<p><strong>ப</strong>ன்னிறக் கோடுகள் பல வண்ணங்கள்</p><p>கிறுக்கல்களால்</p><p>சுவர்களை நிறைத்திருக்கிறது</p><p>சொல் சொற்றொடர் ஆகாத</p><p>மழலை</p><p>ஒரு பொழுது மீன் எனும்</p><p>ஒரு பொழுது அணில் எனும்</p><p>தான் பார்த்தேயிராத பல கொம்பு காண்டாமிருகம் எனும்</p><p>சில நேரம் </p><p>அதன் அம்மா பூசை செய்யும்போது</p><p>இங்கும் தீபம் காட்டு</p><p>இது சாமி எனும்.</p>.<p>சீருடை தரித்துப் பள்ளி செல்கிறாள்</p><p>வாக்கியங்கள் பாடல் வரிகள் என அப்படியே</p><p>ஒப்பிக்கிறாள்</p><p>எண்களை வரிசை மாறாமல்</p><p>எழுதுகிறாள்.</p>.<p>ஒரு பண்டிகைக்கு வீட்டைப் புதுப்பிக்கையில்</p><p>தானும் ஒரு பூசுமட்டை எடுத்து வெள்ளையடிக்கிறாள்.</p>.<p>அவள் காணவே இல்லை</p><p>தன் காண்டாமிருகத்தையோ கடவுளையோ.</p>.<p>ஆற்றுமீன் சலம்புகிறது</p><p>புது நீர் எனில் எதிர்நீச்சலும் இடுகிறது</p><p>ஆறிருந்தால்.</p><p>குளத்துமீன் பயமின்றி</p><p>கால்களைக் கடித்து விளையாடுகிறது</p><p>குளமிருந்தால்.</p><p>கிணற்றிலும் வாழ்கின்றன</p><p>நீரிருந்தால்.</p>.<p>ஆழ்குழாயிலிருந்து</p><p>இரண்டு குடத்தை நிறைக்க</p><p>நீரேற்று எந்திரமே</p><p>மூச்சுத்திணறும் இம்மாநகரக் குடியிருப்பில்</p><p>கேன் தண்ணீருக்கு</p><p>இன்னமும் பழகமறுக்கின்றன </p><p>கண்ணாடித்தொட்டி மீன்கள்</p><p>என்னவொரு வைராக்கியம்!</p>
<p><strong>ப</strong>ன்னிறக் கோடுகள் பல வண்ணங்கள்</p><p>கிறுக்கல்களால்</p><p>சுவர்களை நிறைத்திருக்கிறது</p><p>சொல் சொற்றொடர் ஆகாத</p><p>மழலை</p><p>ஒரு பொழுது மீன் எனும்</p><p>ஒரு பொழுது அணில் எனும்</p><p>தான் பார்த்தேயிராத பல கொம்பு காண்டாமிருகம் எனும்</p><p>சில நேரம் </p><p>அதன் அம்மா பூசை செய்யும்போது</p><p>இங்கும் தீபம் காட்டு</p><p>இது சாமி எனும்.</p>.<p>சீருடை தரித்துப் பள்ளி செல்கிறாள்</p><p>வாக்கியங்கள் பாடல் வரிகள் என அப்படியே</p><p>ஒப்பிக்கிறாள்</p><p>எண்களை வரிசை மாறாமல்</p><p>எழுதுகிறாள்.</p>.<p>ஒரு பண்டிகைக்கு வீட்டைப் புதுப்பிக்கையில்</p><p>தானும் ஒரு பூசுமட்டை எடுத்து வெள்ளையடிக்கிறாள்.</p>.<p>அவள் காணவே இல்லை</p><p>தன் காண்டாமிருகத்தையோ கடவுளையோ.</p>.<p>ஆற்றுமீன் சலம்புகிறது</p><p>புது நீர் எனில் எதிர்நீச்சலும் இடுகிறது</p><p>ஆறிருந்தால்.</p><p>குளத்துமீன் பயமின்றி</p><p>கால்களைக் கடித்து விளையாடுகிறது</p><p>குளமிருந்தால்.</p><p>கிணற்றிலும் வாழ்கின்றன</p><p>நீரிருந்தால்.</p>.<p>ஆழ்குழாயிலிருந்து</p><p>இரண்டு குடத்தை நிறைக்க</p><p>நீரேற்று எந்திரமே</p><p>மூச்சுத்திணறும் இம்மாநகரக் குடியிருப்பில்</p><p>கேன் தண்ணீருக்கு</p><p>இன்னமும் பழகமறுக்கின்றன </p><p>கண்ணாடித்தொட்டி மீன்கள்</p><p>என்னவொரு வைராக்கியம்!</p>