<p><span style="color: #003300"><strong>யாரும் அறியா தற்கொலைகள்</strong></span></p>.<p><strong>மே</strong>ற்குத் தொடர்ச்சிக் காடுகளில்<br /> ஒரு மலை வாசஸ்தலத்தின்<br /> கொண்டை ஊசி வளைவுகளை<br /> லாகவமாகக் கடந்துகொண்டிருக்கிறது<br /> ஓர் அரசுப் பேருந்து.<br /> அவள் கண்ணீரால்<br /> நனைந்திருக்கிறது<br /> இவன் வலது தோள் சட்டை.</p>.<p>கிராமம் ஒன்றின்<br /> மருந்துக் கடையில்<br /> நடுங்கியபடியே<br /> நெற்பயிருக்கெனச் சொல்லி<br /> பால்டாயில் வாங்கிக்கொண்டிருக்கிறது<br /> தோற்றுப்போன ஒரு குரல்.</p>.<p>அடித்துப் பெய்த பேய் மழைக்கு<br /> அடுத்த நாளில்<br /> பதினாறு கமான் பாலத்தின் மேல் நின்று<br /> காட்டாற்று வெள்ளத்தை<br /> வெறித்துப் பார்க்கின்றன<br /> கண்ணீர் தளும்பும்<br /> கண்கள் நான்கு.</p>.<p>அடுக்கு மாடிக் கட்டடமொன்றின்<br /> 27-வது மாடியில்<br /> மின்விசிறிக்கேற்ப<br /> இடவலமாக<br /> உருண்டுகொண்டிருக்கிறது<br /> சற்று முன் காலியான ஒரு<br /> தூக்க மாத்திரை குப்பி.</p>.<p>இரு கைகள்<br /> குளிர் ஆசுவாசம்கொண்டிருக்க<br /> இன்னுமிரண்டு படபடவென<br /> நேசத்தின் வேதனையைக்<br /> காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தன<br /> கண்கள் நிலைகொண்டிருந்தன.</p>.<p>எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து<br /> சனத்திரள் மிகுந்த நிலையத்தில்<br /> குலுங்கி நிற்கிறது<br /> இள ரத்தம் தோய்ந்த<br /> ஒரு பழைய இன்ஜின் பெட்டி!</p>.<p><strong>-வேங்கட ரமணன் </strong></p>.<p><span style="color: #800000"><strong>மௌனக் கூடு </strong></span></p>.<p><strong>இ</strong>ரைச்சலான கீழ் வீடு<br /> துன்புறுத்துகிறது<br /> காலியான பின் அதிகமாய்!</p>.<p><strong>-தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #0000ff"><strong>கத சொல்லப்போறேன்... </strong></span></p>.<p><strong>ப</strong>டுத்திருக்கும் குழந்தைக்கு<br /> கதை சொல்லித் தூங்கவைப்பது<br /> அலாதியானது எப்போதும்.<br /> கதை கேட்டதிலோ, சொல்வதிலோ<br /> அவ்வளவு பரிச்சயமில்லை என்னிடம்.<br /> எனினும்,<br /> ஓர் இலக்கில்லாமல் கதையை<br /> எங்கோ ஆரம்பித்து<br /> எப்படி முடிப்பது<br /> எனத் தெரியாமல்<br /> விழித்துக்கொண்டிருக்கையில்<br /> அது தெரிந்தோ என்னவோ<br /> குழந்தை எப்போதும்<br /> பாதியிலேயே<br /> தூங்கிவிடுகிறது!</p>.<p><strong>-கு.விநாயகமூர்த்தி </strong></p>.<p><span style="color: #339966"><strong>நிராகரிப்பு </strong></span></p>.<p>அனைத்து உயிரினங்களிலும்<br /> ஆணும் பெண்ணுமாய்<br /> ஒரு ஜோடி<br /> நோவாவின் கப்பலில்.<br /> நீராலழிந்த புவிக்கோளத்தின்<br /> மீட்டுருவாக்கத்தின்பின்<br /> திகைத்து நிற்கிறான் நோவா<br /> கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்<br /> பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த<br /> மூன்றாம் பாலினம் நோக்கி!</p>.<p><strong>-கவின் மலர்</strong></p>
<p><span style="color: #003300"><strong>யாரும் அறியா தற்கொலைகள்</strong></span></p>.<p><strong>மே</strong>ற்குத் தொடர்ச்சிக் காடுகளில்<br /> ஒரு மலை வாசஸ்தலத்தின்<br /> கொண்டை ஊசி வளைவுகளை<br /> லாகவமாகக் கடந்துகொண்டிருக்கிறது<br /> ஓர் அரசுப் பேருந்து.<br /> அவள் கண்ணீரால்<br /> நனைந்திருக்கிறது<br /> இவன் வலது தோள் சட்டை.</p>.<p>கிராமம் ஒன்றின்<br /> மருந்துக் கடையில்<br /> நடுங்கியபடியே<br /> நெற்பயிருக்கெனச் சொல்லி<br /> பால்டாயில் வாங்கிக்கொண்டிருக்கிறது<br /> தோற்றுப்போன ஒரு குரல்.</p>.<p>அடித்துப் பெய்த பேய் மழைக்கு<br /> அடுத்த நாளில்<br /> பதினாறு கமான் பாலத்தின் மேல் நின்று<br /> காட்டாற்று வெள்ளத்தை<br /> வெறித்துப் பார்க்கின்றன<br /> கண்ணீர் தளும்பும்<br /> கண்கள் நான்கு.</p>.<p>அடுக்கு மாடிக் கட்டடமொன்றின்<br /> 27-வது மாடியில்<br /> மின்விசிறிக்கேற்ப<br /> இடவலமாக<br /> உருண்டுகொண்டிருக்கிறது<br /> சற்று முன் காலியான ஒரு<br /> தூக்க மாத்திரை குப்பி.</p>.<p>இரு கைகள்<br /> குளிர் ஆசுவாசம்கொண்டிருக்க<br /> இன்னுமிரண்டு படபடவென<br /> நேசத்தின் வேதனையைக்<br /> காற்றில் கிறுக்கிக்கொண்டிருந்தன<br /> கண்கள் நிலைகொண்டிருந்தன.</p>.<p>எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து<br /> சனத்திரள் மிகுந்த நிலையத்தில்<br /> குலுங்கி நிற்கிறது<br /> இள ரத்தம் தோய்ந்த<br /> ஒரு பழைய இன்ஜின் பெட்டி!</p>.<p><strong>-வேங்கட ரமணன் </strong></p>.<p><span style="color: #800000"><strong>மௌனக் கூடு </strong></span></p>.<p><strong>இ</strong>ரைச்சலான கீழ் வீடு<br /> துன்புறுத்துகிறது<br /> காலியான பின் அதிகமாய்!</p>.<p><strong>-தேனம்மை லெட்சுமணன் </strong></p>.<p><span style="color: #0000ff"><strong>கத சொல்லப்போறேன்... </strong></span></p>.<p><strong>ப</strong>டுத்திருக்கும் குழந்தைக்கு<br /> கதை சொல்லித் தூங்கவைப்பது<br /> அலாதியானது எப்போதும்.<br /> கதை கேட்டதிலோ, சொல்வதிலோ<br /> அவ்வளவு பரிச்சயமில்லை என்னிடம்.<br /> எனினும்,<br /> ஓர் இலக்கில்லாமல் கதையை<br /> எங்கோ ஆரம்பித்து<br /> எப்படி முடிப்பது<br /> எனத் தெரியாமல்<br /> விழித்துக்கொண்டிருக்கையில்<br /> அது தெரிந்தோ என்னவோ<br /> குழந்தை எப்போதும்<br /> பாதியிலேயே<br /> தூங்கிவிடுகிறது!</p>.<p><strong>-கு.விநாயகமூர்த்தி </strong></p>.<p><span style="color: #339966"><strong>நிராகரிப்பு </strong></span></p>.<p>அனைத்து உயிரினங்களிலும்<br /> ஆணும் பெண்ணுமாய்<br /> ஒரு ஜோடி<br /> நோவாவின் கப்பலில்.<br /> நீராலழிந்த புவிக்கோளத்தின்<br /> மீட்டுருவாக்கத்தின்பின்<br /> திகைத்து நிற்கிறான் நோவா<br /> கப்பலில் இடம் மறுக்கப்பட்டும்<br /> பேரழிவுக்குப் பின்னும் உயிர்த்தெழுந்த<br /> மூன்றாம் பாலினம் நோக்கி!</p>.<p><strong>-கவின் மலர்</strong></p>