<p>சாம்பல் பூனை ஒன்று </p><p>தலை மடக்கி</p><p>அரசு வேலிமதிலில் உறங்குகிறது</p><p>பழுப்பு இலைகள் நடைபாதையில் சுழலுகின்றன</p><p>ஆயிரம் அந்தரங்கங்களை மறைக்கும்</p><p>இந்த வணிகவீதி </p><p>கடலுக்கு அப்பாலும்</p><p>நீளும்போல</p><p>பயனாளிகள் செய்திகளுடன் நொதித்த மதுவருந்தி உணவுகளைத் தருவிக்கிறார்கள்</p><p>தொலைவில் தண்ணென அசையும் நீர்நிலைகளில் இருந்து</p><p>குளிர்ந்த காற்று வீசுகிறது</p><p>தானியக்கிடங்கின் வாசலில் சிதறிய மணிகளை </p><p>பொட் பொட்டென்று</p><p>கொத்தும் குருவிகள் பதறிப் பறக்கும்படி</p><p>அந்தப்பூனையை ஏனோ பாய்ந்து விரட்டினேன்</p><p>எதிர்மரத்தில் உந்தி முட்டுச்சந்திற்குள் அது தாவிக்கொண்டது</p><p>வேடிக்கை பார்க்காமல் நகருங்கள் என</p><p>யாரோ விரட்டுகிறார்கள்</p><p>பயணிகள் அமரும் நிழல் கட்டடத்தில் காலியாக இருந்த சிமென்ட் பெஞ்சில்</p><p>கால் மடக்கிப் படுத்துக்கொண்டேன்.</p>.<p>கோண்ட்வாரா மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து மேற்கே வந்தார்கள்</p><p>மக்காச் சோளம் முற்றிவிட்டதெனில்</p><p>வசந்தகாலம் வந்துவிடுகிறது</p><p>காலிக்கட்டில் முதல் பாய்மரம் நங்கூரம்</p><p>இட்டபோது வழி தெரிந்துவிட்டது</p><p>வாழைப்பழங்களின் வருகைக்குப்பின்</p><p>குரங்குகள் தோன்றிவிட்டன</p><p>மாட்சிமை தாங்கிய விக்டோரியா ஹாலில் மெல்லிய சாயத்துணி பண்டல்கள்</p><p>ஒரு உலோகத் தொழிற்சாலைக்கு</p><p>அனுமதி கிடைத்திருக்கிறது</p><p>காதல் கடிதங்களைத்தவிர பலநூறு மனுக்கள் குவிந்துள்ளன</p><p>மாரிக்கால மேகங்கள் மற்றும் கடல் ஓதங்களின்</p><p>வருகை அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>அத்தி இன்னும் பூக்கவில்லை</p><p>கால்நடைகள் திரும்பிவிட்டன</p><p>நிலுவையில் இருந்து ஓரிரு நீதிமன்றத்தீர்ப்புகள் மேசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன</p><p>தெருக்களில் யாரும் இல்லை</p><p>கை கழுவியாகிவிட்டது</p><p>அதோ உங்கள் நீர்மூழ்கிக்கப்பல்களின் தொலைநோக்கு முனை</p><p>தெரிகிறது நல்லது வாருங்கள்</p>
<p>சாம்பல் பூனை ஒன்று </p><p>தலை மடக்கி</p><p>அரசு வேலிமதிலில் உறங்குகிறது</p><p>பழுப்பு இலைகள் நடைபாதையில் சுழலுகின்றன</p><p>ஆயிரம் அந்தரங்கங்களை மறைக்கும்</p><p>இந்த வணிகவீதி </p><p>கடலுக்கு அப்பாலும்</p><p>நீளும்போல</p><p>பயனாளிகள் செய்திகளுடன் நொதித்த மதுவருந்தி உணவுகளைத் தருவிக்கிறார்கள்</p><p>தொலைவில் தண்ணென அசையும் நீர்நிலைகளில் இருந்து</p><p>குளிர்ந்த காற்று வீசுகிறது</p><p>தானியக்கிடங்கின் வாசலில் சிதறிய மணிகளை </p><p>பொட் பொட்டென்று</p><p>கொத்தும் குருவிகள் பதறிப் பறக்கும்படி</p><p>அந்தப்பூனையை ஏனோ பாய்ந்து விரட்டினேன்</p><p>எதிர்மரத்தில் உந்தி முட்டுச்சந்திற்குள் அது தாவிக்கொண்டது</p><p>வேடிக்கை பார்க்காமல் நகருங்கள் என</p><p>யாரோ விரட்டுகிறார்கள்</p><p>பயணிகள் அமரும் நிழல் கட்டடத்தில் காலியாக இருந்த சிமென்ட் பெஞ்சில்</p><p>கால் மடக்கிப் படுத்துக்கொண்டேன்.</p>.<p>கோண்ட்வாரா மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து மேற்கே வந்தார்கள்</p><p>மக்காச் சோளம் முற்றிவிட்டதெனில்</p><p>வசந்தகாலம் வந்துவிடுகிறது</p><p>காலிக்கட்டில் முதல் பாய்மரம் நங்கூரம்</p><p>இட்டபோது வழி தெரிந்துவிட்டது</p><p>வாழைப்பழங்களின் வருகைக்குப்பின்</p><p>குரங்குகள் தோன்றிவிட்டன</p><p>மாட்சிமை தாங்கிய விக்டோரியா ஹாலில் மெல்லிய சாயத்துணி பண்டல்கள்</p><p>ஒரு உலோகத் தொழிற்சாலைக்கு</p><p>அனுமதி கிடைத்திருக்கிறது</p><p>காதல் கடிதங்களைத்தவிர பலநூறு மனுக்கள் குவிந்துள்ளன</p><p>மாரிக்கால மேகங்கள் மற்றும் கடல் ஓதங்களின்</p><p>வருகை அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>அத்தி இன்னும் பூக்கவில்லை</p><p>கால்நடைகள் திரும்பிவிட்டன</p><p>நிலுவையில் இருந்து ஓரிரு நீதிமன்றத்தீர்ப்புகள் மேசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன</p><p>தெருக்களில் யாரும் இல்லை</p><p>கை கழுவியாகிவிட்டது</p><p>அதோ உங்கள் நீர்மூழ்கிக்கப்பல்களின் தொலைநோக்கு முனை</p><p>தெரிகிறது நல்லது வாருங்கள்</p>