<p>அழுவதற்கும் முடியாமல்<br /> </p>. அழுகின்றேன் அம்மா. உன் தூய மகன் கருவறையைத். தொழுகின்றேன் அம்மா.<p>என் இனத்தை எழுப்புதற்கே<br /> இனிய மகன் பெற்றெடுத்தாய்<br /> இன்று<br /> எழ முடியா நோய்தன்னை<br /> எதற்கம்மா தத்தெடுத்தாய்?</p>.<p>ஈரய்ந்து மாதந்தான்<br /> உன் பிள்ளை<br /> உன் வயிற்றில் இருந்தான்<br /> பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க<br /> காடென்னும் கருவறைக்குள்<br /> கன காலம்<br /> கன காலம் கரந்தான்</p>.<p>தமிழருக்கே தெரியாமல்<br /> தமிழருக்கே உழைத்தான்<br /> தன் தம்பி தன் தங்கை<br /> தமிழீழம் தனைக் காண<br /> தன்னோடு களமாட அழைத்தான்<br /> தம் நண்பர் கயமைக்கும்<br /> தகவில்லார் சிறுமைக்கும்<br /> தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்</p>.<p>சிறு துளியும் கறை சொல்ல <br /> முடியாத வெள்ளை <br /> எம் வேர்த் தமிழின்<br /> சீர் மீட்கக் கருவான பிள்ளை</p>.<p>என் தந்தை என் அன்னை<br /> என் பிள்ளை என்றே<br /> எப்போதும் எப்போதும்<br /> இவன் பார்த்ததில்லை</p>.<p>அவருக்குச் சொத்தாகத்<br /> தப்பாகத் தப்பாகத்<br /> துளியேனும் முறை மீறிப்<br /> பொருள் சேர்த்ததில்லை</p>.<p>அத்தனைத் தாய்க்கும்<br /> மகனாய் இருந்தான்<br /> அத்தனைச் சேய்க்கும்<br /> அன்னையாய்ச் சிறந்தான்</p>.<p>புலம்பெயர்ப் பிள்ளைகள்<br /> புத்திக்குள் போனவன்<br /> அவர்தம் பொறுக்கா குளிருக்கும்<br /> போர்வையாய் ஆனவன்</p>.<p>இணையிலா இசையினில்<br /> ஈடிலா ஆடலில்<br /> எம் இனப் பிள்ளையை<br /> ஈடுபடுத்தினான்</p>.<p>இடையறா முயற்சியால்<br /> இடை விடா பயிற்சியால்<br /> உடல்களில் உயிர்களில்<br /> உயிர்த் தமிழ் ஊறிய<br /> உளவியல் உளவியல்<br /> மேடை நடத்தினான்</p>.<p>நம்முடன் வாழ்ந்தவன்<br /> நமக்கென வாழ்ந்ததை<br /> நாமா நாமா<br /> நன்கறிந்தோம்</p>.<p>நா கூசாமல் கூசாமல்<br /> நல்ல அத்தமிழனை<br /> வன்முறையாளனாய்<br /> வாய் குழறிப் பேசியே<br /> வரலாற்றில் பெயரிழந்தோம்</p>.<p>தாய்மொழி அறியாத<br /> தலைமுறை ஒன்றிங்கு<br /> தலைவரை உணர்ந்து எழும்<br /> அன்றுதான்<br /> தக தக தக தக<br /> தக தக தக வென<br /> தமிழினம் உயர்ந்து எழும்</p>.<p>தன் பிள்ளை சொகுசாகத்<br /> தப்பித்துப் போக<br /> ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?<br /> போடா போடா<br /> அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி<br /> மாவீரர் பட்டியலில் படமாகினான்</p>.<p>தாய்த் தமிழ்நாட்டில்<br /> வாழ்ந்த தன்<br /> தாயையும் தந்தையையும்<br /> அவசரமாய் அழைத்தாங்கே<br /> குடியேற்றினான்</p>.<p>மனிதமற்ற கயவர்களின்<br /> மரண நெடி நாட்களிலே<br /> அவர்களையும் மக்களுடன்<br /> அலையவிட்டு அலையவிட்டு<br /> அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்</p>.<p>என்னதான் குறை சொல்ல முடியும்<br /> அம்மா உன் பிள்ளையை<br /> என்றுதான் எவர் வெல்ல முடியும்<br /> இல்லையென்றா இவர் கணக்கு முடியும்<br /> உன் பிள்ளை இல்லையென்றால்<br /> இல்லையென்றால்<br /> இல்லை<br /> என்றால் எங்களுக்கு எப்படித்தான்<br /> இக் கிழக்கு விடியும்</p>.<p>வல்வெட்டித் துறையிலங்கே<br /> வாடிக் கிடப்பவளே<br /> உன் கண் முட்டும் கண்ணீரைக்<br /> கை நீட்டித் துடைக்கின்றோம்<br /> தலைவர்க்குப் பால் கொடுத்த<br /> மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்</p>.<p>ஆயிரம் மருத்துவர்கள்<br /> அம்மா உன் அருகிருந்துத்<br /> தீவிர சிகிச்சைதன்னைச்<br /> சிறப்பாகச் செய்வதற்கு<br /> ஆவலாய்க் காத்திருந்தும்<br /> அறமற்றக் கயவர்களின்<br /> அணை தாண்ட முடியாமல்<br /> அடி மனசில் அடி மனசில்<br /> அய்யோ வெடிக்கின்றோம்</p>.<p>சிங்களரும் உனைத் தேடி<br /> சிரம் தாழ்த்தி<br /> வணங்குகிறார் அம்மா<br /> உன் சிறந்த மகன் தூய்மைக்குச் <br /> சிறிதேனும் இணங்குகிறார்</p>.<p>உறவான தாய்த் தமிழர்<br /> ஊமையாய்ப் பார்த்திருப்போம்<br /> உறவற்ற எவர்களையோ<br /> அன்னையென்றும் அம்மையென்றும்<br /> அனுதினமும் தோத்தரிப்போம்</p>.<p>முள்வேலிக் கம்பிக்குள்<br /> உம் காயங்கள் கொத்திக்<br /> கண்ணீரில் பசியாறிக்<br /> கடல் தாண்டி வந்த<br /> அந்தக் காகங்கள்<br /> உம் கதையைக் <br /> கதறி உரைக்கிறதே</p>.<p>ஏமாறச் சம்மதித்து<br /> எவருக்கும் தலையாட்டும்<br /> எந்திரமாய் ஆனதனால்<br /> எம் சனங்கள் உம் துயரை<br /> உமியளவும் உணராமல்<br /> உறங்கிக் கிடக்கிறதே</p>.<p>உலக அற மன்றம்<br /> ஒரு கேள்வி கேட்கலையே<br /> உம் உரிமைக்குத் தடை நீக்க<br /> ஒரு நீதி வாய்க்கலையே</p>.<p>ஒன்று மட்டும் உறுதியம்மா...<br /> ஈழக் கதவுகளை<br /> என் தாயே என் தாயே<br /> உன் மகன்தான் உன் மகன்தான்<br /> திறப்பான்<br /> உன் ஈர விழியருகில்<br /> என் தாயே என் தாயே<br /> மிக விரைவில் உன் பிள்ளை<br /> உன் பிள்ளை இருப்பான்!</p>
<p>அழுவதற்கும் முடியாமல்<br /> </p>. அழுகின்றேன் அம்மா. உன் தூய மகன் கருவறையைத். தொழுகின்றேன் அம்மா.<p>என் இனத்தை எழுப்புதற்கே<br /> இனிய மகன் பெற்றெடுத்தாய்<br /> இன்று<br /> எழ முடியா நோய்தன்னை<br /> எதற்கம்மா தத்தெடுத்தாய்?</p>.<p>ஈரய்ந்து மாதந்தான்<br /> உன் பிள்ளை<br /> உன் வயிற்றில் இருந்தான்<br /> பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க<br /> காடென்னும் கருவறைக்குள்<br /> கன காலம்<br /> கன காலம் கரந்தான்</p>.<p>தமிழருக்கே தெரியாமல்<br /> தமிழருக்கே உழைத்தான்<br /> தன் தம்பி தன் தங்கை<br /> தமிழீழம் தனைக் காண<br /> தன்னோடு களமாட அழைத்தான்<br /> தம் நண்பர் கயமைக்கும்<br /> தகவில்லார் சிறுமைக்கும்<br /> தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்</p>.<p>சிறு துளியும் கறை சொல்ல <br /> முடியாத வெள்ளை <br /> எம் வேர்த் தமிழின்<br /> சீர் மீட்கக் கருவான பிள்ளை</p>.<p>என் தந்தை என் அன்னை<br /> என் பிள்ளை என்றே<br /> எப்போதும் எப்போதும்<br /> இவன் பார்த்ததில்லை</p>.<p>அவருக்குச் சொத்தாகத்<br /> தப்பாகத் தப்பாகத்<br /> துளியேனும் முறை மீறிப்<br /> பொருள் சேர்த்ததில்லை</p>.<p>அத்தனைத் தாய்க்கும்<br /> மகனாய் இருந்தான்<br /> அத்தனைச் சேய்க்கும்<br /> அன்னையாய்ச் சிறந்தான்</p>.<p>புலம்பெயர்ப் பிள்ளைகள்<br /> புத்திக்குள் போனவன்<br /> அவர்தம் பொறுக்கா குளிருக்கும்<br /> போர்வையாய் ஆனவன்</p>.<p>இணையிலா இசையினில்<br /> ஈடிலா ஆடலில்<br /> எம் இனப் பிள்ளையை<br /> ஈடுபடுத்தினான்</p>.<p>இடையறா முயற்சியால்<br /> இடை விடா பயிற்சியால்<br /> உடல்களில் உயிர்களில்<br /> உயிர்த் தமிழ் ஊறிய<br /> உளவியல் உளவியல்<br /> மேடை நடத்தினான்</p>.<p>நம்முடன் வாழ்ந்தவன்<br /> நமக்கென வாழ்ந்ததை<br /> நாமா நாமா<br /> நன்கறிந்தோம்</p>.<p>நா கூசாமல் கூசாமல்<br /> நல்ல அத்தமிழனை<br /> வன்முறையாளனாய்<br /> வாய் குழறிப் பேசியே<br /> வரலாற்றில் பெயரிழந்தோம்</p>.<p>தாய்மொழி அறியாத<br /> தலைமுறை ஒன்றிங்கு<br /> தலைவரை உணர்ந்து எழும்<br /> அன்றுதான்<br /> தக தக தக தக<br /> தக தக தக வென<br /> தமிழினம் உயர்ந்து எழும்</p>.<p>தன் பிள்ளை சொகுசாகத்<br /> தப்பித்துப் போக<br /> ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?<br /> போடா போடா<br /> அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி<br /> மாவீரர் பட்டியலில் படமாகினான்</p>.<p>தாய்த் தமிழ்நாட்டில்<br /> வாழ்ந்த தன்<br /> தாயையும் தந்தையையும்<br /> அவசரமாய் அழைத்தாங்கே<br /> குடியேற்றினான்</p>.<p>மனிதமற்ற கயவர்களின்<br /> மரண நெடி நாட்களிலே<br /> அவர்களையும் மக்களுடன்<br /> அலையவிட்டு அலையவிட்டு<br /> அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்</p>.<p>என்னதான் குறை சொல்ல முடியும்<br /> அம்மா உன் பிள்ளையை<br /> என்றுதான் எவர் வெல்ல முடியும்<br /> இல்லையென்றா இவர் கணக்கு முடியும்<br /> உன் பிள்ளை இல்லையென்றால்<br /> இல்லையென்றால்<br /> இல்லை<br /> என்றால் எங்களுக்கு எப்படித்தான்<br /> இக் கிழக்கு விடியும்</p>.<p>வல்வெட்டித் துறையிலங்கே<br /> வாடிக் கிடப்பவளே<br /> உன் கண் முட்டும் கண்ணீரைக்<br /> கை நீட்டித் துடைக்கின்றோம்<br /> தலைவர்க்குப் பால் கொடுத்த<br /> மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்</p>.<p>ஆயிரம் மருத்துவர்கள்<br /> அம்மா உன் அருகிருந்துத்<br /> தீவிர சிகிச்சைதன்னைச்<br /> சிறப்பாகச் செய்வதற்கு<br /> ஆவலாய்க் காத்திருந்தும்<br /> அறமற்றக் கயவர்களின்<br /> அணை தாண்ட முடியாமல்<br /> அடி மனசில் அடி மனசில்<br /> அய்யோ வெடிக்கின்றோம்</p>.<p>சிங்களரும் உனைத் தேடி<br /> சிரம் தாழ்த்தி<br /> வணங்குகிறார் அம்மா<br /> உன் சிறந்த மகன் தூய்மைக்குச் <br /> சிறிதேனும் இணங்குகிறார்</p>.<p>உறவான தாய்த் தமிழர்<br /> ஊமையாய்ப் பார்த்திருப்போம்<br /> உறவற்ற எவர்களையோ<br /> அன்னையென்றும் அம்மையென்றும்<br /> அனுதினமும் தோத்தரிப்போம்</p>.<p>முள்வேலிக் கம்பிக்குள்<br /> உம் காயங்கள் கொத்திக்<br /> கண்ணீரில் பசியாறிக்<br /> கடல் தாண்டி வந்த<br /> அந்தக் காகங்கள்<br /> உம் கதையைக் <br /> கதறி உரைக்கிறதே</p>.<p>ஏமாறச் சம்மதித்து<br /> எவருக்கும் தலையாட்டும்<br /> எந்திரமாய் ஆனதனால்<br /> எம் சனங்கள் உம் துயரை<br /> உமியளவும் உணராமல்<br /> உறங்கிக் கிடக்கிறதே</p>.<p>உலக அற மன்றம்<br /> ஒரு கேள்வி கேட்கலையே<br /> உம் உரிமைக்குத் தடை நீக்க<br /> ஒரு நீதி வாய்க்கலையே</p>.<p>ஒன்று மட்டும் உறுதியம்மா...<br /> ஈழக் கதவுகளை<br /> என் தாயே என் தாயே<br /> உன் மகன்தான் உன் மகன்தான்<br /> திறப்பான்<br /> உன் ஈர விழியருகில்<br /> என் தாயே என் தாயே<br /> மிக விரைவில் உன் பிள்ளை<br /> உன் பிள்ளை இருப்பான்!</p>