<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>வி</strong>டுபட்டுப்போன</p><p>பிரியத்தின்</p><p>சுவடாய்</p><p>கல்லறையில் உருகிநிற்கும்</p><p>நினைவுதின மெழுகுக்கூம்பல்...</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>வ</strong>னாந்தரத்தில் தன் நிழலை</p><p>தானே துரத்தும்</p><p>சிறுவனின் மூச்சிரைப்பு. </p><p>மட்கிப் போகாத</p><p>சுடுகாட்டுக் கோடிச் சேலையின்</p><p>கத்திரிப் பூ நிறம்</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>கூ</strong>லிஉயர்வுப் போராட்டத்தில்</p><p>லத்திகள் கூறுபோட்ட</p><p>கறுப்புத் தோலை இழுத்துக்கட்டும்</p><p>தர்மாஸ்பத்திரியின் நரம்பு.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>நே</strong>சத்துக்காய் பலிபீடத்தில்</p><p>தலை அறுபட்டவன் திமிறலில்</p><p>பார்வைபெற்ற கூகையின்</p><p>செவிகிழிக்கும் மீஅலறல்.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>கு</strong>லதெய்வத்துக்காக நேர்ந்துவிடப்பட்ட</p><p>விலங்கினத்தின் கழுத்தில்தொங்கும்</p><p>செப்புமணி. </p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>க</strong>லவரத்தில்</p><p>உடைந்து சிதறிய</p><p>வயலினில் எஞ்சியிருக்கும்</p><p>ஒற்றை நரம்பு.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>சூ</strong>தாட்டத்தில் தோற்றுப்போன</p><p>முதல்மாத ஊதியம். போர் சென்ற</p><p>தலைவனுக்காய் வைகறையில் பூத்த</p><p>வாகை மலர்.</p>
<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>வி</strong>டுபட்டுப்போன</p><p>பிரியத்தின்</p><p>சுவடாய்</p><p>கல்லறையில் உருகிநிற்கும்</p><p>நினைவுதின மெழுகுக்கூம்பல்...</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>வ</strong>னாந்தரத்தில் தன் நிழலை</p><p>தானே துரத்தும்</p><p>சிறுவனின் மூச்சிரைப்பு. </p><p>மட்கிப் போகாத</p><p>சுடுகாட்டுக் கோடிச் சேலையின்</p><p>கத்திரிப் பூ நிறம்</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>கூ</strong>லிஉயர்வுப் போராட்டத்தில்</p><p>லத்திகள் கூறுபோட்ட</p><p>கறுப்புத் தோலை இழுத்துக்கட்டும்</p><p>தர்மாஸ்பத்திரியின் நரம்பு.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>நே</strong>சத்துக்காய் பலிபீடத்தில்</p><p>தலை அறுபட்டவன் திமிறலில்</p><p>பார்வைபெற்ற கூகையின்</p><p>செவிகிழிக்கும் மீஅலறல்.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>கு</strong>லதெய்வத்துக்காக நேர்ந்துவிடப்பட்ட</p><p>விலங்கினத்தின் கழுத்தில்தொங்கும்</p><p>செப்புமணி. </p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>க</strong>லவரத்தில்</p><p>உடைந்து சிதறிய</p><p>வயலினில் எஞ்சியிருக்கும்</p><p>ஒற்றை நரம்பு.</p>.<p><strong>காதலென்பது...</strong></p><p><strong>சூ</strong>தாட்டத்தில் தோற்றுப்போன</p><p>முதல்மாத ஊதியம். போர் சென்ற</p><p>தலைவனுக்காய் வைகறையில் பூத்த</p><p>வாகை மலர்.</p>