##~## |
குப்பைகளில் இருந்து
கவிதைகளைச் சேகரிக்கும்
சிறுவன் நான்.
எரியும் சூரியனுக்குக் கீழே
நான் வெயிலின் மகன்.
தனிமையான இரவு வானத்தின் கீழே
நான் நட்சத்திரத்தின் பிள்ளை
மழையில் என் வசிப்பிடம்
மூழ்கும்போது
தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில்
ஓர் உயிர் நான்.
ஈரக் குப்பை
உலர் குப்பை
மக்காத குப்பை அனைத்தும்
எனது கைகளுக்குத் தெரியும்
கண்ணாடிப் பொருட்களால்
ஊறுபட்ட காயங்களும் தழும்புகளும்
எனக்கு உண்டு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நட்சத்திரத்தின் உயரத்திலிருந்து
குப்பைத் தொட்டிகளைப் பார்த்தால்
இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால்
ஆனதாய் நீங்கள் சொல்லக்கூடும்
ஆனால் உண்மையில்
இவை ஆழமற்றவை...
நான் நடக்கும் நிலத்துக்கு அடியில்
கடல்கொண்ட நகரங்களும்
மூதாதையரும் அவர்தம் மந்திர மொழியும்
புதைந்துள்ளது எனக்கும் தெரியும்.
ஆனாலும் ஓர் ஆணுறையை
பால்கனியிலிருந்து எறியப்படும்
உலர்ந்த மலர்ச் சரங்களை
குழந்தைகளின் ஆடைகளை
தலை உடல்
தனியாகப் பிய்க்கப்பட்ட பொம்மைகளை
விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை
ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளைச்
சுமந்து செல்லும்போது
பூமியின் பாரத்தை
உடைந்த சிலம்புகளைச் சுமக்கும்
புனித துக்கம் எனக்கு!
படம் :விஜய்மணி