<p><strong>சு</strong>ம்மாப் போன நாயின் மேல்</p><p>சும்மா ஒரு கல்லெறிந்தேன் </p><p>சும்மா என்று புரியாமல் </p><p>ஒரு கடி ஆழமாகக் கடித்து ஓடியது </p> <p>சும்மா வருமா தனு? </p><p>சும்மா வருமா பிணி? </p><p>சும்மாவா துக்க இன்பம்? </p><p>எல்லாம் பிராரத்த வினையப்பா </p><p>வினையை அனுபவிக்கும் வினை இருக்க </p><p>ஆகாமிய வினைக்கேன் அலைகிறாய்</p><p>சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார் </p><p>குருமவுனி </p>.<p>ஜிட்டுவும் </p><p>இதையே குழப்பிக் குழப்பிச்</p><p>சொன்னார் </p> <p>சொந்த சும்மா வேண்டாம் </p><p>சுத்த சும்மா ஷேமமென்று </p><p>குந்தியிருந்தால் </p><p>நாயே கவ்வி வந்து </p><p>கல்லைத் தருது</p> <p>இந்த நிலைதான் </p><p>எந்த வினையோ?</p>
<p><strong>சு</strong>ம்மாப் போன நாயின் மேல்</p><p>சும்மா ஒரு கல்லெறிந்தேன் </p><p>சும்மா என்று புரியாமல் </p><p>ஒரு கடி ஆழமாகக் கடித்து ஓடியது </p> <p>சும்மா வருமா தனு? </p><p>சும்மா வருமா பிணி? </p><p>சும்மாவா துக்க இன்பம்? </p><p>எல்லாம் பிராரத்த வினையப்பா </p><p>வினையை அனுபவிக்கும் வினை இருக்க </p><p>ஆகாமிய வினைக்கேன் அலைகிறாய்</p><p>சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார் </p><p>குருமவுனி </p>.<p>ஜிட்டுவும் </p><p>இதையே குழப்பிக் குழப்பிச்</p><p>சொன்னார் </p> <p>சொந்த சும்மா வேண்டாம் </p><p>சுத்த சும்மா ஷேமமென்று </p><p>குந்தியிருந்தால் </p><p>நாயே கவ்வி வந்து </p><p>கல்லைத் தருது</p> <p>இந்த நிலைதான் </p><p>எந்த வினையோ?</p>