<p><strong>வி</strong>டாமல் விழும் அருவியை <br /> ஆச்சர்யமாகப் பார்க்கிறாள் <br /> ஒருநாள் விட்டு ஒருநாள் <br /> குழாயில் தண்ணீர் வரும் <br /> நகரத்திலிருந்து வந்த <br /> குடும்பத் தலைவி. <br /> குளித்துவிட்டுத் <br /> திரும்பும்போது <br /> குழாயை மூடாமல் <br /> கிளம்புவதைப்போல் <br /> தோன்றுகிறது அவளுக்கு. <br /> ஆளே இல்லாதபோதும் <br /> கொட்டிக்கொண்டிருக்கும் <br /> நீரின் ஓசை அவளைப் <br /> பைத்தியமாக அடிக்கிறது!</p>.<p><strong>- முகுந்த் நாகராஜன் </strong></p>.<p><strong>ஓ</strong>ட்டமாய் ஓடிக்கொண்டிருந்த<br /> முயலுக்கு<br /> ஆமையின் வேகத்தை நினைத்தவுடன்<br /> பொத்துக்கொண்டது சிரிப்பு</p>.<p>பகடியைப் பகிர்ந்துகொள்ள<br /> பக்கத்தில் நண்பர்களும் இல்லை</p>.<p>தனிமை துரத்த முயல் ஓடுகிறது<br /> ஆமையை நோக்கி</p>.<p>சிநேகத்தைப் பாடி நடந்தன<br /> இரண்டும்</p>.<p>ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை<br /> சுமந்து பார்த்த முயலுக்கு<br /> பொத்துக்கொண்டது அழுகை</p>.<p>பண்பட்ட ஆமையின்<br /> பாதச் சுவடுகளைப்<br /> பணிந்து தொழுதபடி<br /> பின் தொடர்கிறது முயல்!</p>.<p><strong>- இளையநிலா ஜான்சுந்தர் </strong></p>.<p><strong>ம</strong>ழையில் நனைந்தபடி<br /> செல்லும் ஆட்டோக்கள்<br /> அடம்பிடித்துக் குளிக்குமொரு<br /> குழந்தையின் சத்தங்களை<br /> எழுப்புகின்றன!</p>.<p><strong>- பிரதீப்குமார் </strong></p>.<p><strong>வீ</strong>தியில் வரையப்பட்ட<br /> கடவுளின் மீது<br /> வீசிப் போகின்றனர்<br /> நாணயங்களை<br /> ஏதேனும் ஒரு நாணயம்<br /> யதார்த்தமாய்<br /> விழுந்துவிடுகின்றது<br /> கடவுளின் நெற்றியிலும்<br /> விழுந்த நாணயங்களை<br /> ஒவ்வொன்றாய்<br /> பொறுக்கி எடுத்து<br /> ஓவியன் நகர்ந்துவிட<br /> இப்போது<br /> எடுக்க யாருமின்றிக்<br /> கிடக்கிறார்<br /> அந்த எல்லாம் வல்ல இறைவன்!</p>.<p><strong>- வே.விநாயகமூர்த்தி </strong></p>.<p><strong>வே</strong>லை தர<br /> முதன்முதலில்<br /> முதலாளி கோரியது<br /> என் சிறகுகளில் இருந்து<br /> சில இறகுகளை.</p>.<p>வேலைக்குச் சேர்ந்த<br /> சில நாட்களில்<br /> என்னைப் பாராட்டி<br /> இரண்டு இறகுகளை<br /> வாங்கிக்கொண்டார்.</p>.<p>சில மாதங்களுக்குப் பிறகு<br /> சில சூழ்நிலைகளை<br /> முன்வைத்து<br /> மூன்று சிறகுகளைப்<br /> பெற்றுக்கொண்டார்.</p>.<p>பின்னொரு நாள்<br /> வேலையைத் தக்கவைத்துக்கொள்ள<br /> வேண்டுமாயின்<br /> சில இறகுகள் வேண்டுமென்று<br /> மறைமுகமாய் மிரட்டி<br /> பிடுங்கிக்கொண்டார்.</p>.<p>சிறகுகளற்ற நான்<br /> உயரத்தில் பறக்கும்<br /> முதலாளியைப் பார்க்கிறேன்<br /> என் இறகொன்றால்<br /> தன் காது குடைந்தபடி அவர்<br /> இறகேதும் முளைத்துள்ளதா<br /> எனக் குனிந்து<br /> என்னைப் பார்க்கிறார்!</p>.<p><strong>- வீ.விஷ்ணுகுமார் </strong></p>.<p><strong>அ</strong>றை நண்பனின்<br /> கைபேசியைக் காணவில்லை.<br /> 'கடைசியாகப் பேசி முடித்து<br /> எங்கே வைத்தாய்?’<br /> 'சன்னல் வழியாக<br /> விழுந்திருக்குமோ?’<br /> கேட்டுக்கொண்டே<br /> எல்லா இடங்களிலும்<br /> தேடிக்கொண்டிருந்தோம் நாங்கள்<br /> நண்பனோ<br /> எங்கள் முகங்களில்<br /> தேடிக்கொண்டிருந்தான்!</p>.<p><strong>- ஆ.கீதம்லெனின் </strong></p>.<p><strong>ச</strong>ற்றே ஆறுதல்<br /> இன்னும் பழக்கப்படுத்தப்படவில்லை<br /> யானைகள்<br /> கத்தியைக் காட்டி<br /> காசு கேட்க!</p>.<p><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></p>
<p><strong>வி</strong>டாமல் விழும் அருவியை <br /> ஆச்சர்யமாகப் பார்க்கிறாள் <br /> ஒருநாள் விட்டு ஒருநாள் <br /> குழாயில் தண்ணீர் வரும் <br /> நகரத்திலிருந்து வந்த <br /> குடும்பத் தலைவி. <br /> குளித்துவிட்டுத் <br /> திரும்பும்போது <br /> குழாயை மூடாமல் <br /> கிளம்புவதைப்போல் <br /> தோன்றுகிறது அவளுக்கு. <br /> ஆளே இல்லாதபோதும் <br /> கொட்டிக்கொண்டிருக்கும் <br /> நீரின் ஓசை அவளைப் <br /> பைத்தியமாக அடிக்கிறது!</p>.<p><strong>- முகுந்த் நாகராஜன் </strong></p>.<p><strong>ஓ</strong>ட்டமாய் ஓடிக்கொண்டிருந்த<br /> முயலுக்கு<br /> ஆமையின் வேகத்தை நினைத்தவுடன்<br /> பொத்துக்கொண்டது சிரிப்பு</p>.<p>பகடியைப் பகிர்ந்துகொள்ள<br /> பக்கத்தில் நண்பர்களும் இல்லை</p>.<p>தனிமை துரத்த முயல் ஓடுகிறது<br /> ஆமையை நோக்கி</p>.<p>சிநேகத்தைப் பாடி நடந்தன<br /> இரண்டும்</p>.<p>ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை<br /> சுமந்து பார்த்த முயலுக்கு<br /> பொத்துக்கொண்டது அழுகை</p>.<p>பண்பட்ட ஆமையின்<br /> பாதச் சுவடுகளைப்<br /> பணிந்து தொழுதபடி<br /> பின் தொடர்கிறது முயல்!</p>.<p><strong>- இளையநிலா ஜான்சுந்தர் </strong></p>.<p><strong>ம</strong>ழையில் நனைந்தபடி<br /> செல்லும் ஆட்டோக்கள்<br /> அடம்பிடித்துக் குளிக்குமொரு<br /> குழந்தையின் சத்தங்களை<br /> எழுப்புகின்றன!</p>.<p><strong>- பிரதீப்குமார் </strong></p>.<p><strong>வீ</strong>தியில் வரையப்பட்ட<br /> கடவுளின் மீது<br /> வீசிப் போகின்றனர்<br /> நாணயங்களை<br /> ஏதேனும் ஒரு நாணயம்<br /> யதார்த்தமாய்<br /> விழுந்துவிடுகின்றது<br /> கடவுளின் நெற்றியிலும்<br /> விழுந்த நாணயங்களை<br /> ஒவ்வொன்றாய்<br /> பொறுக்கி எடுத்து<br /> ஓவியன் நகர்ந்துவிட<br /> இப்போது<br /> எடுக்க யாருமின்றிக்<br /> கிடக்கிறார்<br /> அந்த எல்லாம் வல்ல இறைவன்!</p>.<p><strong>- வே.விநாயகமூர்த்தி </strong></p>.<p><strong>வே</strong>லை தர<br /> முதன்முதலில்<br /> முதலாளி கோரியது<br /> என் சிறகுகளில் இருந்து<br /> சில இறகுகளை.</p>.<p>வேலைக்குச் சேர்ந்த<br /> சில நாட்களில்<br /> என்னைப் பாராட்டி<br /> இரண்டு இறகுகளை<br /> வாங்கிக்கொண்டார்.</p>.<p>சில மாதங்களுக்குப் பிறகு<br /> சில சூழ்நிலைகளை<br /> முன்வைத்து<br /> மூன்று சிறகுகளைப்<br /> பெற்றுக்கொண்டார்.</p>.<p>பின்னொரு நாள்<br /> வேலையைத் தக்கவைத்துக்கொள்ள<br /> வேண்டுமாயின்<br /> சில இறகுகள் வேண்டுமென்று<br /> மறைமுகமாய் மிரட்டி<br /> பிடுங்கிக்கொண்டார்.</p>.<p>சிறகுகளற்ற நான்<br /> உயரத்தில் பறக்கும்<br /> முதலாளியைப் பார்க்கிறேன்<br /> என் இறகொன்றால்<br /> தன் காது குடைந்தபடி அவர்<br /> இறகேதும் முளைத்துள்ளதா<br /> எனக் குனிந்து<br /> என்னைப் பார்க்கிறார்!</p>.<p><strong>- வீ.விஷ்ணுகுமார் </strong></p>.<p><strong>அ</strong>றை நண்பனின்<br /> கைபேசியைக் காணவில்லை.<br /> 'கடைசியாகப் பேசி முடித்து<br /> எங்கே வைத்தாய்?’<br /> 'சன்னல் வழியாக<br /> விழுந்திருக்குமோ?’<br /> கேட்டுக்கொண்டே<br /> எல்லா இடங்களிலும்<br /> தேடிக்கொண்டிருந்தோம் நாங்கள்<br /> நண்பனோ<br /> எங்கள் முகங்களில்<br /> தேடிக்கொண்டிருந்தான்!</p>.<p><strong>- ஆ.கீதம்லெனின் </strong></p>.<p><strong>ச</strong>ற்றே ஆறுதல்<br /> இன்னும் பழக்கப்படுத்தப்படவில்லை<br /> யானைகள்<br /> கத்தியைக் காட்டி<br /> காசு கேட்க!</p>.<p><strong>- வீ.விஷ்ணுகுமார்</strong></p>