<p><strong>நீ</strong>ங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல்</p><p>அவ்வளவு சிறியவையல்ல</p><p>காற்றாலையில் சுற்றிக்கொண்டிருக்கும் அதன் விசிறிகள்,</p><p>ஒரு வெளியை வெட்டித்திரும்பும் நொடியை</p><p>திரும்பத் திரும்ப,</p><p>மிக சாதாரணமாக</p><p>செய்துகொண்டிருப்பது அவற்றுக்கு மிக எளிதாகயிருக்கிறது.</p><p><strong>மி</strong>கவும் நம்பும் ஒரு சொல்லைத்தான் எப்போதும் </p><p>நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,</p><p>ஒவ்வொரு துக்கமாகவும்</p><p>ஒவ்வொரு சந்தோசமாகவும்</p><p>ஒவ்வொரு பரிசாகவும்</p><p>ஒவ்வொரு பறந்து வரும் சிறிய இறகாகவும்</p><p>பிரித்துக்கொண்டிருக்கும் இம்மாலையைச் சிறிது ஈரம் நிறைந்ததாக்குகின்றன </p><p>ஒவ்வொரு பொரியாக இழுத்துச்செல்லும் மீன்கள்.</p><p><strong>இ</strong>வ்வாறாகயில்லாமல் சிறிது சிறிதாக வெறுத்திருக்கலாம்</p><p>கொஞ்சமாகத் திறந்து உணர்ந்திருக்கலாம் </p><p>அச்சிறிய நேசங்களின் சொற்களை.</p><p>கொஞ்சமாக நகர்ந்து அவ்வுறவை இன்னும் </p><p>சற்று ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.</p><p>எப்போதும்போல் கொஞ்சமாக ஏமாற்றிவிட்டுக்</p><p>கடந்திருக்கலாம்.</p><p>இந்தக் கயிற்றின் சுருக்கத்தை மேலும் சோதித்திருக்கலாம்</p><p>சிறிய கைகளில் வந்துசேர்ந்திருக்கும் இச்சிறிய இறகுகளை</p><p>மீண்டும் ஒவ்வொன்றாகப் பறக்கவிட</p><p>நானென்னதான் செய்ய வேண்டும். </p>.<p><strong>மீ</strong>தமிருக்கும் எல்லா நிராகரிப்புகளையும்</p><p>ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். </p><p>தன் மடியில் துவண்டுகிடக்கும் ஓர் உயிருக்காக</p><p>மிகச் சீக்கிரமாக சங்கீதத்தைத் துவங்க வேண்டும்.</p><p>எதற்காகவோ கைவிடப்பட்ட ஒரு சொல்</p><p>தினந்தோறும் வந்து நிற்கும் அவ்வாசலைத் திறந்துவைக்க வேண்டும்.</p><p>இவற்றுக்கருகிலேயே எப்போதுமிருப்பதாய்</p><p>அவற்றை நம்பவைக்க வேண்டும்.</p><p>ஆக முதலில்,</p><p>பறந்து வரும் சிறிய இறகிற்கு அதன் திசை</p><p>மிகப்பிரமாண்டமானதுதான்.</p><p><strong>அ</strong>ங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்,</p><p>உன் நிலம் சுதந்திரமானதுதான்.</p><p>உன் மரணம் இங்குதான் நிகழவேண்டும்,</p><p>எல்லா நீதி மாண்புகளுக்கு முன்பாக.</p><p>எல்லா எளிய மக்களுக்கு முன்பாக,</p><p>அங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்.</p><p>நாம் சிறிது சிறிதாக,</p><p>நமக்குப் பிடித்தமான காலமாக இதை மாற்றிக்கொள்ளலாம்.</p><p>ஏன் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய்,</p><p>பாதி சிரித்த முகத்துடன் எப்போதுமிருப்பவர்</p><p>தான்</p><p>கடவுள்</p><p>இங்கு.</p><p><strong>ஒ</strong>ரு ஞாபகத்தை ஆகக்கடைசியில்</p><p>புதைக்கும்போது அது புதைந்துகொள்கிறது</p><p>அல்லது</p><p>எரிக்கும்போது எரிந்தும்கொள்கிறது</p><p>அது எப்போதும் இப்படித்தான்,</p><p>கடைசி வார்த்தையை அவ்வளவு நெருக்கமாக</p><p>சொல்லிக்கொண்டேயிருக்கும்.</p>
<p><strong>நீ</strong>ங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல்</p><p>அவ்வளவு சிறியவையல்ல</p><p>காற்றாலையில் சுற்றிக்கொண்டிருக்கும் அதன் விசிறிகள்,</p><p>ஒரு வெளியை வெட்டித்திரும்பும் நொடியை</p><p>திரும்பத் திரும்ப,</p><p>மிக சாதாரணமாக</p><p>செய்துகொண்டிருப்பது அவற்றுக்கு மிக எளிதாகயிருக்கிறது.</p><p><strong>மி</strong>கவும் நம்பும் ஒரு சொல்லைத்தான் எப்போதும் </p><p>நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,</p><p>ஒவ்வொரு துக்கமாகவும்</p><p>ஒவ்வொரு சந்தோசமாகவும்</p><p>ஒவ்வொரு பரிசாகவும்</p><p>ஒவ்வொரு பறந்து வரும் சிறிய இறகாகவும்</p><p>பிரித்துக்கொண்டிருக்கும் இம்மாலையைச் சிறிது ஈரம் நிறைந்ததாக்குகின்றன </p><p>ஒவ்வொரு பொரியாக இழுத்துச்செல்லும் மீன்கள்.</p><p><strong>இ</strong>வ்வாறாகயில்லாமல் சிறிது சிறிதாக வெறுத்திருக்கலாம்</p><p>கொஞ்சமாகத் திறந்து உணர்ந்திருக்கலாம் </p><p>அச்சிறிய நேசங்களின் சொற்களை.</p><p>கொஞ்சமாக நகர்ந்து அவ்வுறவை இன்னும் </p><p>சற்று ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.</p><p>எப்போதும்போல் கொஞ்சமாக ஏமாற்றிவிட்டுக்</p><p>கடந்திருக்கலாம்.</p><p>இந்தக் கயிற்றின் சுருக்கத்தை மேலும் சோதித்திருக்கலாம்</p><p>சிறிய கைகளில் வந்துசேர்ந்திருக்கும் இச்சிறிய இறகுகளை</p><p>மீண்டும் ஒவ்வொன்றாகப் பறக்கவிட</p><p>நானென்னதான் செய்ய வேண்டும். </p>.<p><strong>மீ</strong>தமிருக்கும் எல்லா நிராகரிப்புகளையும்</p><p>ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். </p><p>தன் மடியில் துவண்டுகிடக்கும் ஓர் உயிருக்காக</p><p>மிகச் சீக்கிரமாக சங்கீதத்தைத் துவங்க வேண்டும்.</p><p>எதற்காகவோ கைவிடப்பட்ட ஒரு சொல்</p><p>தினந்தோறும் வந்து நிற்கும் அவ்வாசலைத் திறந்துவைக்க வேண்டும்.</p><p>இவற்றுக்கருகிலேயே எப்போதுமிருப்பதாய்</p><p>அவற்றை நம்பவைக்க வேண்டும்.</p><p>ஆக முதலில்,</p><p>பறந்து வரும் சிறிய இறகிற்கு அதன் திசை</p><p>மிகப்பிரமாண்டமானதுதான்.</p><p><strong>அ</strong>ங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்,</p><p>உன் நிலம் சுதந்திரமானதுதான்.</p><p>உன் மரணம் இங்குதான் நிகழவேண்டும்,</p><p>எல்லா நீதி மாண்புகளுக்கு முன்பாக.</p><p>எல்லா எளிய மக்களுக்கு முன்பாக,</p><p>அங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்.</p><p>நாம் சிறிது சிறிதாக,</p><p>நமக்குப் பிடித்தமான காலமாக இதை மாற்றிக்கொள்ளலாம்.</p><p>ஏன் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய்,</p><p>பாதி சிரித்த முகத்துடன் எப்போதுமிருப்பவர்</p><p>தான்</p><p>கடவுள்</p><p>இங்கு.</p><p><strong>ஒ</strong>ரு ஞாபகத்தை ஆகக்கடைசியில்</p><p>புதைக்கும்போது அது புதைந்துகொள்கிறது</p><p>அல்லது</p><p>எரிக்கும்போது எரிந்தும்கொள்கிறது</p><p>அது எப்போதும் இப்படித்தான்,</p><p>கடைசி வார்த்தையை அவ்வளவு நெருக்கமாக</p><p>சொல்லிக்கொண்டேயிருக்கும்.</p>