<p><strong>மெ</strong>ளனமாக இருப்பதற்கும் </p><p>மெளனமாக ஆக்கப்படுவதற்குமிடையில்</p><p>பரவும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது </p><p>என் நிலம் மெளனமாய்.</p><p>ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்</p><p>உறைந்துபோன மொழி சலசலக்கிறது </p><p>இல்லாத நதிகளில்.</p><p>மிகவும் தூரமான மிகவும் ஆழமான</p><p>மருத நினைவுகளைக் களைகளென</p><p>உழுது அழிக்கின்றன ட்ராக்ட்டர்கள்.</p><p>நினைவில் நதிகொண்ட என் வேந்தியின் </p><p>கால்களில் முளைக்கின்றன உலோக வேர்கள்.</p><p><strong>சி</strong>வப்பு விருமானைத் தொடர்வது</p><p>என் வேந்தனுக்கு ஒரு தட்பவெட்பக் கோட்பாடு</p><p>அதன் இன்மை அவனுக்குப் புரிபடவில்லை</p><p>கீரைப்பூக்களை மறக்கத் தொடங்கிவிட்டான்</p><p>அடியுரதிற்கான காரணங்களைத் தவறவிடுகிறான்</p><p>விற்பனையாளனுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்து </p><p>ஞாபகத்தின் துருவேறிய தடுமாற்றத்தை</p><p>காய்ந்த புன்னகையில் மறைத்துக்கொண்டு </p><p>மறுபடியும் கேட்கிறான் என்ன செய்ய வேண்டுமென்று</p><p>தனது மனைவியிடமிருந்தும் அதிகாரியிடமிருந்தும்</p><p>தொடர்ந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்</p><p>விற்பனையாளன் சூடான டீயை வேந்தனின் </p><p>முகத்தில் துப்புவதற்கான ஒத்திகையிலிருக்கிறான்</p><p>நினைவில் மண்கொண்ட என் வேந்தனின்</p><p>கனவில் பூக்கிறது எருக்கலம்.</p>.<p><strong>அ</strong>திகாரம் மிக்கது தும்பை</p><p>வெண்மையாய் பிரகாசிக்கிறது</p><p>பட்டாம்பூச்சிகளுக்குத் தேனைத் தந்துவிட்டு</p><p>குழந்தைகளிடம் தாத்தாச்செடிகளைக் </p><p>காட்டிக்கொடுக்கிறது. </p><p>நிலம் என்பது பண்பாட்டுச் சந்தை</p><p>அதில் என் வேந்தனின் உடல் முதலாகிறது</p><p>என் வேந்தியின் கனவு கழிவாகிறது</p><p>லாபத்தின் நதி பாய்கிறது. </p><p>மருதத்தின் உச்சிக்கிளையில் </p><p>ஒரு மரநாய் ஊளையிடுகிறது</p><p>காலகாலமாக விசும்பு நோக்கி.</p><p>நினைவில் சொல்கொண்ட எம் கவிஞர்</p><p>திணை பிரிக்கின்றனர் போதத்தில்.</p><p><strong>எ</strong>ம்மனார் வேந்தி காதலி </p><p>எம்மனார் வேந்தன் காதலன்</p><p>தவளைகள் தெறித்துக் கரைவிழ</p><p>நதியினடியில் புணர்ந்தனர் மகிழ்ந்தனர்</p><p>பிறந்தது மருதம்.</p><p>பழுப்பும் அடர்ந்த கறுப்பும் சேர்ந்து மின்னும்</p><p>அவர்களின் கண்களுக்கு பூர்வ வயது</p><p>நிலத்தை உப்பிட்டு வளர்த்தார்கள்.</p><p>அவர்கள் தங்கள் உடம்பிலிருந்தே </p><p>வனைந்தார்கள் நிலத்தை</p><p>அதில் ஒரு மண்கூட்டை.</p><p>நினைவில் பாதம்கொண்ட மண்</p><p>மருவிக்கொண்டிருக்கிறது கந்தகமாக.</p><p><strong>அ</strong>வர்கள் எதிலும் பங்குகொள்வதில்லை</p><p>மாறாக அதன் பங்காகவே இருந்தார்கள்</p><p>தங்களையே விதைத்தார்கள்</p><p>தங்களையே வளர்த்தார்கள்</p><p>தங்களையே தின்றார்கள்</p><p>தங்களையே பெற்றார்கள்</p><p>தங்களையே மரபாக்கினார்கள்</p><p>நினைவில் மரபைக்கொண்ட மனிதன்</p><p>உண்மைக்கு ஓரடி முன்னால் இருக்கிறான்.</p>
<p><strong>மெ</strong>ளனமாக இருப்பதற்கும் </p><p>மெளனமாக ஆக்கப்படுவதற்குமிடையில்</p><p>பரவும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது </p><p>என் நிலம் மெளனமாய்.</p><p>ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்</p><p>உறைந்துபோன மொழி சலசலக்கிறது </p><p>இல்லாத நதிகளில்.</p><p>மிகவும் தூரமான மிகவும் ஆழமான</p><p>மருத நினைவுகளைக் களைகளென</p><p>உழுது அழிக்கின்றன ட்ராக்ட்டர்கள்.</p><p>நினைவில் நதிகொண்ட என் வேந்தியின் </p><p>கால்களில் முளைக்கின்றன உலோக வேர்கள்.</p><p><strong>சி</strong>வப்பு விருமானைத் தொடர்வது</p><p>என் வேந்தனுக்கு ஒரு தட்பவெட்பக் கோட்பாடு</p><p>அதன் இன்மை அவனுக்குப் புரிபடவில்லை</p><p>கீரைப்பூக்களை மறக்கத் தொடங்கிவிட்டான்</p><p>அடியுரதிற்கான காரணங்களைத் தவறவிடுகிறான்</p><p>விற்பனையாளனுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்து </p><p>ஞாபகத்தின் துருவேறிய தடுமாற்றத்தை</p><p>காய்ந்த புன்னகையில் மறைத்துக்கொண்டு </p><p>மறுபடியும் கேட்கிறான் என்ன செய்ய வேண்டுமென்று</p><p>தனது மனைவியிடமிருந்தும் அதிகாரியிடமிருந்தும்</p><p>தொடர்ந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்</p><p>விற்பனையாளன் சூடான டீயை வேந்தனின் </p><p>முகத்தில் துப்புவதற்கான ஒத்திகையிலிருக்கிறான்</p><p>நினைவில் மண்கொண்ட என் வேந்தனின்</p><p>கனவில் பூக்கிறது எருக்கலம்.</p>.<p><strong>அ</strong>திகாரம் மிக்கது தும்பை</p><p>வெண்மையாய் பிரகாசிக்கிறது</p><p>பட்டாம்பூச்சிகளுக்குத் தேனைத் தந்துவிட்டு</p><p>குழந்தைகளிடம் தாத்தாச்செடிகளைக் </p><p>காட்டிக்கொடுக்கிறது. </p><p>நிலம் என்பது பண்பாட்டுச் சந்தை</p><p>அதில் என் வேந்தனின் உடல் முதலாகிறது</p><p>என் வேந்தியின் கனவு கழிவாகிறது</p><p>லாபத்தின் நதி பாய்கிறது. </p><p>மருதத்தின் உச்சிக்கிளையில் </p><p>ஒரு மரநாய் ஊளையிடுகிறது</p><p>காலகாலமாக விசும்பு நோக்கி.</p><p>நினைவில் சொல்கொண்ட எம் கவிஞர்</p><p>திணை பிரிக்கின்றனர் போதத்தில்.</p><p><strong>எ</strong>ம்மனார் வேந்தி காதலி </p><p>எம்மனார் வேந்தன் காதலன்</p><p>தவளைகள் தெறித்துக் கரைவிழ</p><p>நதியினடியில் புணர்ந்தனர் மகிழ்ந்தனர்</p><p>பிறந்தது மருதம்.</p><p>பழுப்பும் அடர்ந்த கறுப்பும் சேர்ந்து மின்னும்</p><p>அவர்களின் கண்களுக்கு பூர்வ வயது</p><p>நிலத்தை உப்பிட்டு வளர்த்தார்கள்.</p><p>அவர்கள் தங்கள் உடம்பிலிருந்தே </p><p>வனைந்தார்கள் நிலத்தை</p><p>அதில் ஒரு மண்கூட்டை.</p><p>நினைவில் பாதம்கொண்ட மண்</p><p>மருவிக்கொண்டிருக்கிறது கந்தகமாக.</p><p><strong>அ</strong>வர்கள் எதிலும் பங்குகொள்வதில்லை</p><p>மாறாக அதன் பங்காகவே இருந்தார்கள்</p><p>தங்களையே விதைத்தார்கள்</p><p>தங்களையே வளர்த்தார்கள்</p><p>தங்களையே தின்றார்கள்</p><p>தங்களையே பெற்றார்கள்</p><p>தங்களையே மரபாக்கினார்கள்</p><p>நினைவில் மரபைக்கொண்ட மனிதன்</p><p>உண்மைக்கு ஓரடி முன்னால் இருக்கிறான்.</p>