<p><strong>அ</strong>ன்பானவர்களே</p><p>இன்றைக்கு யாரையெல்லாம் கொல்லப்போகிறீர்?</p><p>இன்றைக்கான பட்டியலில் நானும் இருப்பேனாகில்</p><p>எனது வரிசை எண்ணை முன்னிழுங்கள்</p><p>எனக்குள்ள வாய்ப்பனைத்தையும் பரிசீலித்தாயிற்று</p><p>வாழ்தலின் ஒளி மங்குகையில்</p><p>சடுதியில் கொல்லப்படுவதுதான் குறைவான வாதை</p><p>ஓ என் பெயரைக் கேட்கிறீர்களா?</p><p>என்ன பெயரிலிருந்தாலும் கொல்லப்போகிறீர்</p><p>எதற்கிந்த கருணை?</p><p>பொதுப்படைத் தோற்றமும்</p><p>சட்டென பிரித்தறியவியலாததுமான என் பெயரை</p><p>முழுதாகச் சொல்லி முடிக்கும்வரை</p><p>சுடுவிசையை முடுக்காதிருப்பது நேரவிரயம்</p><p>சுடுங்கள்,</p><p>முச்சந்தியில் கட்டிவைக்கப்பட்டு</p><p>ஆயிரம் கல்லடிக்கு அலறிச் சாகும்</p><p>நேரலைக் காட்சியாவதைவிட</p><p>நெற்றிப்பொட்டிலோ இருதயத்திலோ</p><p>ஒற்றைக்குண்டில் டப்பென மாய்வது சுகம்</p>.<p>நாள்நட்சத்திரம் பாராத என்னைக் கொல்வதற்கு</p><p>உகந்த நாளெதையும் குறித்துவைத்திருக்கிறீர்களா?</p><p>பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரும் அந்நன்னாளில்</p><p>எனது நண்பர்களைப்போலவே என்னையும்</p><p>நகரச்சதுக்கத்தின் நடைப்பயிற்சிப் பூங்காவில்</p><p>வீட்டு வாசலில்</p><p>நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்தில்</p><p>அட, நீதிபதியின் கண்முன்னே கொன்றாலும்</p><p>உம்மை தடுக்கவல்லார் எவருமில்லை</p><p>வேறுபட்ட அடையாளங்கள்</p><p>உங்களால் வெறுக்கத்தக்க என் விருப்பங்கள்</p><p>உங்களது முழக்கங்களைத்</p><p>திருப்பி உச்சரிக்க மறுக்கும் கீழ்ப்படியாமை</p><p>உயிர்ப்பிச்சைக்கு மன்றாடாது</p><p>தன்மதிப்பின் வலுவில்</p><p>இவ்விதமாய் கவிதையும் எழுதி ஆத்திரமூட்டுவது</p><p>-உங்களது கொலைப்பட்டியலைவிடவும் நீள்கிற</p><p>எனது குற்றங்களின் பட்டியலால்</p><p>துல்லியத் தாக்குதலுக்கான நியாயத்தைப் பெறுகிறது</p><p>அதிகாரமூறிய உமது தோட்டா</p><p>தெறிக்கும் எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும்</p><p>பெருங்கடலாகிப் பாய்வதன்றி வேறு வழியில்லை</p><p>உமது கிரீடங்களை மூழ்கடிக்க.</p>
<p><strong>அ</strong>ன்பானவர்களே</p><p>இன்றைக்கு யாரையெல்லாம் கொல்லப்போகிறீர்?</p><p>இன்றைக்கான பட்டியலில் நானும் இருப்பேனாகில்</p><p>எனது வரிசை எண்ணை முன்னிழுங்கள்</p><p>எனக்குள்ள வாய்ப்பனைத்தையும் பரிசீலித்தாயிற்று</p><p>வாழ்தலின் ஒளி மங்குகையில்</p><p>சடுதியில் கொல்லப்படுவதுதான் குறைவான வாதை</p><p>ஓ என் பெயரைக் கேட்கிறீர்களா?</p><p>என்ன பெயரிலிருந்தாலும் கொல்லப்போகிறீர்</p><p>எதற்கிந்த கருணை?</p><p>பொதுப்படைத் தோற்றமும்</p><p>சட்டென பிரித்தறியவியலாததுமான என் பெயரை</p><p>முழுதாகச் சொல்லி முடிக்கும்வரை</p><p>சுடுவிசையை முடுக்காதிருப்பது நேரவிரயம்</p><p>சுடுங்கள்,</p><p>முச்சந்தியில் கட்டிவைக்கப்பட்டு</p><p>ஆயிரம் கல்லடிக்கு அலறிச் சாகும்</p><p>நேரலைக் காட்சியாவதைவிட</p><p>நெற்றிப்பொட்டிலோ இருதயத்திலோ</p><p>ஒற்றைக்குண்டில் டப்பென மாய்வது சுகம்</p>.<p>நாள்நட்சத்திரம் பாராத என்னைக் கொல்வதற்கு</p><p>உகந்த நாளெதையும் குறித்துவைத்திருக்கிறீர்களா?</p><p>பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரும் அந்நன்னாளில்</p><p>எனது நண்பர்களைப்போலவே என்னையும்</p><p>நகரச்சதுக்கத்தின் நடைப்பயிற்சிப் பூங்காவில்</p><p>வீட்டு வாசலில்</p><p>நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்தில்</p><p>அட, நீதிபதியின் கண்முன்னே கொன்றாலும்</p><p>உம்மை தடுக்கவல்லார் எவருமில்லை</p><p>வேறுபட்ட அடையாளங்கள்</p><p>உங்களால் வெறுக்கத்தக்க என் விருப்பங்கள்</p><p>உங்களது முழக்கங்களைத்</p><p>திருப்பி உச்சரிக்க மறுக்கும் கீழ்ப்படியாமை</p><p>உயிர்ப்பிச்சைக்கு மன்றாடாது</p><p>தன்மதிப்பின் வலுவில்</p><p>இவ்விதமாய் கவிதையும் எழுதி ஆத்திரமூட்டுவது</p><p>-உங்களது கொலைப்பட்டியலைவிடவும் நீள்கிற</p><p>எனது குற்றங்களின் பட்டியலால்</p><p>துல்லியத் தாக்குதலுக்கான நியாயத்தைப் பெறுகிறது</p><p>அதிகாரமூறிய உமது தோட்டா</p><p>தெறிக்கும் எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும்</p><p>பெருங்கடலாகிப் பாய்வதன்றி வேறு வழியில்லை</p><p>உமது கிரீடங்களை மூழ்கடிக்க.</p>