<p>மனிதர்களைப் போல் </p><p>திடீரென </p><p>மரணிப்பதில்லை </p><p>போன்சாய் மரங்கள்.</p><p>மரணத்தை ஒரு கலையாகப் பயில்கின்றன அவை.</p><p>சிவப்பு சாராயத்தை </p><p>மெல்ல மெல்லப் பருகுவதுபோல </p><p>மரணத்தை </p><p>மிருதுவாய்ப் பருகுகின்றன. </p><p>குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் போன்ற </p><p>தங்களின் மிருதுவான கிளைகள் </p><p>கடினப்படத் தொடங்கும்போதே </p><p>மரணத்தின் ரயில் </p><p>பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டதை </p><p>யூகித்துவிடுகின்றன அவை.</p><p>போரினாலும் பஞ்சத்தாலும் </p><p>மனிதர்கள் </p><p>தாய் மண்ணை விட்டு ஓடிப்போவதுபோல் </p><p>வரவேற்பறையின் பூந்தொட்டியை விட்டு</p><p>ஓடிப்போவதில்லை </p><p>போன்சாய் மரங்கள்.</p><p>மரணத்தின் முகத்துக்கு நேரே </p><p>ஐம்பூதங்களையும் சுவாசித்துக்கொண்டு</p><p>ஜீவ சமாதியில் </p><p>ஆழ்ந்துவிடுகின்றன அவை.</p><p><strong>- கவிதை: இந்திரன்</strong></p>
<p>மனிதர்களைப் போல் </p><p>திடீரென </p><p>மரணிப்பதில்லை </p><p>போன்சாய் மரங்கள்.</p><p>மரணத்தை ஒரு கலையாகப் பயில்கின்றன அவை.</p><p>சிவப்பு சாராயத்தை </p><p>மெல்ல மெல்லப் பருகுவதுபோல </p><p>மரணத்தை </p><p>மிருதுவாய்ப் பருகுகின்றன. </p><p>குழந்தைகளின் பிஞ்சு விரல்களைப் போன்ற </p><p>தங்களின் மிருதுவான கிளைகள் </p><p>கடினப்படத் தொடங்கும்போதே </p><p>மரணத்தின் ரயில் </p><p>பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டதை </p><p>யூகித்துவிடுகின்றன அவை.</p><p>போரினாலும் பஞ்சத்தாலும் </p><p>மனிதர்கள் </p><p>தாய் மண்ணை விட்டு ஓடிப்போவதுபோல் </p><p>வரவேற்பறையின் பூந்தொட்டியை விட்டு</p><p>ஓடிப்போவதில்லை </p><p>போன்சாய் மரங்கள்.</p><p>மரணத்தின் முகத்துக்கு நேரே </p><p>ஐம்பூதங்களையும் சுவாசித்துக்கொண்டு</p><p>ஜீவ சமாதியில் </p><p>ஆழ்ந்துவிடுகின்றன அவை.</p><p><strong>- கவிதை: இந்திரன்</strong></p>