<p><strong>ம</strong>லர்கிறது முல்லை</p><p>கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே</p><p>என் மாடித்தோட்டம்.</p><p>கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்</p><p>மரண அமைதி அதிர </p><p>கருவண்டுகள் இசைக்கின்றன</p><p>``அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.</p><p>*</p><p><strong>அ</strong>மேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி </p><p>உலகை வேட்டையாடுதே கொரோனா. </p><p>அடாது கொட்டும் வெண்பனியையும்</p><p>விழாவாய்க் கொண்டாடும் </p><p>ஒஸ்லோ நகரும் முடங்கியதே.</p><p>கூதிரில் தனித்த என் மனைவிக்கு </p><p>பூக்களும் இல்லை. </p><p>எனினும் எனினும்</p><p>இடுக்கண் வருங்கால் நகைக்கும் </p><p>புதல்வர்களை விட்டு வந்தேனே.</p>.<p>*</p><p><strong>வெ</strong>ற்றியெனக் கொரோனாக் கிருமிகள் துள்ளும்</p><p>பெசன்ட் நகர் கடற்கரையில்</p><p>கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல் </p><p>நண்டுகள் தொற்றும் இரவில்.</p><p>குடிசைகளுள் </p><p>படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்</p><p>வலிய விரல்கள் ஊர்கின்றன.</p><p>*</p><p><strong>சா</strong>த்தானே அப்பாலே போ</p><p>மனிதர்கள் கைவிடப்படுவதில்லை</p><p>ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.</p>
<p><strong>ம</strong>லர்கிறது முல்லை</p><p>கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே</p><p>என் மாடித்தோட்டம்.</p><p>கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்</p><p>மரண அமைதி அதிர </p><p>கருவண்டுகள் இசைக்கின்றன</p><p>``அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.</p><p>*</p><p><strong>அ</strong>மேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி </p><p>உலகை வேட்டையாடுதே கொரோனா. </p><p>அடாது கொட்டும் வெண்பனியையும்</p><p>விழாவாய்க் கொண்டாடும் </p><p>ஒஸ்லோ நகரும் முடங்கியதே.</p><p>கூதிரில் தனித்த என் மனைவிக்கு </p><p>பூக்களும் இல்லை. </p><p>எனினும் எனினும்</p><p>இடுக்கண் வருங்கால் நகைக்கும் </p><p>புதல்வர்களை விட்டு வந்தேனே.</p>.<p>*</p><p><strong>வெ</strong>ற்றியெனக் கொரோனாக் கிருமிகள் துள்ளும்</p><p>பெசன்ட் நகர் கடற்கரையில்</p><p>கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல் </p><p>நண்டுகள் தொற்றும் இரவில்.</p><p>குடிசைகளுள் </p><p>படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்</p><p>வலிய விரல்கள் ஊர்கின்றன.</p><p>*</p><p><strong>சா</strong>த்தானே அப்பாலே போ</p><p>மனிதர்கள் கைவிடப்படுவதில்லை</p><p>ஒருபோதும் வெல்லப்படுவதுமில்லை.</p>