<p>எட்டு வயதில்தான்<br /> முதல்முறையாக அவன்<br /> கிணற்றைப் பார்த்தான்.</p>.<p>அவர்கள் மாறி வந்த ஊரின்<br /> வீதிகள் நடுவிலும்<br /> தெரு மூலைகளிலும் இருந்த<br /> கிணறுகளை<br /> எட்டிப் பார்த்துக்கொண்டே<br /> பள்ளிக்குப் போவான்.<br /> சில கிணறுகள் ஈர வாசனையுடன்<br /> தலையில் பூச்சூடிப் பின்னலிட்ட பெண்போல<br /> சகடைச் சக்கரம்<br /> கயிற்று வாளியுடன் நிற்கும்.</p>.<p>சில கிணறுகள் அடி தெரியாத<br /> ஆழத்துடன்<br /> இருட்டுக் குரலாய் அவனை அழைக்கும்...</p>.<p>சில பாழுங் கிணறுகளில்<br /> முயல் பழி வாங்கிய<br /> சிங்கத்தின் பிம்பத்தையும்<br /> அவன் உற்றுத் தேடினான்...<br /> பள்ளிவிடும் சமயம்<br /> ஊரின் எல்லாக் கிணறுகளும்<br /> அவனுக்காகக் காத்திருக்கும்.<br /> அவன் அவற்றைப் பார்த்து<br /> விசாரித்தபடியே<br /> புத்தகச் சுமையுடன் மெதுவாய் நடந்து<br /> தன் வீடு திரும்புவான்.</p>.<p>கிணறுகள் அவனுக்கு அறிமுகமான<br /> நாட்களில் ஒன்றில்தான்<br /> கோயில் சுவரில்<br /> நல்லதங்காள் சுவரொட்டியைப் பார்த்தான்.<br /> வழக்கமாய்<br /> சினிமாவுக்கு அழைத்துப்போகும்<br /> அம்மா<br /> அவனைக் கூட்டிப்போகவில்லை.<br /> பின்னொரு நாள்<br /> அம்மா சொன்ன நல்லதங்காள்<br /> கதையைக் கேட்ட பிறகு<br /> கிணறுகளின் பக்கம்<br /> அவனை யாரும் பார்க்கவேயில்லை!</p>
<p>எட்டு வயதில்தான்<br /> முதல்முறையாக அவன்<br /> கிணற்றைப் பார்த்தான்.</p>.<p>அவர்கள் மாறி வந்த ஊரின்<br /> வீதிகள் நடுவிலும்<br /> தெரு மூலைகளிலும் இருந்த<br /> கிணறுகளை<br /> எட்டிப் பார்த்துக்கொண்டே<br /> பள்ளிக்குப் போவான்.<br /> சில கிணறுகள் ஈர வாசனையுடன்<br /> தலையில் பூச்சூடிப் பின்னலிட்ட பெண்போல<br /> சகடைச் சக்கரம்<br /> கயிற்று வாளியுடன் நிற்கும்.</p>.<p>சில கிணறுகள் அடி தெரியாத<br /> ஆழத்துடன்<br /> இருட்டுக் குரலாய் அவனை அழைக்கும்...</p>.<p>சில பாழுங் கிணறுகளில்<br /> முயல் பழி வாங்கிய<br /> சிங்கத்தின் பிம்பத்தையும்<br /> அவன் உற்றுத் தேடினான்...<br /> பள்ளிவிடும் சமயம்<br /> ஊரின் எல்லாக் கிணறுகளும்<br /> அவனுக்காகக் காத்திருக்கும்.<br /> அவன் அவற்றைப் பார்த்து<br /> விசாரித்தபடியே<br /> புத்தகச் சுமையுடன் மெதுவாய் நடந்து<br /> தன் வீடு திரும்புவான்.</p>.<p>கிணறுகள் அவனுக்கு அறிமுகமான<br /> நாட்களில் ஒன்றில்தான்<br /> கோயில் சுவரில்<br /> நல்லதங்காள் சுவரொட்டியைப் பார்த்தான்.<br /> வழக்கமாய்<br /> சினிமாவுக்கு அழைத்துப்போகும்<br /> அம்மா<br /> அவனைக் கூட்டிப்போகவில்லை.<br /> பின்னொரு நாள்<br /> அம்மா சொன்ன நல்லதங்காள்<br /> கதையைக் கேட்ட பிறகு<br /> கிணறுகளின் பக்கம்<br /> அவனை யாரும் பார்க்கவேயில்லை!</p>