<p><strong>இ</strong>ந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான் <br /> என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது. <br /> நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால் <br /> அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான் <br /> என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.</p>.<p>அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.<br /> அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.<br /> பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்ட<br /> குறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.</p>.<p>எல்லாவற்றையும்விட, எதை, எப்படி, எவ்விதம்,<br /> கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்த<br /> சதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.</p>.<p>அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளை<br /> முதலில் செய்து கொடுத்தார்கள்.</p>.<p>ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.</p>.<p>இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.</p>.<p>மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.</p>.<p>ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை<br /> என்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறு<br /> முகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்துகொண்டான்.<br /> ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களை<br /> வைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.</p>.<p>அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை,<br /> நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,<br /> மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்,<br /> மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்,<br /> இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.</p>.<p>''வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்<br /> உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்<br /> பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்கள்<br /> மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.</p>.<p>''ஏன்?'' என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி’ என்கிற<br /> புதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.<br /> ''அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றி<br /> கிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொரு<br /> புதிய முகமூடியையும் உலகம் வழங்கும்'' என்று பதில் வந்தது.</p>.<p>''அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?'' என்றான்<br /> உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்<br /> விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.</p>.<p>''அவன் இரானில் இருக்கலாம், சீனாவில் இருக்கலாம்,<br /> கியூபாவில் இருக்கலாம், வெனிசுலாவில் இருக்கலாம். அல்லது<br /> வட கொரியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இருக்கலாம்...''</p>.<p>''சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டிய<br /> அந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...<br /> அந்தக் கொலை சாசனத்தில் இப்போது<br /> கையப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்<br /> ஏற்பாடு செய்யுங்கள்'' என்றான் உலக மகா அரக்கன்<br /> இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!</p>
<p><strong>இ</strong>ந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான் <br /> என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது. <br /> நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால் <br /> அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான் <br /> என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.</p>.<p>அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.<br /> அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.<br /> பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்ட<br /> குறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.</p>.<p>எல்லாவற்றையும்விட, எதை, எப்படி, எவ்விதம்,<br /> கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்த<br /> சதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.</p>.<p>அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளை<br /> முதலில் செய்து கொடுத்தார்கள்.</p>.<p>ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.</p>.<p>இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.</p>.<p>மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.</p>.<p>ஜனநாயகம், மனித உரிமை, சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை<br /> என்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறு<br /> முகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்துகொண்டான்.<br /> ஆனால், கையில் கொலை வெறி ஆயுதங்களை<br /> வைத்துக்கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.</p>.<p>அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை,<br /> நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்,<br /> மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்,<br /> மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்,<br /> இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.</p>.<p>''வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்<br /> உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்<br /> பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்'' என்றார்கள்<br /> மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.</p>.<p>''ஏன்?'' என்றான் 'தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி’ என்கிற<br /> புதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.<br /> ''அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றி<br /> கிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொரு<br /> புதிய முகமூடியையும் உலகம் வழங்கும்'' என்று பதில் வந்தது.</p>.<p>''அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?'' என்றான்<br /> உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்<br /> விவாதித்துக்கொண்டு விடை அளித்தார்கள்.</p>.<p>''அவன் இரானில் இருக்கலாம், சீனாவில் இருக்கலாம்,<br /> கியூபாவில் இருக்கலாம், வெனிசுலாவில் இருக்கலாம். அல்லது<br /> வட கொரியாவிலோ ஆப்பிரிக்காவிலோ இருக்கலாம்...''</p>.<p>''சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டிய<br /> அந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...<br /> அந்தக் கொலை சாசனத்தில் இப்போது<br /> கையப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்<br /> ஏற்பாடு செய்யுங்கள்'' என்றான் உலக மகா அரக்கன்<br /> இராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட ரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!</p>