<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>மழையாலணையும் பெயர் </strong></span></p>.<p> <strong>அ</strong>ணிகையிலும் களைகையிலும்<br /> வெவ்வேறழகு நீ.<br /> மழை மாதிரி.</p>.<p>கொஞ்சிக்கொண்டே<br /> இருக்க வேண்டும் என்கிறாய்.<br /> தூறிக்கொண்டே இருக்கும் மழை.</p>.<p>அடை மழைக்கு<br /> ஒளிவதுபோலத்தான்.<br /> உன் கோபப் பொழிதல்களிலும்</p>.<p>சாத்தியமே இல்லை<br /> என்று நினைக்கையிலெல்லாம்<br /> உன் வருகைபோன்றே மழை.</p>.<p>உன் என் ஊடல்<br /> எப்படி அறிந்திருக்கும் மழை.<br /> உன் மேல்தான் சந்தேகம்.</p>.<p>எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.<br /> பருவ கால மழையாய்.<br /> ஊடல் கோடை மழை.</p>.<p>மழைகளில்<br /> தேடிக்கொண்டே இருக்கிறேன்<br /> முதல் மழையில் தொலைந்த என்னை.</p>.<p>மழை நீர் சேகரிப்புத் தொட்டி<br /> வீட்டுக்கு வெளியேயும்<br /> மனசுக்குள்ளேயும்!</p>.<p><strong>- ஆத்மார்த்தி </strong></p>.<p><span style="color: #800080"><strong>சித்திரப்பூச்சி </strong></span></p>.<p><strong>எ</strong>ட்டுக்கால் பூச்சியின் வலை<br /> ஓவியம் போல இருக்கிறது<br /> அதைக் கலைக்கும்<br /> ஒட்டடைக் குச்சியோ<br /> தூரிகை போல இருக்கிறது!</p>.<p><strong>- கட்டளை ஜெயா </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>அவரவர் பிம்பங்கள் </strong></span></p>.<p><strong>உ</strong>டைந்து போன நிலைக்கண்ணாடிக்காய்<br /> வீடே அலறும்படி கத்துகிறோம்<br /> நானும் அவளும்.<br /> ஆனால்<br /> ஒவ்வொரு துண்டாய் எடுத்து<br /> ஒட்டவைக்கிறாள் மகள்<br /> முகம் நிறையப் புன்னகை சுமந்து<br /> துண்டுகளை அவள் நேர்த்தியாக்குகிறாள்<br /> அவள் எப்போதும் எல்லாவற்றையும்<br /> நட்போடுதான் பாவிக்கிறாள்<br /> நாங்கள்தான் காசாகப் பார்க்கிறோம்!</p>.<p><strong>- ஈஸ்வர சந்தான மூர்த்தி </strong></p>.<p><span style="color: #003366"><strong>பாம்பு குறித்த பயம் </strong></span></p>.<p><strong>மூ</strong>ன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில்<br /> பாம்புப் படம் இருந்த<br /> பக்கத்தைக் கிழித்துவிட்டாள்<br /> பெரியாயி</p>.<p>இரவுக்கு மேல் பாம்பைப் பற்றி<br /> பேச வேண்டியிருக்கும்போது<br /> பூச்சியென்றோ<br /> பெயர் சொல்லாதது<br /> என்றோ அழைக்கச் சொல்லி<br /> தாத்தா சொல்லிக்கொடுத்தார்</p>.<p>ஓடுற பாம்பை மிதிக்கும் வயசு என<br /> ஊக்கப்படுத்தும்போதே<br /> புற்றின் திசைக்கு<br /> அண்டவிட மாட்டார்<br /> அப்பா</p>.<p>ஓர் இடத்தில்<br /> நாகராஜனெனப் பாலூற்றியும்<br /> இன்னோர் இடத்தில்<br /> கம்பெடுத்துக் கொடுத்தும்<br /> விநோத பக்தியிலிருந்தாள் அம்மா</p>.<p>எல்லாப் பழைய கதைகளையும்<br /> கிளறிவிட்டபடிக்கு சுருண்டு படுத்திருக்கிறது<br /> கீரியிடம் சண்டை போடக்<br /> கூடையில் காத்திருக்கும்<br /> பல் பிடுங்கிய பாம்பு!</p>.<p><strong>- லதாமகன் </strong></p>.<p><span style="color: #000080"><strong>நேரமில்லை </strong></span></p>.<p>ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை<br /> விமர்சித்தேன்<br /> ஆர்குட்டில் அரசியல்<br /> பேசினேன்<br /> பிளாக்கில் திரையுலகைப்<br /> பின்னியெடுத்தேன்<br /> ஸாரி... அப்பா<br /> உங்களிடம் அடுத்த வாரம்<br /> பேசுகிறேன்!</p>.<p><strong>- சந்திரா சிவபாலன்</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>மழையாலணையும் பெயர் </strong></span></p>.<p> <strong>அ</strong>ணிகையிலும் களைகையிலும்<br /> வெவ்வேறழகு நீ.<br /> மழை மாதிரி.</p>.<p>கொஞ்சிக்கொண்டே<br /> இருக்க வேண்டும் என்கிறாய்.<br /> தூறிக்கொண்டே இருக்கும் மழை.</p>.<p>அடை மழைக்கு<br /> ஒளிவதுபோலத்தான்.<br /> உன் கோபப் பொழிதல்களிலும்</p>.<p>சாத்தியமே இல்லை<br /> என்று நினைக்கையிலெல்லாம்<br /> உன் வருகைபோன்றே மழை.</p>.<p>உன் என் ஊடல்<br /> எப்படி அறிந்திருக்கும் மழை.<br /> உன் மேல்தான் சந்தேகம்.</p>.<p>எடுத்ததற்கெல்லாம் சந்தேகிப்பாய்.<br /> பருவ கால மழையாய்.<br /> ஊடல் கோடை மழை.</p>.<p>மழைகளில்<br /> தேடிக்கொண்டே இருக்கிறேன்<br /> முதல் மழையில் தொலைந்த என்னை.</p>.<p>மழை நீர் சேகரிப்புத் தொட்டி<br /> வீட்டுக்கு வெளியேயும்<br /> மனசுக்குள்ளேயும்!</p>.<p><strong>- ஆத்மார்த்தி </strong></p>.<p><span style="color: #800080"><strong>சித்திரப்பூச்சி </strong></span></p>.<p><strong>எ</strong>ட்டுக்கால் பூச்சியின் வலை<br /> ஓவியம் போல இருக்கிறது<br /> அதைக் கலைக்கும்<br /> ஒட்டடைக் குச்சியோ<br /> தூரிகை போல இருக்கிறது!</p>.<p><strong>- கட்டளை ஜெயா </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>அவரவர் பிம்பங்கள் </strong></span></p>.<p><strong>உ</strong>டைந்து போன நிலைக்கண்ணாடிக்காய்<br /> வீடே அலறும்படி கத்துகிறோம்<br /> நானும் அவளும்.<br /> ஆனால்<br /> ஒவ்வொரு துண்டாய் எடுத்து<br /> ஒட்டவைக்கிறாள் மகள்<br /> முகம் நிறையப் புன்னகை சுமந்து<br /> துண்டுகளை அவள் நேர்த்தியாக்குகிறாள்<br /> அவள் எப்போதும் எல்லாவற்றையும்<br /> நட்போடுதான் பாவிக்கிறாள்<br /> நாங்கள்தான் காசாகப் பார்க்கிறோம்!</p>.<p><strong>- ஈஸ்வர சந்தான மூர்த்தி </strong></p>.<p><span style="color: #003366"><strong>பாம்பு குறித்த பயம் </strong></span></p>.<p><strong>மூ</strong>ன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில்<br /> பாம்புப் படம் இருந்த<br /> பக்கத்தைக் கிழித்துவிட்டாள்<br /> பெரியாயி</p>.<p>இரவுக்கு மேல் பாம்பைப் பற்றி<br /> பேச வேண்டியிருக்கும்போது<br /> பூச்சியென்றோ<br /> பெயர் சொல்லாதது<br /> என்றோ அழைக்கச் சொல்லி<br /> தாத்தா சொல்லிக்கொடுத்தார்</p>.<p>ஓடுற பாம்பை மிதிக்கும் வயசு என<br /> ஊக்கப்படுத்தும்போதே<br /> புற்றின் திசைக்கு<br /> அண்டவிட மாட்டார்<br /> அப்பா</p>.<p>ஓர் இடத்தில்<br /> நாகராஜனெனப் பாலூற்றியும்<br /> இன்னோர் இடத்தில்<br /> கம்பெடுத்துக் கொடுத்தும்<br /> விநோத பக்தியிலிருந்தாள் அம்மா</p>.<p>எல்லாப் பழைய கதைகளையும்<br /> கிளறிவிட்டபடிக்கு சுருண்டு படுத்திருக்கிறது<br /> கீரியிடம் சண்டை போடக்<br /> கூடையில் காத்திருக்கும்<br /> பல் பிடுங்கிய பாம்பு!</p>.<p><strong>- லதாமகன் </strong></p>.<p><span style="color: #000080"><strong>நேரமில்லை </strong></span></p>.<p>ஃபேஸ்புக்கில் கிரிக்கெட்டர்களை<br /> விமர்சித்தேன்<br /> ஆர்குட்டில் அரசியல்<br /> பேசினேன்<br /> பிளாக்கில் திரையுலகைப்<br /> பின்னியெடுத்தேன்<br /> ஸாரி... அப்பா<br /> உங்களிடம் அடுத்த வாரம்<br /> பேசுகிறேன்!</p>.<p><strong>- சந்திரா சிவபாலன்</strong></p>