்தைகள் பசியாறுகின்றனர்.</p>.<p>தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்<br /> கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை<br /> போர் தின்று<br /> நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.</p>.<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று </strong></span></p>.<p>பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி<br /> உப்பு வயல்களில் தேங்கிக்கிடக்கிறது<br /> வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி<br /> உயிர் கரைந்த நாட்களில்<br /> வேழினியின் தந்தை<br /> உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைத்திருந்தார்<br /> வேழினியின் கண்களில் நீங்காதிருக்கின்றன<br /> உப்பு வயல்களில் நகர்ந்த<br /> வியர்வைகளும் குருதிகளும்.</p>.<p>நிலத்திற்காய் கொட்டிய குருதி<br /> காயாமல் பிசுபிசுக்கிறது<br /> வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்<br /> கைகள் குத்துகின்றன<br /> அன்றெமது நிலத்திற்காய்<br /> இதே தெருவில் பற்றைகளினூடே<br /> வெடிகளைச் சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது<br /> குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.</p>.<p>இன்றெம் நிலத்தில்<br /> மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன<br /> நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்<br /> உப்பு வயல் கடல் நிலத்தில்<br /> வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.</p>.<p>அன்றெமது கொடி பறந்த தடிகளில்<br /> நிலத் துயரம் பறக்கிறது<br /> வெடி சுமந்து சென்றவரின்<br /> தாங்கியில் வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன<br /> உப்பு வயல்களில் முளைத்து<br /> இன்னும் உயிரோடு கிடந்து<br /> துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.</p>.<p>நிலம் அள்ளித் தின்ற கைகள்<br /> எப்பொழுதும் தெருவில் செல்பவர்களை மிரட்டுகின்றன<br /> கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன<br /> உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்<br /> முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.</p>.<p>இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை<br /> வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள் <br /> எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்<br /> குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக் காற்று<br /> வெடி சுமந்தவர்களின் கதைகளைக் கூவியபடியிருக்கிறது!</p>.<p style="text-align: center"><span style="color: #003300"><strong>சிசுக்கள் வேகும் அடுப்பு </strong></span></p>.<p>செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்<br /> அடுப்புகள் எரியாத ஊரில்<br /> ஏனைய இரண்டு குழந்தைகளும்<br /> உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்<br /> தலைவன் முட்கம்பிகளால்<br /> கட்டப்பட்டு யுத்தப் பாவத்தைத் தின்கிறான்<br /> தலைவி துயரம் துடைக்க முடியாத<br /> பசிக் கூடாரத்தைச் சுமக்கிறாள்<br /> வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்<br /> துவக்குகளும்<br /> இரும்புத் தொப்பிகளும் அவளைப் புணர்ந்து<br /> பசி தீர்த்த இரவில்<br /> குழந்தைகள் பசியோடு உறங்கினர்<br /> இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று<br /> நெருப்பு தகித்தாறாத<br /> அடுப்பில் புதைத்தாள்<br /> தொப்புள் கொடிகளை அறுத்து<br /> பனிக்குடங்களை உடைத்தாள்<br /> ரத்தம் பெருக்கெடுக்க<br /> அவள் ரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்<br /> குழந்தைகள் பசியின்றி உறங்கினர்!</p>
<p style="text-align: center"><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>போர் நிலம் </strong></span></span></p>.<p> வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன<br /> பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும்<br /> பெருத்த வண்டிகளிலும்<br /> அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்<br /> நிலத்தை அள்ளிச் செல்லுவதாக<br /> வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.</p>.<p>போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை<br /> இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது<br /> கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ<br /> தன் தந்தையைக் குறித்தோ<br /> எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை<br /> தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.</p>.<p> தரப்பால் துண்டுகளுடன்<br /> சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு<br /> பொம்மை வீடுகளைக்<br /> குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர் <br /> சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத<br /> பொம்மை வீட்டுக்குள்<br /> காற்றும் புழுதியும் வெம்மையும்<br /> நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.</p>.<p> பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய<br /> நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி<br /> சேற்றில் குளிக்கும்<br /> குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்<br /> வீடுகளுக்காகப் போர் தொடங்குகிறது.<br /> </p>.<p>யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற<br /> நிலத்தின் வாசனையைக் குழந்தைகள் முகர்கின்றனர்<br /> வெடிபொருட்களின் புகை<br /> இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது<br /> நஞ்சூறி நீலமாகிய தண்ணீரைக் குடித்து<br /> குழந்தைகள் பசியாறுகின்றனர்.</p>.<p>தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்<br /> கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை<br /> போர் தின்று<br /> நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.</p>.<p style="text-align: center"><span style="color: #ff0000"><strong>குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று </strong></span></p>.<p>பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி<br /> உப்பு வயல்களில் தேங்கிக்கிடக்கிறது<br /> வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி<br /> உயிர் கரைந்த நாட்களில்<br /> வேழினியின் தந்தை<br /> உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைத்திருந்தார்<br /> வேழினியின் கண்களில் நீங்காதிருக்கின்றன<br /> உப்பு வயல்களில் நகர்ந்த<br /> வியர்வைகளும் குருதிகளும்.</p>.<p>நிலத்திற்காய் கொட்டிய குருதி<br /> காயாமல் பிசுபிசுக்கிறது<br /> வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்<br /> கைகள் குத்துகின்றன<br /> அன்றெமது நிலத்திற்காய்<br /> இதே தெருவில் பற்றைகளினூடே<br /> வெடிகளைச் சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது<br /> குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.</p>.<p>இன்றெம் நிலத்தில்<br /> மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன<br /> நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்<br /> உப்பு வயல் கடல் நிலத்தில்<br /> வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.</p>.<p>அன்றெமது கொடி பறந்த தடிகளில்<br /> நிலத் துயரம் பறக்கிறது<br /> வெடி சுமந்து சென்றவரின்<br /> தாங்கியில் வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன<br /> உப்பு வயல்களில் முளைத்து<br /> இன்னும் உயிரோடு கிடந்து<br /> துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.</p>.<p>நிலம் அள்ளித் தின்ற கைகள்<br /> எப்பொழுதும் தெருவில் செல்பவர்களை மிரட்டுகின்றன<br /> கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன<br /> உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்<br /> முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.</p>.<p>இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை<br /> வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள் <br /> எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்<br /> குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக் காற்று<br /> வெடி சுமந்தவர்களின் கதைகளைக் கூவியபடியிருக்கிறது!</p>.<p style="text-align: center"><span style="color: #003300"><strong>சிசுக்கள் வேகும் அடுப்பு </strong></span></p>.<p>செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்<br /> அடுப்புகள் எரியாத ஊரில்<br /> ஏனைய இரண்டு குழந்தைகளும்<br /> உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்<br /> தலைவன் முட்கம்பிகளால்<br /> கட்டப்பட்டு யுத்தப் பாவத்தைத் தின்கிறான்<br /> தலைவி துயரம் துடைக்க முடியாத<br /> பசிக் கூடாரத்தைச் சுமக்கிறாள்<br /> வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்<br /> துவக்குகளும்<br /> இரும்புத் தொப்பிகளும் அவளைப் புணர்ந்து<br /> பசி தீர்த்த இரவில்<br /> குழந்தைகள் பசியோடு உறங்கினர்<br /> இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று<br /> நெருப்பு தகித்தாறாத<br /> அடுப்பில் புதைத்தாள்<br /> தொப்புள் கொடிகளை அறுத்து<br /> பனிக்குடங்களை உடைத்தாள்<br /> ரத்தம் பெருக்கெடுக்க<br /> அவள் ரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்<br /> குழந்தைகள் பசியின்றி உறங்கினர்!</p>