<p><strong>வெ</strong>ள்ளைத் தாளில் ஏதோ வரைந்துகொண்டி ருந்தாள் சிறுமி. அங்கு வந்த பெரியவர் ஒருவர், ‘`என்னம்மா வரைகிறாய்?’’ என்று கேட்டார்.</p><p>‘`கடவுளை வரைகிறேன்!’’ என்றாள் சிறுமி.</p><p>பெரியவருக்கு வியப்பு! ‘`அதெப்படி... கடவுளை, எவரும் பார்த்ததே இல்லையே?’’ என்றார்.</p><p>‘`அப்படியா... கொஞ்சம் பொறுங்கள். நான் வரைந்து முடித்ததும் பாருங்கள்!’’ என்றாள் அந்த சிறுமி. பெரியவருக்கு ஆச்சர்யம் அதிகரித்தது. அங்கேயே காத்திருந்தார். சிறிது நேரத்தில், சிறுமி வரைந்து முடித்ததும் ஓவியத்தை வாங்கிப் பார்த்த பெரியவர், ‘`யாரம்மா இது?’’ என்று கேட்டார்.</p><p>``என் அம்மா.’’</p>.<p>``உன் அம்மாதான் கடவுள் என்று யார் சொன்னது?’’</p><p>‘`நேற்று கோயிலில் பேசும்போது, ‘அன்புதான் கடவுள்’ என்று சொன்னீர்கள். அதனால்தான் அம்மாவை வரைந்தேன்’’ என்றாள்.</p>.<p>அன்று பெரியவரின் பேச்சு, அந்தச் சிறுமியின் மனத்தில் சரியான திசையையே காட்டியிருக்கிறது. </p><p>ஆனால் இன்றைக்குப் பலர், தண்டிக்கும் அதிகாரியா கவே ஆண்டவனைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு... பிள்ளைகள் பயந்துபோகிறார்கள்.</p><p>பெரியவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடையே பேசும்போது விளையாட்டாகச் சொன்னார் ‘`மாணவர் களே, நீங்கள் ஏதாவது தப்பு பண்ணினால், கடவுள் காதைப் பிடித்துத் திருகுவார்!’’</p><p>அன்றிரவு, மாணவன் ஒருவன் வீட்டில் படுத்திருந் தான். அவனுடைய அம்மாவிடம், ``இதோ பாரு... நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுப்பிவிடு. நான் செங்கல்பட்டு வரைக்கும் போகணும்’’ என்றார் அப்பா.</p>.<p>இதைக் கேட்ட மாணவன், அப்பாவுக்குச் சிரமம் வேண்டாம் என்று நினைத்து, அவனே அதிகாலையில் எழுந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்குச் சென்றான். அம்மாவும் அப்பாவும் பிள்ளையைக் காணாமல் கலங்கித் தவித்தனர்.</p><p>மாலையில் வீடு திரும்பிய வனிடம், ‘`எங்கேடா போயிருந்தே’’ என்றார் அப்பா, கோபத்துடன்.</p><p>‘`நேத்து ராத்திரி... நீங்க அம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். </p><p>நீங்க வீணா அலைய வேணாமேன்னுதான் செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்தேன்!’’</p>.<p>‘`இதை யாருடா காதுல வாங்கச் சொன்னது. எந்தக் காது அது...’’ என்றபடி, மகனின் காதைப் பிடித்துத் திருகினார். காது கையோடு வந்துவிட்டது.</p><p>பதறிப்போன அப்பா, மகனை அழைத்துக் கொண்டு காதையும் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார். அங்கு, பழையபடி காதை ஒட்டவைத்துவிட்டனர். இரண்டு நாள்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பினர். அப்போது, எதிரே ஒரு நாய் ஓடி வந்தது. அதற்கு இரண்டு காதுகளும் இல்லை!</p><p>‘`என்ன ஆச்சு இதுக்கு’’ என்றார் அப்பா.</p><p>உடனே மகன் சொன்னான், ‘`அது ரெண்டு தடவை செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்திருக்கும்!’’</p><p><strong>(28.10.2008 இதழிலிருந்து...)</strong></p>
<p><strong>வெ</strong>ள்ளைத் தாளில் ஏதோ வரைந்துகொண்டி ருந்தாள் சிறுமி. அங்கு வந்த பெரியவர் ஒருவர், ‘`என்னம்மா வரைகிறாய்?’’ என்று கேட்டார்.</p><p>‘`கடவுளை வரைகிறேன்!’’ என்றாள் சிறுமி.</p><p>பெரியவருக்கு வியப்பு! ‘`அதெப்படி... கடவுளை, எவரும் பார்த்ததே இல்லையே?’’ என்றார்.</p><p>‘`அப்படியா... கொஞ்சம் பொறுங்கள். நான் வரைந்து முடித்ததும் பாருங்கள்!’’ என்றாள் அந்த சிறுமி. பெரியவருக்கு ஆச்சர்யம் அதிகரித்தது. அங்கேயே காத்திருந்தார். சிறிது நேரத்தில், சிறுமி வரைந்து முடித்ததும் ஓவியத்தை வாங்கிப் பார்த்த பெரியவர், ‘`யாரம்மா இது?’’ என்று கேட்டார்.</p><p>``என் அம்மா.’’</p>.<p>``உன் அம்மாதான் கடவுள் என்று யார் சொன்னது?’’</p><p>‘`நேற்று கோயிலில் பேசும்போது, ‘அன்புதான் கடவுள்’ என்று சொன்னீர்கள். அதனால்தான் அம்மாவை வரைந்தேன்’’ என்றாள்.</p>.<p>அன்று பெரியவரின் பேச்சு, அந்தச் சிறுமியின் மனத்தில் சரியான திசையையே காட்டியிருக்கிறது. </p><p>ஆனால் இன்றைக்குப் பலர், தண்டிக்கும் அதிகாரியா கவே ஆண்டவனைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு... பிள்ளைகள் பயந்துபோகிறார்கள்.</p><p>பெரியவர் ஒருவர், பள்ளி மாணவர்களிடையே பேசும்போது விளையாட்டாகச் சொன்னார் ‘`மாணவர் களே, நீங்கள் ஏதாவது தப்பு பண்ணினால், கடவுள் காதைப் பிடித்துத் திருகுவார்!’’</p><p>அன்றிரவு, மாணவன் ஒருவன் வீட்டில் படுத்திருந் தான். அவனுடைய அம்மாவிடம், ``இதோ பாரு... நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுப்பிவிடு. நான் செங்கல்பட்டு வரைக்கும் போகணும்’’ என்றார் அப்பா.</p>.<p>இதைக் கேட்ட மாணவன், அப்பாவுக்குச் சிரமம் வேண்டாம் என்று நினைத்து, அவனே அதிகாலையில் எழுந்து புறப்பட்டு செங்கல்பட்டுக்குச் சென்றான். அம்மாவும் அப்பாவும் பிள்ளையைக் காணாமல் கலங்கித் தவித்தனர்.</p><p>மாலையில் வீடு திரும்பிய வனிடம், ‘`எங்கேடா போயிருந்தே’’ என்றார் அப்பா, கோபத்துடன்.</p><p>‘`நேத்து ராத்திரி... நீங்க அம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்ததைக் கேட்டேன். </p><p>நீங்க வீணா அலைய வேணாமேன்னுதான் செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்தேன்!’’</p>.<p>‘`இதை யாருடா காதுல வாங்கச் சொன்னது. எந்தக் காது அது...’’ என்றபடி, மகனின் காதைப் பிடித்துத் திருகினார். காது கையோடு வந்துவிட்டது.</p><p>பதறிப்போன அப்பா, மகனை அழைத்துக் கொண்டு காதையும் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார். அங்கு, பழையபடி காதை ஒட்டவைத்துவிட்டனர். இரண்டு நாள்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பினர். அப்போது, எதிரே ஒரு நாய் ஓடி வந்தது. அதற்கு இரண்டு காதுகளும் இல்லை!</p><p>‘`என்ன ஆச்சு இதுக்கு’’ என்றார் அப்பா.</p><p>உடனே மகன் சொன்னான், ‘`அது ரெண்டு தடவை செங்கல்பட்டுக்குப் போயிட்டு வந்திருக்கும்!’’</p><p><strong>(28.10.2008 இதழிலிருந்து...)</strong></p>