<p>1.உறங்காத நினைவுகளின் மேல்</p><p>விழுந்து தெறித்தது</p><p>சுவர்க் கடிகாரத்தின்</p><p>பின்னிரவு மணிச்சத்தம்</p><p>ஆடிக்கொண்டே இருக்கிறது</p><p>மையத்தில் நிறுத்த முடியாத</p><p>மனத்தின் பெண்டுலம்</p>.<p>2.விரிசல் விழுந்த</p><p>கடிகாரக் கண்ணாடி</p><p>நினைவுபடுத்துகிறது</p><p>யாருமில்லாத கிழவரின்</p><p>மூக்குக் கண்ணாடியை</p><p>எங்கு நிற்பதெனத் தெரியாமல்</p><p>சுற்றிச் சுற்றி வரும்</p><p>அந்தப் பெரியமுள்</p><p>அவர்தான் போல</p> <p>3.“சின்னமுள் எங்கே இருக்கு</p><p>பெரியமுள் எங்கே இருக்கு" </p><p>பார்க்கச் சொன்னாள் அம்மா</p><p>“இரண்டு முள்ளும்</p><p>கடிகாரத்துக்குள்தாம்மா இருக்கு”</p><p>என்றான் குழந்தை</p><p>காலம்</p><p>அப்போது</p><p>அவன் கண்களில் இருந்தது</p>.<p>4.விடைபெறும் நேரம்</p><p>கடைசியாக</p><p>அவனும் அவளும்</p><p>தங்கள் கடிகாரத்தைப்</p><p>பார்த்துக்கொண்டார்கள்</p><p>வட்டமடித்த காலம்</p><p>தொடங்கிய புள்ளியில்</p><p>உள்வாங்கிக்கொண்டது</p><p>இருவரையும்</p> <p>5.தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல</p><p>வாய்த்தது</p><p>வட்டப்பாதைதான்</p><p>கடிகாரங்களுக்கு</p> <p>6.ஒவ்வொரு கடிகாரமும்</p><p>ஒவ்வொரு நேரத்தைக் காட்டுகிறது</p><p>எந்தக் குழப்பமுமில்லாமல் </p><p>கால எந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்</p><p>பழுது பார்ப்பவர்</p> <p>7.“உன் கண்மணிகள்</p><p>காதலின் பெண்டுலங்கள்”</p><p>என்றான் அவன்</p>.<p>“என் உடலே</p><p>கடிகாரமாக</p><p>சுழல்கிறது உன் மோக முள்”</p><p>என்றாள் அவள்</p><p>அவர்கள் நின்றிருந்த சாலையில்</p><p>மணிக்கூண்டுக் கோபுரத்தை</p><p>ஒரு கிழவி</p><p>நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்</p><p>கண் மங்கிய தூரத்தில்</p><p>கலங்கித் தெரியும் நேரத்தை</p> <p>8.நின்றுபோன கடிகாரத்தின்</p><p>முட்களை</p><p>முன்னும் பின்னும் நகர்த்தி</p><p>விளையாடுகிறது குழந்தை...</p><p>குழந்தைக்காக</p><p>முன்னும் பின்னுமாக</p><p>நகர்ந்து கொடுக்கிறது</p><p>காலம்</p> <p>9.எண்களும் இல்லை</p><p>முட்களும் இல்லை</p><p>எண்களுக்கும் முட்களுக்கும்</p><p>இடையில்தான்</p><p>பார்த்துக்கொள்கிறோம்</p><p>அவரவர் நேரத்தை</p>.<p>10.ஜவ்மிட்டாய்க் கடிகாரத்தைச்</p><p>சுவைத்தபடி</p><p>சிரிக்கிறாள் சிறுமி</p><p>அவளது காலத்தின் சுவையை</p><p>அவள் மட்டுமே</p><p>அறிந்தவளாக</p> <p>11.நீங்கள்</p><p>கவனிக்கலாம்</p><p>கவனிக்காமல் போகலாம்</p><p>எல்லோரையும்</p><p>எல்லாவற்றையும்</p><p>கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது</p><p>கடிகாரம்</p> <p>12.மெதுவாக ஓடுகிறது</p><p>அம்மாவின் கடிகாரம்</p><p>வேகமாக ஓடுகிறது</p><p>மனைவியின் கடிகாரம்</p><p>இரண்டுமாக ஓடுகிறது</p><p>பிள்ளையின் கடிகாரம்</p><p>எது சரியெனத் தெரியாமல்</p><p>நின்றுபோயிருக்கிறது</p><p>அவனது கடிகாரம்!</p>
<p>1.உறங்காத நினைவுகளின் மேல்</p><p>விழுந்து தெறித்தது</p><p>சுவர்க் கடிகாரத்தின்</p><p>பின்னிரவு மணிச்சத்தம்</p><p>ஆடிக்கொண்டே இருக்கிறது</p><p>மையத்தில் நிறுத்த முடியாத</p><p>மனத்தின் பெண்டுலம்</p>.<p>2.விரிசல் விழுந்த</p><p>கடிகாரக் கண்ணாடி</p><p>நினைவுபடுத்துகிறது</p><p>யாருமில்லாத கிழவரின்</p><p>மூக்குக் கண்ணாடியை</p><p>எங்கு நிற்பதெனத் தெரியாமல்</p><p>சுற்றிச் சுற்றி வரும்</p><p>அந்தப் பெரியமுள்</p><p>அவர்தான் போல</p> <p>3.“சின்னமுள் எங்கே இருக்கு</p><p>பெரியமுள் எங்கே இருக்கு" </p><p>பார்க்கச் சொன்னாள் அம்மா</p><p>“இரண்டு முள்ளும்</p><p>கடிகாரத்துக்குள்தாம்மா இருக்கு”</p><p>என்றான் குழந்தை</p><p>காலம்</p><p>அப்போது</p><p>அவன் கண்களில் இருந்தது</p>.<p>4.விடைபெறும் நேரம்</p><p>கடைசியாக</p><p>அவனும் அவளும்</p><p>தங்கள் கடிகாரத்தைப்</p><p>பார்த்துக்கொண்டார்கள்</p><p>வட்டமடித்த காலம்</p><p>தொடங்கிய புள்ளியில்</p><p>உள்வாங்கிக்கொண்டது</p><p>இருவரையும்</p> <p>5.தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல</p><p>வாய்த்தது</p><p>வட்டப்பாதைதான்</p><p>கடிகாரங்களுக்கு</p> <p>6.ஒவ்வொரு கடிகாரமும்</p><p>ஒவ்வொரு நேரத்தைக் காட்டுகிறது</p><p>எந்தக் குழப்பமுமில்லாமல் </p><p>கால எந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்</p><p>பழுது பார்ப்பவர்</p> <p>7.“உன் கண்மணிகள்</p><p>காதலின் பெண்டுலங்கள்”</p><p>என்றான் அவன்</p>.<p>“என் உடலே</p><p>கடிகாரமாக</p><p>சுழல்கிறது உன் மோக முள்”</p><p>என்றாள் அவள்</p><p>அவர்கள் நின்றிருந்த சாலையில்</p><p>மணிக்கூண்டுக் கோபுரத்தை</p><p>ஒரு கிழவி</p><p>நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்</p><p>கண் மங்கிய தூரத்தில்</p><p>கலங்கித் தெரியும் நேரத்தை</p> <p>8.நின்றுபோன கடிகாரத்தின்</p><p>முட்களை</p><p>முன்னும் பின்னும் நகர்த்தி</p><p>விளையாடுகிறது குழந்தை...</p><p>குழந்தைக்காக</p><p>முன்னும் பின்னுமாக</p><p>நகர்ந்து கொடுக்கிறது</p><p>காலம்</p> <p>9.எண்களும் இல்லை</p><p>முட்களும் இல்லை</p><p>எண்களுக்கும் முட்களுக்கும்</p><p>இடையில்தான்</p><p>பார்த்துக்கொள்கிறோம்</p><p>அவரவர் நேரத்தை</p>.<p>10.ஜவ்மிட்டாய்க் கடிகாரத்தைச்</p><p>சுவைத்தபடி</p><p>சிரிக்கிறாள் சிறுமி</p><p>அவளது காலத்தின் சுவையை</p><p>அவள் மட்டுமே</p><p>அறிந்தவளாக</p> <p>11.நீங்கள்</p><p>கவனிக்கலாம்</p><p>கவனிக்காமல் போகலாம்</p><p>எல்லோரையும்</p><p>எல்லாவற்றையும்</p><p>கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது</p><p>கடிகாரம்</p> <p>12.மெதுவாக ஓடுகிறது</p><p>அம்மாவின் கடிகாரம்</p><p>வேகமாக ஓடுகிறது</p><p>மனைவியின் கடிகாரம்</p><p>இரண்டுமாக ஓடுகிறது</p><p>பிள்ளையின் கடிகாரம்</p><p>எது சரியெனத் தெரியாமல்</p><p>நின்றுபோயிருக்கிறது</p><p>அவனது கடிகாரம்!</p>