<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>எழுதுவதல்ல கவிதை </strong></span></p>.<p> <strong>உ</strong>றங்குவதற்கு முன்பு<br /> விழிக்கும் கவிதைகள்<br /> விழித்த பின் உலர்ந்துவிடுவதை<br /> எப்போதும் தவிர்க்க முடிவது இல்லை.<br /> எழுதுகோலும் தாளும்<br /> இல்லாதபோது தோன்றும்<br /> கவிதைகள் துரதிருஷ்டமானவை.<br /> எழுதிய கவிதைகளைவிட<br /> எழுத நினைத்த கவிதைகள்<br /> அதிகம்.<br /> மிகச் சிறந்த கவிதைகள்<br /> இன்னும் எழுதப்படவே இல்லை.<br /> ஆக, எழுதியதால் மட்டுமே<br /> கவிதையைக் கவிதை என்று<br /> சொல்வதற்கில்லை!</p>.<p><strong>- சு.இரமேஷ் </strong></p>.<p><span style="color: #993366"><strong>வெளிச்சத்தின் இருள் </strong></span></p>.<p><strong>ப</strong>கலிலும் எரிந்தது<br /> தெரு விளக்கு<br /> விளக்குக் கம்பத்தில்<br /> காக்கை<br /> விரட்டப்படாத<br /> இருளாகத் தனித்திருந்தது!</p>.<p><strong>- மா.தாமோதரன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>வெயில் தேங்கும் கிண்ணம் </strong></span></p>.<p><strong>ஜ</strong>ன்னல் வழியே நுழையும்<br /> சொற்ப வெயில்<br /> பாப்பாவுக்கான கிண்ணத்தில்<br /> தேங்குகிறது<br /> அதை<br /> செர்லாக் கலக்குவதற்கு<br /> எடுத்துப் போகிறாள்<br /> மனைவி!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #003300"><strong>ஆதியும் அந்தமும் </strong></span></p>.<p><strong>அ</strong>டர் வனமொன்றில்<br /> புதைந்திருக்கும்<br /> உன் மௌனத்தின்<br /> சொற்களுடன் எழுகிறது<br /> ஒரு பறவை... ஒரு மிருகம்<br /> பெரு மழையன்றில்<br /> குளிர்ந்திருக்கும்<br /> உன் பார்வையின்<br /> ஆழங்களுடன் விழுகிறது<br /> ஒரு ஆலங்கட்டி... ஒரு பாறை<br /> மென்கொலுசொலியில்<br /> ஒளிர்ந்திருக்கும்<br /> உன் புன்னகையின்<br /> நெளிவுகளுடன் சுரக்கிறது<br /> ஒரு துளி பால்...<br /> ஒரு துளி விஷம்<br /> மீளாத் துயரத்தில்<br /> மீட்டியவாறே இருக்கும்<br /> உன் சுவாசத்தின்<br /> ராகங்களுடன் துளிர்க்கிறது<br /> ஒரு வாழ்வு... ஒரு மரணம்!</p>.<p><strong>- வேல் கண்ணன் </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>பாடங்கள் </strong></span></p>.<p><strong>ச</strong>ரிகாஷா செத்தாள்<br /> 'ஈவ் டீஸிங்’ தடை வந்தது<br /> நாவரசு செத்தான்<br /> 'ராகிங்’ தடை வந்தது.<br /> ஓமலூர் சுகன்யா செத்தாள்<br /> பள்ளிக் கிணற்றை மூடினோம்<br /> செம்மொழிக் கவிதை வந்ததால்<br /> பள்ளியையே மூடினோம்<br /> மாணவர் மரணங்களில்<br /> அரசுக்குப் பாடங்கள்<br /> மாணவர் பாடங்களில்<br /> நாகரிகத்துக்கு மரணங்கள்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>எழுதுவதல்ல கவிதை </strong></span></p>.<p> <strong>உ</strong>றங்குவதற்கு முன்பு<br /> விழிக்கும் கவிதைகள்<br /> விழித்த பின் உலர்ந்துவிடுவதை<br /> எப்போதும் தவிர்க்க முடிவது இல்லை.<br /> எழுதுகோலும் தாளும்<br /> இல்லாதபோது தோன்றும்<br /> கவிதைகள் துரதிருஷ்டமானவை.<br /> எழுதிய கவிதைகளைவிட<br /> எழுத நினைத்த கவிதைகள்<br /> அதிகம்.<br /> மிகச் சிறந்த கவிதைகள்<br /> இன்னும் எழுதப்படவே இல்லை.<br /> ஆக, எழுதியதால் மட்டுமே<br /> கவிதையைக் கவிதை என்று<br /> சொல்வதற்கில்லை!</p>.<p><strong>- சு.இரமேஷ் </strong></p>.<p><span style="color: #993366"><strong>வெளிச்சத்தின் இருள் </strong></span></p>.<p><strong>ப</strong>கலிலும் எரிந்தது<br /> தெரு விளக்கு<br /> விளக்குக் கம்பத்தில்<br /> காக்கை<br /> விரட்டப்படாத<br /> இருளாகத் தனித்திருந்தது!</p>.<p><strong>- மா.தாமோதரன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>வெயில் தேங்கும் கிண்ணம் </strong></span></p>.<p><strong>ஜ</strong>ன்னல் வழியே நுழையும்<br /> சொற்ப வெயில்<br /> பாப்பாவுக்கான கிண்ணத்தில்<br /> தேங்குகிறது<br /> அதை<br /> செர்லாக் கலக்குவதற்கு<br /> எடுத்துப் போகிறாள்<br /> மனைவி!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #003300"><strong>ஆதியும் அந்தமும் </strong></span></p>.<p><strong>அ</strong>டர் வனமொன்றில்<br /> புதைந்திருக்கும்<br /> உன் மௌனத்தின்<br /> சொற்களுடன் எழுகிறது<br /> ஒரு பறவை... ஒரு மிருகம்<br /> பெரு மழையன்றில்<br /> குளிர்ந்திருக்கும்<br /> உன் பார்வையின்<br /> ஆழங்களுடன் விழுகிறது<br /> ஒரு ஆலங்கட்டி... ஒரு பாறை<br /> மென்கொலுசொலியில்<br /> ஒளிர்ந்திருக்கும்<br /> உன் புன்னகையின்<br /> நெளிவுகளுடன் சுரக்கிறது<br /> ஒரு துளி பால்...<br /> ஒரு துளி விஷம்<br /> மீளாத் துயரத்தில்<br /> மீட்டியவாறே இருக்கும்<br /> உன் சுவாசத்தின்<br /> ராகங்களுடன் துளிர்க்கிறது<br /> ஒரு வாழ்வு... ஒரு மரணம்!</p>.<p><strong>- வேல் கண்ணன் </strong></p>.<p><span style="color: #ff6600"><strong>பாடங்கள் </strong></span></p>.<p><strong>ச</strong>ரிகாஷா செத்தாள்<br /> 'ஈவ் டீஸிங்’ தடை வந்தது<br /> நாவரசு செத்தான்<br /> 'ராகிங்’ தடை வந்தது.<br /> ஓமலூர் சுகன்யா செத்தாள்<br /> பள்ளிக் கிணற்றை மூடினோம்<br /> செம்மொழிக் கவிதை வந்ததால்<br /> பள்ளியையே மூடினோம்<br /> மாணவர் மரணங்களில்<br /> அரசுக்குப் பாடங்கள்<br /> மாணவர் பாடங்களில்<br /> நாகரிகத்துக்கு மரணங்கள்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி</strong></p>