<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #800000"><strong>நட்பு வட்டம் </strong></span></p>.<p>எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று<br /> வருடங்களில் இன்னமும் தெரியாது<br /> நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில்<br /> அவரவர் தேநீருக்கு<br /> அவரவரே காசு தருகிறோம்<br /> எப்போதும் தென்படுகிற வாட்ச்மேன்<br /> சிநேகமாகச் சிரித்தால்<br /> காசுக்குத்தானென்று எண்ணி<br /> அப்படியே பழக்கப்படுத்துகிறோம்<br /> அப்பாவுக்கு ஆனதைப்போல<br /> ரயிலில் சந்தித்த நண்பரென்று<br /> யாரும் திருமண அழைப்பிதழோடு<br /> வீட்டுக்கு வந்தது கிடையாது<br /> நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம்<br /> ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை<br /> நான்கு புளிப்பு மிட்டாய்களோடு<br /> முடித்துக்கொள்கிறோம் கவனமாக<br /> ஃபேஸ்புக்கில் மட்டும் என்னவோ<br /> Hiew hui tang உட்பட<br /> நான்கு நிலுவைகளையும் சேர்த்து<br /> இருநூற்றி எழுபது நண்பர்கள்!</p>.<p><strong>- ப.ராமச்சந்திரன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>கடற்கரை மணல் </strong></span></p>.<p><strong>உ</strong>னக்குப் பின் நானோ<br /> எனக்குப் பின் நீயோ<br /> சென்றிருக்கலாம் - இப்படி<br /> இருவரும் ஒரே நேரத்தில்<br /> எதிரெதிரே.</p>.<p> நொடி நேரம்<br /> கண்ணில் பட்டு மறையும்<br /> நிகழ்வுபோல்<br /> கடந்து போகிறோம்<br /> ஒன்றும் பரிமாறிக்கொள்ளாமல்.</p>.<p>சொற்களோ<br /> கடற்கரை மணலைப்போல்<br /> நம்முள்!</p>.<p><strong>- சு.முரளி </strong></p>.<p><span style="color: #993366"><strong>மடியில் கனம்? </strong></span></p>.<p><strong>அ</strong>ரசு மகளிர்<br /> மேல் நிலைப் பள்ளியில்<br /> ஆயிரம் மாணவிகளுக்கு<br /> மூன்று கழிவறைகள்<br /> முந்நூறு லேப்-டாப்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி </strong></p>.<p><span style="color: #3366ff"><strong>மழை இரவு </strong></span></p>.<p><strong>பி</strong>டிவாதம் மிகுந்த<br /> பூனைக் குட்டி<br /> இடைவிடாத மழை இரவில்...</p>.<p>எங்கோ பதுங்கியபடி<br /> குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது</p>.<p>இந்த இரவை...<br /> இந்த மழையை...<br /> இந்த மனிதர்களை!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #339966"><strong>இலைக் கற்றை! </strong></span></p>.<p><strong>எ</strong>ங்கே மேய்வது<br /> எவ்வளவு மேய்வது<br /> என்பதை<br /> ஆடுகள் தீர்மானிப்பதில்லை.</p>.<p>நேற்று மதியம்<br /> இலையைத் தின்ற ஆடுகள்<br /> இன்று மதியம்<br /> இலையில் இருக்கின்றன.</p>.<p>மேய்ப்பவர்கள்<br /> எப்போதும் தப்பிவிடுகிறார்கள்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி </strong></p>.<p><span style="color: #800000"><strong>உதிரும் கண்கள் </strong></span></p>.<p><strong>ப</strong>ள்ளி வாகனத்தில் ஏறியமர்ந்து<br /> கையசைத்துக்கொண்டே செல்கையில்<br /> அம்மாவின் ஈரக் கண்கள்<br /> உதிரத் தொடங்குகின்றன.<br /> வழியெங்கும் வகுப்பறை வரை<br /> உதிர்ந்துகிடக்கும்<br /> அம்மாவின் கண்களை<br /> மாலையில் வீடு திரும்புகையில்<br /> அள்ளி வருகிறாள்<br /> சிறுமி!</p>.<p><strong>- உழவன்</strong></p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #800000"><strong>நட்பு வட்டம் </strong></span></p>.<p>எதிர் வீட்டில் வசிப்பவர் யாரென்று<br /> வருடங்களில் இன்னமும் தெரியாது<br /> நண்பர்களாகச் சாப்பிடப் போன இடத்தில்<br /> அவரவர் தேநீருக்கு<br /> அவரவரே காசு தருகிறோம்<br /> எப்போதும் தென்படுகிற வாட்ச்மேன்<br /> சிநேகமாகச் சிரித்தால்<br /> காசுக்குத்தானென்று எண்ணி<br /> அப்படியே பழக்கப்படுத்துகிறோம்<br /> அப்பாவுக்கு ஆனதைப்போல<br /> ரயிலில் சந்தித்த நண்பரென்று<br /> யாரும் திருமண அழைப்பிதழோடு<br /> வீட்டுக்கு வந்தது கிடையாது<br /> நித்தம் பார்க்கிற மளிகைக்காரனிடம்<br /> ரெண்டு ரூபாய் சில்லறை மீதத்தை<br /> நான்கு புளிப்பு மிட்டாய்களோடு<br /> முடித்துக்கொள்கிறோம் கவனமாக<br /> ஃபேஸ்புக்கில் மட்டும் என்னவோ<br /> Hiew hui tang உட்பட<br /> நான்கு நிலுவைகளையும் சேர்த்து<br /> இருநூற்றி எழுபது நண்பர்கள்!</p>.<p><strong>- ப.ராமச்சந்திரன் </strong></p>.<p><span style="color: #ff0000"><strong>கடற்கரை மணல் </strong></span></p>.<p><strong>உ</strong>னக்குப் பின் நானோ<br /> எனக்குப் பின் நீயோ<br /> சென்றிருக்கலாம் - இப்படி<br /> இருவரும் ஒரே நேரத்தில்<br /> எதிரெதிரே.</p>.<p> நொடி நேரம்<br /> கண்ணில் பட்டு மறையும்<br /> நிகழ்வுபோல்<br /> கடந்து போகிறோம்<br /> ஒன்றும் பரிமாறிக்கொள்ளாமல்.</p>.<p>சொற்களோ<br /> கடற்கரை மணலைப்போல்<br /> நம்முள்!</p>.<p><strong>- சு.முரளி </strong></p>.<p><span style="color: #993366"><strong>மடியில் கனம்? </strong></span></p>.<p><strong>அ</strong>ரசு மகளிர்<br /> மேல் நிலைப் பள்ளியில்<br /> ஆயிரம் மாணவிகளுக்கு<br /> மூன்று கழிவறைகள்<br /> முந்நூறு லேப்-டாப்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி </strong></p>.<p><span style="color: #3366ff"><strong>மழை இரவு </strong></span></p>.<p><strong>பி</strong>டிவாதம் மிகுந்த<br /> பூனைக் குட்டி<br /> இடைவிடாத மழை இரவில்...</p>.<p>எங்கோ பதுங்கியபடி<br /> குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது</p>.<p>இந்த இரவை...<br /> இந்த மழையை...<br /> இந்த மனிதர்களை!</p>.<p><strong>- இளங்கோ </strong></p>.<p><span style="color: #339966"><strong>இலைக் கற்றை! </strong></span></p>.<p><strong>எ</strong>ங்கே மேய்வது<br /> எவ்வளவு மேய்வது<br /> என்பதை<br /> ஆடுகள் தீர்மானிப்பதில்லை.</p>.<p>நேற்று மதியம்<br /> இலையைத் தின்ற ஆடுகள்<br /> இன்று மதியம்<br /> இலையில் இருக்கின்றன.</p>.<p>மேய்ப்பவர்கள்<br /> எப்போதும் தப்பிவிடுகிறார்கள்!</p>.<p><strong>- எஸ்.தளவாய்சாமி </strong></p>.<p><span style="color: #800000"><strong>உதிரும் கண்கள் </strong></span></p>.<p><strong>ப</strong>ள்ளி வாகனத்தில் ஏறியமர்ந்து<br /> கையசைத்துக்கொண்டே செல்கையில்<br /> அம்மாவின் ஈரக் கண்கள்<br /> உதிரத் தொடங்குகின்றன.<br /> வழியெங்கும் வகுப்பறை வரை<br /> உதிர்ந்துகிடக்கும்<br /> அம்மாவின் கண்களை<br /> மாலையில் வீடு திரும்புகையில்<br /> அள்ளி வருகிறாள்<br /> சிறுமி!</p>.<p><strong>- உழவன்</strong></p>