<p>தேசங்களின் அதிபர்கள் காலையில் தோன்றி</p><p>நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள்</p><p>காபி கோப்பையைப் பற்றியிருக்கும்</p><p>கரத்தில் சூடுபரவி நாம் இன்னும்</p><p>எண்ணாகவில்லையென்பது</p><p>ஆறுதலைத் தருகிறது</p><p>பிரியமானவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு</p><p>பதில் வரும் இடைவெளியில் தீ நுண்மம்</p><p>ஏளனமாகச் சிரிக்கிறது</p><p>முன்பெல்லாம் ஞாபகமென்பது</p><p>மலராக இருந்தது</p><p>இப்போது அது ஒரு சாவி</p><p>இறந்தகாலத்தின்</p><p>ஒரு கதவைத் திறக்கிறேன்</p><p>நீ பாடிக்கொண்டிருக்கிறாய்</p><p>பொழியும் மழையில்</p><p>காலம் சிறிது உறைகிறது</p><p>வேற்றுக்கிரக வாசிகளைத்</p><p>தொற்ற முடியாமல்</p><p>நம் கதவுகளுக்கு வெளியே</p><p>வைரஸ் நாணித் தலைகவிழ்கிறது</p><p>நிகழ்காலத்துள்</p><p>மீண்டும் நுழைகிறேன்</p><p>மரணத்தின் கணக்கில் மீள்பவனிடம் காதல்</p><p>ஒரு மலர்க் கொத்தை நீட்டுகிறது!</p>.<p>உனைத் தேடிவந்த</p><p>எல்லா பாதைகளிலும் போலீஸ்காரர்கள் நின்றனர்</p><p>எட்டுத் திசைகளையும்</p><p>144 மூடியிருந்தது</p><p>உனக்காகப் பாடி அனுப்பிய</p><p>குரலை நான்காவது அலைவரிசையின்</p><p>விளம்பரப் பாடல் அழித்தது</p><p>ஓர் உயிர்க்கொல்லிக்</p><p>கிருமிக்கு அஞ்சி</p><p>உலகம் தன் கதவடைத்தது</p><p>மொட்டை மாடியில்</p><p>உதடுகள் பிரிக்காமல்</p><p>வயலின் இசைத்து</p><p>துணி உலர்த்துகிறாய்</p><p>ஈரச்சேலையை உதறும்போது</p><p>உன் அம்சவர்த்தினியை</p><p>உரசிச் சிறகடிக்கிறதே</p><p>அது வண்ணத்தியில்லை</p><p>யாரும் அறிந்திராத</p><p>ஒன்பதாவது</p><p>திசையைத் திறந்த</p><p>உன் காதலன்!</p>.<p>பாதங்களில் வேர்கள்</p><p>முளைத்துவிடக்கூடாதே என்ற</p><p>அச்சத்தில்</p><p>நேற்று 50 சதுர அடிகளுக்குள்</p><p>நடந்துகொண்டிருந்தேன்</p><p>25 வார்த்தைகளைப் பேசியிருப்பேன்</p><p>500 சொற்களை எழுதியிருப்பேன்</p><p>100 சொற்களைக் கேட்டிருப்பேன்</p><p>அவற்றில் 75 டிவி பேசியவை</p><p>அவையும் நோயாளிகள்,</p><p>இறந்தவர்கள் குறித்த</p><p>புள்ளிவிவரங்கள்</p><p>எனக்கு வெளியே</p><p>எனது சிறிய நகரம் இருந்தது</p><p>எனது பெரிய தேசம் இருந்தது</p><p>என் அம்மா இருந்தாள்</p><p>என்னை அன்பு செய்பவர்கள் இருந்தனர்</p><p>பசித்தவர்களுக்கும்</p><p>அவர்களது உணவுத்தட்டுகளுக்கும் இடையே 144 இருந்தது</p><p>நடு வீதியின் வெய்யிலில் நின்று எரிச்சலான போலீஸ்காரர்கள்</p><p>யாராவது சாலையில் நடந்தால் அவர்களது பின்பக்கத்தில்</p><p>ஆத்திரத்தைத் தணிக்க விரும்பிக் காத்திருந்தனர்</p><p>முகங்களே இல்லாமல்</p><p>ஒரு மாஸ்க் இன்னொரு மாஸ்க்கிடம்</p><p>பேசுவதைப் பார்க்கப் பிடிக்கவில்லை</p><p>இறந்துவிட்ட தைரியத்திலோ என்னவோ</p><p>எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாஸ்க்கில்லாமல்</p><p>டிவியில் ஆடிப் பாடினார்கள்</p><p>அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர்</p><p>நம் சன்னலுக்கு வெளியே தொடங்கிவிட்டது</p><p>துப்பாக்கிகளைச் சுத்தம் செய்த</p><p>ராணுவவீரர்கள்</p><p>உறங்கப்போய்விட்டார்கள்</p><p>மருத்துவர்களும் செவிலிகளும்</p><p>வெள்ளை உடைகளில் யுத்தம் செய்வார்களென</p><p>யாரும் கற்பனை</p><p>செய்திருக்க மாட்டார்கள்</p><p>புனைவைவிட யதார்த்தம்</p><p>நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது</p><p>ஒரு டாக்டருக்கு மாஸ்க் இல்லை</p><p>கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் இல்லையென்றால்</p><p>வதந்தியைப் பரப்புவதாக</p><p>அரசாங்கம் எச்சரிக்கிறது</p><p>இன்றைய அதிகாலை</p><p>எனக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்</p><p>சன்னலுக்கு வெளியே</p><p>தோட்டத்தில் ஒரு பலா</p><p>தன் காயை முதுவேனிலில்</p><p>பழுக்க வைத்திருக்கிறது</p><p>இம்மூன்றாம்</p><p>உலக யுத்தத்தில் பங்கேற்க</p><p>மருத்துவராகவோ செவிலியராகவோ</p><p>இருக்க வேண்டியது அவசியமில்லை</p><p>பாதங்கள் வேர்பிடிக்க</p><p>கைகள் கிளைகளாக</p><p>கனிகளைத் தரவேண்டி</p><p>இல்லத்தில் நாம்</p><p>ஒரு தருவாவோம்!</p>
<p>தேசங்களின் அதிபர்கள் காலையில் தோன்றி</p><p>நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள்</p><p>காபி கோப்பையைப் பற்றியிருக்கும்</p><p>கரத்தில் சூடுபரவி நாம் இன்னும்</p><p>எண்ணாகவில்லையென்பது</p><p>ஆறுதலைத் தருகிறது</p><p>பிரியமானவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு</p><p>பதில் வரும் இடைவெளியில் தீ நுண்மம்</p><p>ஏளனமாகச் சிரிக்கிறது</p><p>முன்பெல்லாம் ஞாபகமென்பது</p><p>மலராக இருந்தது</p><p>இப்போது அது ஒரு சாவி</p><p>இறந்தகாலத்தின்</p><p>ஒரு கதவைத் திறக்கிறேன்</p><p>நீ பாடிக்கொண்டிருக்கிறாய்</p><p>பொழியும் மழையில்</p><p>காலம் சிறிது உறைகிறது</p><p>வேற்றுக்கிரக வாசிகளைத்</p><p>தொற்ற முடியாமல்</p><p>நம் கதவுகளுக்கு வெளியே</p><p>வைரஸ் நாணித் தலைகவிழ்கிறது</p><p>நிகழ்காலத்துள்</p><p>மீண்டும் நுழைகிறேன்</p><p>மரணத்தின் கணக்கில் மீள்பவனிடம் காதல்</p><p>ஒரு மலர்க் கொத்தை நீட்டுகிறது!</p>.<p>உனைத் தேடிவந்த</p><p>எல்லா பாதைகளிலும் போலீஸ்காரர்கள் நின்றனர்</p><p>எட்டுத் திசைகளையும்</p><p>144 மூடியிருந்தது</p><p>உனக்காகப் பாடி அனுப்பிய</p><p>குரலை நான்காவது அலைவரிசையின்</p><p>விளம்பரப் பாடல் அழித்தது</p><p>ஓர் உயிர்க்கொல்லிக்</p><p>கிருமிக்கு அஞ்சி</p><p>உலகம் தன் கதவடைத்தது</p><p>மொட்டை மாடியில்</p><p>உதடுகள் பிரிக்காமல்</p><p>வயலின் இசைத்து</p><p>துணி உலர்த்துகிறாய்</p><p>ஈரச்சேலையை உதறும்போது</p><p>உன் அம்சவர்த்தினியை</p><p>உரசிச் சிறகடிக்கிறதே</p><p>அது வண்ணத்தியில்லை</p><p>யாரும் அறிந்திராத</p><p>ஒன்பதாவது</p><p>திசையைத் திறந்த</p><p>உன் காதலன்!</p>.<p>பாதங்களில் வேர்கள்</p><p>முளைத்துவிடக்கூடாதே என்ற</p><p>அச்சத்தில்</p><p>நேற்று 50 சதுர அடிகளுக்குள்</p><p>நடந்துகொண்டிருந்தேன்</p><p>25 வார்த்தைகளைப் பேசியிருப்பேன்</p><p>500 சொற்களை எழுதியிருப்பேன்</p><p>100 சொற்களைக் கேட்டிருப்பேன்</p><p>அவற்றில் 75 டிவி பேசியவை</p><p>அவையும் நோயாளிகள்,</p><p>இறந்தவர்கள் குறித்த</p><p>புள்ளிவிவரங்கள்</p><p>எனக்கு வெளியே</p><p>எனது சிறிய நகரம் இருந்தது</p><p>எனது பெரிய தேசம் இருந்தது</p><p>என் அம்மா இருந்தாள்</p><p>என்னை அன்பு செய்பவர்கள் இருந்தனர்</p><p>பசித்தவர்களுக்கும்</p><p>அவர்களது உணவுத்தட்டுகளுக்கும் இடையே 144 இருந்தது</p><p>நடு வீதியின் வெய்யிலில் நின்று எரிச்சலான போலீஸ்காரர்கள்</p><p>யாராவது சாலையில் நடந்தால் அவர்களது பின்பக்கத்தில்</p><p>ஆத்திரத்தைத் தணிக்க விரும்பிக் காத்திருந்தனர்</p><p>முகங்களே இல்லாமல்</p><p>ஒரு மாஸ்க் இன்னொரு மாஸ்க்கிடம்</p><p>பேசுவதைப் பார்க்கப் பிடிக்கவில்லை</p><p>இறந்துவிட்ட தைரியத்திலோ என்னவோ</p><p>எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மாஸ்க்கில்லாமல்</p><p>டிவியில் ஆடிப் பாடினார்கள்</p><p>அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர்</p><p>நம் சன்னலுக்கு வெளியே தொடங்கிவிட்டது</p><p>துப்பாக்கிகளைச் சுத்தம் செய்த</p><p>ராணுவவீரர்கள்</p><p>உறங்கப்போய்விட்டார்கள்</p><p>மருத்துவர்களும் செவிலிகளும்</p><p>வெள்ளை உடைகளில் யுத்தம் செய்வார்களென</p><p>யாரும் கற்பனை</p><p>செய்திருக்க மாட்டார்கள்</p><p>புனைவைவிட யதார்த்தம்</p><p>நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது</p><p>ஒரு டாக்டருக்கு மாஸ்க் இல்லை</p><p>கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் இல்லையென்றால்</p><p>வதந்தியைப் பரப்புவதாக</p><p>அரசாங்கம் எச்சரிக்கிறது</p><p>இன்றைய அதிகாலை</p><p>எனக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்</p><p>சன்னலுக்கு வெளியே</p><p>தோட்டத்தில் ஒரு பலா</p><p>தன் காயை முதுவேனிலில்</p><p>பழுக்க வைத்திருக்கிறது</p><p>இம்மூன்றாம்</p><p>உலக யுத்தத்தில் பங்கேற்க</p><p>மருத்துவராகவோ செவிலியராகவோ</p><p>இருக்க வேண்டியது அவசியமில்லை</p><p>பாதங்கள் வேர்பிடிக்க</p><p>கைகள் கிளைகளாக</p><p>கனிகளைத் தரவேண்டி</p><p>இல்லத்தில் நாம்</p><p>ஒரு தருவாவோம்!</p>