<p><strong>ஒ</strong>ட்டகத்தின்</p><p>நிறத்தைப்போல மணலும்,</p><p>அதன் முதுகைப் போல</p><p>ஏற்ற இறக்கங்களுடனும் பாலைவனம்.</p><p>மெதுவாக ஏறி இறங்கி வரும்</p><p>வெயில்</p><p>கொண்டு வருகிறது</p><p>கானல் நீரையும்.</p><p><strong>தூ</strong>ரத்தில் தெரியும்</p><p>பேரீச்சம் மரத்தை நெருங்கி</p><p>அதன் மட்டைகளின் நிழலால்</p><p>அரேபியனைக் கட்டிப்போட்டுவிட்டு</p><p>வெயிலை மேய நகர்கிறது ஒட்டகம்.</p><p>காய்ந்துபோன குப்புஸ் ரொட்டிகளையும்</p><p>உலர்ந்த ஈத்தம்பழங்களையும் உண்பவனுக்கு</p><p>விக்கல் எடுப்பதற்குள்...</p><p>அரபியே, கனரக வாகனத்தைப்</p><p>பாலைவனத்திற்குள் வேகமாகச் செலுத்து.</p><p>உன் ஒட்டகங்களுக்குக் கொண்டு போகும்</p><p>பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில்</p><p>ஒரு குவளை மட்டும் அவனுக்குக் கொடு</p><p>அது அவன் குடும்பத்தின் கண்ணீர்.</p>.<p><strong>த</strong>ண்ணீரைச் சுமந்து வருவதற்கு</p><p>ஆட்டுத்தோல்கள் </p><p>நிறைய இருக்கின்றன,</p><p>பாலைவனத்தில் கிணறு </p><p>எங்கேயாவதுதான் இருக்கும்.</p><p>நீ சுமந்து வரும்</p><p>முதுகுப் பையில் நிரம்பி வழியும் நீர்,</p><p>ஆட்டிறைச்சியைத் தின்றுவிட்டு</p><p>அதன் தோலை உனக்களித்தது</p><p>முதலாளியின் கருணையே என நினைக்கும்</p><p>உன் நெஞ்சில்தான் எவ்வளவு ஈரம்.</p><p><strong>க</strong>டற்காகம் </p><p>தலைக்குமேல் பறக்கும்போதெல்லாம்</p><p>அவனுக்கு விமானத்தின் நினைவு வரும்,</p><p>கைகளைச் சிறகுகளாக்கிப் பறந்துபார்ப்பான்.</p><p>ஏனோ அவன் விமானம்</p><p>பாலைவனத்தை மட்டும் வட்டமடித்துவிட்டு</p><p>ஒட்டகக் கொட்டகையில்</p><p>தரையிறங்கிவிடுகிறது.</p>
<p><strong>ஒ</strong>ட்டகத்தின்</p><p>நிறத்தைப்போல மணலும்,</p><p>அதன் முதுகைப் போல</p><p>ஏற்ற இறக்கங்களுடனும் பாலைவனம்.</p><p>மெதுவாக ஏறி இறங்கி வரும்</p><p>வெயில்</p><p>கொண்டு வருகிறது</p><p>கானல் நீரையும்.</p><p><strong>தூ</strong>ரத்தில் தெரியும்</p><p>பேரீச்சம் மரத்தை நெருங்கி</p><p>அதன் மட்டைகளின் நிழலால்</p><p>அரேபியனைக் கட்டிப்போட்டுவிட்டு</p><p>வெயிலை மேய நகர்கிறது ஒட்டகம்.</p><p>காய்ந்துபோன குப்புஸ் ரொட்டிகளையும்</p><p>உலர்ந்த ஈத்தம்பழங்களையும் உண்பவனுக்கு</p><p>விக்கல் எடுப்பதற்குள்...</p><p>அரபியே, கனரக வாகனத்தைப்</p><p>பாலைவனத்திற்குள் வேகமாகச் செலுத்து.</p><p>உன் ஒட்டகங்களுக்குக் கொண்டு போகும்</p><p>பல்லாயிரம் லிட்டர் தண்ணீரில்</p><p>ஒரு குவளை மட்டும் அவனுக்குக் கொடு</p><p>அது அவன் குடும்பத்தின் கண்ணீர்.</p>.<p><strong>த</strong>ண்ணீரைச் சுமந்து வருவதற்கு</p><p>ஆட்டுத்தோல்கள் </p><p>நிறைய இருக்கின்றன,</p><p>பாலைவனத்தில் கிணறு </p><p>எங்கேயாவதுதான் இருக்கும்.</p><p>நீ சுமந்து வரும்</p><p>முதுகுப் பையில் நிரம்பி வழியும் நீர்,</p><p>ஆட்டிறைச்சியைத் தின்றுவிட்டு</p><p>அதன் தோலை உனக்களித்தது</p><p>முதலாளியின் கருணையே என நினைக்கும்</p><p>உன் நெஞ்சில்தான் எவ்வளவு ஈரம்.</p><p><strong>க</strong>டற்காகம் </p><p>தலைக்குமேல் பறக்கும்போதெல்லாம்</p><p>அவனுக்கு விமானத்தின் நினைவு வரும்,</p><p>கைகளைச் சிறகுகளாக்கிப் பறந்துபார்ப்பான்.</p><p>ஏனோ அவன் விமானம்</p><p>பாலைவனத்தை மட்டும் வட்டமடித்துவிட்டு</p><p>ஒட்டகக் கொட்டகையில்</p><p>தரையிறங்கிவிடுகிறது.</p>