<p><strong>“க</strong>டலின் உப்பு</p><p>அதன் சொந்தத் துயரத்தால் மிகுந்தது பாபு...”</p><p>``Yes, this is very tragedic...</p><p>என் கதை மாதிரி...</p><p>கண்ணதாசன் எழுதின பாட்டு மாதிரி... </p><p>ஜீசஸ்!”</p>.<p><strong>சு</strong>தேசியான பாபுவின் தந்தை</p><p>உப்புக்கான போராட்டத்திற்காக</p><p>சிறைவைக்கப்பட்டு</p><p>கிழக்குத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.</p><p>ஈஸ்டர் தினத்தன்று</p><p>இலங்கையில் வீசப்பட்ட</p><p>இரண்டாம் உலகப்போரின் குண்டுகள்</p><p>பாபுவைத் துரத்தின.</p><p>ஜெமினி ஸ்டூடியோவில் ஃபிரேம் வைக்கப்பட்டு</p><p>‘ஆக்ஷன்’ சொன்னதும்</p><p>வங்கக்கடலை ஒரே மூச்சில்</p><p>நீந்தத் தொடங்கினார் பாபு.</p><p>கடற்காகம் ஒயிலாகக் கரைந்தது:</p><p>‘புத்தியுள்ள மனிதரெல்லாம்</p><p>வெற்றி காண்பதில்லை!’</p>.<p><strong>பா</strong>புவின் தற்கொலை முயற்சியில்</p><p>மயில்துத்தம் தோற்றது,</p><p>விதியோடான ரெண்டாம் சுற்றிலும் </p><p>மாதா வென்றாள்.</p><p>நீதிபதி ரசித்துச் சிரிக்க</p><p>குற்றவாளிக் கூண்டில் நின்றபடி</p><p>ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசி நடிப்பது</p><p>கவித்துவமாக இருந்தது பாபுவுக்கு.</p><p>பொன்னகரம் வழியாக</p><p>கலைவாணியிடம் அழைத்துச் சென்றார்</p><p>புதுமைப்பித்தன்.</p><p>மதராஸ் நகரத்து பிலிம்சுருள்களுக்குள் பாய்ந்த பாபு</p><p>அடிக்கடி பசியில் சரிந்து விழுந்தார்.</p><p>மாலையில் வயிற்றுச் சில்லறைக்காக </p><p>சாந்தோம் கடற்கரையில் புழுதிபறக்க நடனமாடுகிறார்</p><p>ஜோசப் பிச்சை பனிமயதாசன்,</p><p>“ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு</p><p>ஜியாலங்கடி ஜிய்யாலோ!”</p>.<p><strong>“மி</strong>ஸ்டர் ஜெயகாந்தன்…</p><p>முதல் காமம் பற்றிய இந்த மெக்ஸிகன் பாடல்</p><p>உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”</p><p>“மதுவில் பனித்துண்டுகள் கரைவது பிடித்திருக்கிறது,</p><p>விஸ்வநாதனின் இசையைப்போல…”</p>.<p><strong>“இ</strong>ந்த வாழ்க்கை</p><p>சேனல் 5 பெர்ஃப்யூம் போல </p><p>அவ்வளவு சுகந்தம்</p><p>துரோகியின் புன்னகைபோல </p><p>அவ்வளவு மர்மம்.</p><p>சாவித்திரி…</p><p>இந்த சிகரெட்டை ஓர் அகதியோடு</p><p>பகிர்ந்துகொள்ள வேண்டும்போலிருக்கிறது!”</p>.<p><strong>ஷீ</strong>லா உண்மையைச் சொல்வதற்கு முன்</p><p>அதிக மதுகொண்டு </p><p>பாபுவின் கிண்ணத்தை நிரப்பினார்.</p><p>உடலின் மனதின் ஊழின் புதிர்க்கதைகளை</p><p>சொல்லத் தொடங்கியபடியே</p><p>ரேடியோகிராமை மெலிதாக ஒலிக்கவிட்டார்.</p><p>கழற்றிவைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் வைரத்தில்</p><p>இருளைக் கீறிப் புண்படுத்துகிற ஒளி...</p><p>அலைகளிலாடி கொஞ்சம் கொஞ்சமாய்</p><p>அரபிக்கடலில் தூரம் போகிறது கப்பல்</p><p>பிரிவை வாழ்த்தி கையசைக்கிறார் பாபு</p><p>ஷீலா எனும் கடல் </p><p>ஷீலா எனும் அலைகள்</p><p>ஷீலா எனும் திரும்பாப் புன்னகை</p><p>எங்கோ எப்போதோ நினைவில் பதிந்த</p><p>அடிவயிற்று மச்சம்போல</p><p>ஆழியில் மங்குகிறது அந்தக் கரும்புள்ளி</p><p>நிரந்தரமாய் மிதக்கத் தொடங்கினார் பாபு</p><p>ஷீலா ஷீலா ஷீலாவெனப்</p><p>பொங்கும் மதுவின் ஆழத்தில்</p><p>ஓர் அழிவற்ற திமிங்கிலம் வளர்ந்துகொண்டிருந்தது.</p><p>பியானோ மீதேறி அபிநயிக்கிறார் பாபு:</p><p>``கட்டுப்படியாகலேஏஏ காதல் தரும் வேதனை…</p><p>கட்டுப்படியாகலே காஆதல் தரும் வேதனை…”</p>.<p><strong>கா</strong>ல்பந்தாட்டக்காரர் ஒருவர் பந்தை விசைத்து</p><p>பாபுவின் ஒப்பனைப்பெட்டியை உடைத்தார்.</p><p>சிந்திய வண்ணங்களைக் குழைத்து</p><p>பாபுவின் மீதக் கதைக்குக் </p><p>காவியச்சுவை சேர்த்தார் </p><p>மிஸ்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்.</p><p>குற்றவுணர்வின் அடிவாரத்தில் நின்றபடி</p><p>எப்போதாவது தனிமையில் ரகசியமாக</p><p>பாபுவின் அந்தப் பாடலைக் கேட்பார்:</p><p>“உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே</p><p>கவலையில்லாத மனிதன்…”</p><p>மேகங்களை அளைந்தபடி மலையுச்சியில் கரைகிறதொரு நளினமான ஒல்லி நிழல்.</p>.<p><strong>பா</strong>பு இறந்தவனைப்போல நடித்துக்கொண்டிருந்தார்.</p><p>கர்த்தர் தமிழில் எழுதிய</p><p>மிக சுவாரஸ்யமான ஒரு ஸ்க்ரீன் ப்ளே அது.</p><p>தன் கண்டிப்பை மீறி </p><p>அருவியை நோக்கியோடும்</p><p>சிறுவனின் - விறைத்த - கால்களையே</p><p>பார்த்துக்கொண்டிருக்கிறார் காமராஜர்.</p><p>பாபுவின் பொருட்டு</p><p>இறையை நோக்கி ஓர் ஆங்கில வசையை</p><p>முணுமுணுத்த பாதிரி</p><p>பைபிள் வரிகளுக்குள் மனம் இடறி விழுந்தார்.</p><p>அம்மை ரோஸ்லினின் கருப்பையைப்போல</p><p>அந்த நீள்சதுரக் குழி</p><p>ஈரக்கதகதப்போடு பாபுவை விழுங்குகிறது.</p><p>கஞ்சாவை மூர்க்கமாக இழுத்த ரிக்ஷாக்காரர்</p><p>குழறிப் பாடுகிறார்:</p><p>‘‘இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்</p><p>மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!”</p>.<p><strong>சொ</strong>ற்கள்தான் பாபுவின் தீராப் பிரச்னை</p><p>அவையே பாடிக்கொண்டிருக்கும்போது</p><p>வலுவந்தமாய் அவரின் குரல்வளையை நெரித்தவை.</p><p>பாபுவின் கதையில்</p><p>கடலும் ஒரு முக்கியப் பாத்திரம்,</p><p>மீனவரோடு கடலல்லாமல் யார்தான் விளையாடுவது?</p><p>பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்</p><p>F வரிசையில் 12 வது ஆளாகப் படுத்திருப்பவர்</p><p>மலர்களுதிர்ந்த </p><p>வெற்று மூங்கில் வளையத்தைச் சுழற்றியபடி</p><p>வினவுகிறார்:</p><p>‘‘கண்மணிப் பாப்பா...</p><p>மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான்</p><p>எனச் சொன்னது தப்பா...”</p>.<p><strong>அ</strong>கதிகளின் கனவில் </p><p>முடிவற்று உருளும் பனம்பழத்தை</p><p>கைகளில் ஏந்தி விநோதிக்கும் பாபு </p><p>வசைச் சொற்களாலான</p><p>சிங்களப் பழமொழியைப் பாடியபடியே</p><p>ஓர் அபத்த நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்.</p><p>போரிலும் தப்பிய ஈழத்துப் பனையோலையிலான</p><p>ஒரு கோமாளித்தொப்பி கிடைத்துவிட்டால்</p><p>இந்த நூற்றாண்டைக் குறித்த</p><p>வரலாற்று விமர்சனத்தைக் </p><p>கவித்துவமாக நடித்துவிடலாம் எனப் புன்னகைக்கிறார்.</p>.<p><strong>ப</strong>ழுதுற்ற அந்தப் பியானோவில்</p><p>தவறான இசைக்குறிப்பைக்கொண்டு </p><p>நீங்கள் எழுப்பியது அர்த்தமின்மையின் கீதம் பாபு...</p><p>ஆனாலும் அவ்வளவு ஆதுரம்! </p><p>அவ்வளவு யதார்த்தம்!!</p>
<p><strong>“க</strong>டலின் உப்பு</p><p>அதன் சொந்தத் துயரத்தால் மிகுந்தது பாபு...”</p><p>``Yes, this is very tragedic...</p><p>என் கதை மாதிரி...</p><p>கண்ணதாசன் எழுதின பாட்டு மாதிரி... </p><p>ஜீசஸ்!”</p>.<p><strong>சு</strong>தேசியான பாபுவின் தந்தை</p><p>உப்புக்கான போராட்டத்திற்காக</p><p>சிறைவைக்கப்பட்டு</p><p>கிழக்குத் தீவுக்கு நாடுகடத்தப்பட்டார்.</p><p>ஈஸ்டர் தினத்தன்று</p><p>இலங்கையில் வீசப்பட்ட</p><p>இரண்டாம் உலகப்போரின் குண்டுகள்</p><p>பாபுவைத் துரத்தின.</p><p>ஜெமினி ஸ்டூடியோவில் ஃபிரேம் வைக்கப்பட்டு</p><p>‘ஆக்ஷன்’ சொன்னதும்</p><p>வங்கக்கடலை ஒரே மூச்சில்</p><p>நீந்தத் தொடங்கினார் பாபு.</p><p>கடற்காகம் ஒயிலாகக் கரைந்தது:</p><p>‘புத்தியுள்ள மனிதரெல்லாம்</p><p>வெற்றி காண்பதில்லை!’</p>.<p><strong>பா</strong>புவின் தற்கொலை முயற்சியில்</p><p>மயில்துத்தம் தோற்றது,</p><p>விதியோடான ரெண்டாம் சுற்றிலும் </p><p>மாதா வென்றாள்.</p><p>நீதிபதி ரசித்துச் சிரிக்க</p><p>குற்றவாளிக் கூண்டில் நின்றபடி</p><p>ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசி நடிப்பது</p><p>கவித்துவமாக இருந்தது பாபுவுக்கு.</p><p>பொன்னகரம் வழியாக</p><p>கலைவாணியிடம் அழைத்துச் சென்றார்</p><p>புதுமைப்பித்தன்.</p><p>மதராஸ் நகரத்து பிலிம்சுருள்களுக்குள் பாய்ந்த பாபு</p><p>அடிக்கடி பசியில் சரிந்து விழுந்தார்.</p><p>மாலையில் வயிற்றுச் சில்லறைக்காக </p><p>சாந்தோம் கடற்கரையில் புழுதிபறக்க நடனமாடுகிறார்</p><p>ஜோசப் பிச்சை பனிமயதாசன்,</p><p>“ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு</p><p>ஜியாலங்கடி ஜிய்யாலோ!”</p>.<p><strong>“மி</strong>ஸ்டர் ஜெயகாந்தன்…</p><p>முதல் காமம் பற்றிய இந்த மெக்ஸிகன் பாடல்</p><p>உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”</p><p>“மதுவில் பனித்துண்டுகள் கரைவது பிடித்திருக்கிறது,</p><p>விஸ்வநாதனின் இசையைப்போல…”</p>.<p><strong>“இ</strong>ந்த வாழ்க்கை</p><p>சேனல் 5 பெர்ஃப்யூம் போல </p><p>அவ்வளவு சுகந்தம்</p><p>துரோகியின் புன்னகைபோல </p><p>அவ்வளவு மர்மம்.</p><p>சாவித்திரி…</p><p>இந்த சிகரெட்டை ஓர் அகதியோடு</p><p>பகிர்ந்துகொள்ள வேண்டும்போலிருக்கிறது!”</p>.<p><strong>ஷீ</strong>லா உண்மையைச் சொல்வதற்கு முன்</p><p>அதிக மதுகொண்டு </p><p>பாபுவின் கிண்ணத்தை நிரப்பினார்.</p><p>உடலின் மனதின் ஊழின் புதிர்க்கதைகளை</p><p>சொல்லத் தொடங்கியபடியே</p><p>ரேடியோகிராமை மெலிதாக ஒலிக்கவிட்டார்.</p><p>கழற்றிவைக்கப்பட்ட திருமண மோதிரத்தின் வைரத்தில்</p><p>இருளைக் கீறிப் புண்படுத்துகிற ஒளி...</p><p>அலைகளிலாடி கொஞ்சம் கொஞ்சமாய்</p><p>அரபிக்கடலில் தூரம் போகிறது கப்பல்</p><p>பிரிவை வாழ்த்தி கையசைக்கிறார் பாபு</p><p>ஷீலா எனும் கடல் </p><p>ஷீலா எனும் அலைகள்</p><p>ஷீலா எனும் திரும்பாப் புன்னகை</p><p>எங்கோ எப்போதோ நினைவில் பதிந்த</p><p>அடிவயிற்று மச்சம்போல</p><p>ஆழியில் மங்குகிறது அந்தக் கரும்புள்ளி</p><p>நிரந்தரமாய் மிதக்கத் தொடங்கினார் பாபு</p><p>ஷீலா ஷீலா ஷீலாவெனப்</p><p>பொங்கும் மதுவின் ஆழத்தில்</p><p>ஓர் அழிவற்ற திமிங்கிலம் வளர்ந்துகொண்டிருந்தது.</p><p>பியானோ மீதேறி அபிநயிக்கிறார் பாபு:</p><p>``கட்டுப்படியாகலேஏஏ காதல் தரும் வேதனை…</p><p>கட்டுப்படியாகலே காஆதல் தரும் வேதனை…”</p>.<p><strong>கா</strong>ல்பந்தாட்டக்காரர் ஒருவர் பந்தை விசைத்து</p><p>பாபுவின் ஒப்பனைப்பெட்டியை உடைத்தார்.</p><p>சிந்திய வண்ணங்களைக் குழைத்து</p><p>பாபுவின் மீதக் கதைக்குக் </p><p>காவியச்சுவை சேர்த்தார் </p><p>மிஸ்டர் எம்.ஜி.ராமச்சந்திரன்.</p><p>குற்றவுணர்வின் அடிவாரத்தில் நின்றபடி</p><p>எப்போதாவது தனிமையில் ரகசியமாக</p><p>பாபுவின் அந்தப் பாடலைக் கேட்பார்:</p><p>“உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே</p><p>கவலையில்லாத மனிதன்…”</p><p>மேகங்களை அளைந்தபடி மலையுச்சியில் கரைகிறதொரு நளினமான ஒல்லி நிழல்.</p>.<p><strong>பா</strong>பு இறந்தவனைப்போல நடித்துக்கொண்டிருந்தார்.</p><p>கர்த்தர் தமிழில் எழுதிய</p><p>மிக சுவாரஸ்யமான ஒரு ஸ்க்ரீன் ப்ளே அது.</p><p>தன் கண்டிப்பை மீறி </p><p>அருவியை நோக்கியோடும்</p><p>சிறுவனின் - விறைத்த - கால்களையே</p><p>பார்த்துக்கொண்டிருக்கிறார் காமராஜர்.</p><p>பாபுவின் பொருட்டு</p><p>இறையை நோக்கி ஓர் ஆங்கில வசையை</p><p>முணுமுணுத்த பாதிரி</p><p>பைபிள் வரிகளுக்குள் மனம் இடறி விழுந்தார்.</p><p>அம்மை ரோஸ்லினின் கருப்பையைப்போல</p><p>அந்த நீள்சதுரக் குழி</p><p>ஈரக்கதகதப்போடு பாபுவை விழுங்குகிறது.</p><p>கஞ்சாவை மூர்க்கமாக இழுத்த ரிக்ஷாக்காரர்</p><p>குழறிப் பாடுகிறார்:</p><p>‘‘இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்</p><p>மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்!”</p>.<p><strong>சொ</strong>ற்கள்தான் பாபுவின் தீராப் பிரச்னை</p><p>அவையே பாடிக்கொண்டிருக்கும்போது</p><p>வலுவந்தமாய் அவரின் குரல்வளையை நெரித்தவை.</p><p>பாபுவின் கதையில்</p><p>கடலும் ஒரு முக்கியப் பாத்திரம்,</p><p>மீனவரோடு கடலல்லாமல் யார்தான் விளையாடுவது?</p><p>பட்டினப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில்</p><p>F வரிசையில் 12 வது ஆளாகப் படுத்திருப்பவர்</p><p>மலர்களுதிர்ந்த </p><p>வெற்று மூங்கில் வளையத்தைச் சுழற்றியபடி</p><p>வினவுகிறார்:</p><p>‘‘கண்மணிப் பாப்பா...</p><p>மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான்</p><p>எனச் சொன்னது தப்பா...”</p>.<p><strong>அ</strong>கதிகளின் கனவில் </p><p>முடிவற்று உருளும் பனம்பழத்தை</p><p>கைகளில் ஏந்தி விநோதிக்கும் பாபு </p><p>வசைச் சொற்களாலான</p><p>சிங்களப் பழமொழியைப் பாடியபடியே</p><p>ஓர் அபத்த நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்.</p><p>போரிலும் தப்பிய ஈழத்துப் பனையோலையிலான</p><p>ஒரு கோமாளித்தொப்பி கிடைத்துவிட்டால்</p><p>இந்த நூற்றாண்டைக் குறித்த</p><p>வரலாற்று விமர்சனத்தைக் </p><p>கவித்துவமாக நடித்துவிடலாம் எனப் புன்னகைக்கிறார்.</p>.<p><strong>ப</strong>ழுதுற்ற அந்தப் பியானோவில்</p><p>தவறான இசைக்குறிப்பைக்கொண்டு </p><p>நீங்கள் எழுப்பியது அர்த்தமின்மையின் கீதம் பாபு...</p><p>ஆனாலும் அவ்வளவு ஆதுரம்! </p><p>அவ்வளவு யதார்த்தம்!!</p>