<p><strong>இ</strong>றக்கும் தறுவாயில் என் அம்மா</p><p>இரண்டு உள்ளங்கைகளைத் தந்தாள்</p><p>இறுக்கித் தைக்கப்பட்ட </p><p>ரேகையின் தையல்</p><p>எங்கே விடுபடுமோவென</p><p>அன்றிலிருந்து கையை உதறுவதேயில்லை</p><p>நெற்குறியின் உடலைத் தலையிலிருந்து </p><p>இப்படி ! அறுத்துக் காண்பிக்கிறது</p><p>கதிரரிவாளின் கேள்விக்குறி.</p><p>கறையான் வனைந்து மீதம்வைத்த </p><p>ஏர்க்கலப்பையை</p><p>சுத்தியலாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்</p><p>ஒரு மடையன்.</p><p>மாடுகளின் கொம்புகளை () அடிக்கடி</p><p>அடைப்புக்குறிகளாகப் பயன்படுத்துவதோடு சரி.</p><p>வேறு தொழிலின்றி </p><p>வலையோடு கடலுக்குப் புறப்படுகின்றன </p><p>காலிகிணற்றுக்குள் கூடுகட்டிப் பழகிய சிலந்திகள்</p><p>பனிவயலில் புகைமூட்டம்,</p><p>அணைந்தணைந்து மிதக்கும் மின்மினிகளென</p><p>சிதறிய கங்குகள்</p><p>எட்டு புள்ளி நாலு வரிசையென </p><p>மறுகாலை விழுந்துகிடந்தது.</p><p>வழிதப்பிய ஆட்டுமேகத்தை </p><p>பீடிப்புகையால் கட்டியிழுத்துப்போகிறவன்</p><p>இரவு வானைப் பார்த்துக் கேட்டேன்,</p><p>இத்தனை விதைகளிருந்தும் பயனென்ன</p><p>கண்ணுக்குத் தெரியும்படியா விதைப்பது</p><p>கண்டுகொள்ளப்படாத சிறுநகரத்தின்</p><p>கூரையின் மேல்நின்று </p><p>குதித்துவிடுவேனென வேடிக்கை </p><p>காட்டுகிறேன்.</p>.<p>பிறகு குதித்தும் காட்டுகிறேன்.</p><p>நிம்மதியாகச் சிதறினேனா </p><p>அதுதான் இல்லை</p><p>படமெடுக்கும் டிஜிட்டல் பாம்புகளால் </p><p>அந்தரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளேன்</p><p>முன்னொரு காலம்</p><p>வரப்பெங்கிலும் உருகிவழிந்த </p><p>தானிய மெழுகுவத்திகளே</p><p>அதன் நுனியின் வந்தமர்ந்த நான்</p><p>உம்மைக் கடித்ததென</p><p>நசுக்கியெறிப்பட்ட பூச்சி.</p><p>தடுக்கி விழுந்திடாது</p><p>விளக்கெங்கும் ஓடித்திரியும் </p><p>சேறுபூசிய பனித்துளிகள்,</p><p>இன்னும் அதனுள்ளே தெரிகிறது</p><p>வெட்டியெறியப்பட்ட </p><p>கபிலர் கண்ட பனைமரம்</p><p>முடிவாக என்னதான் கூறவருகிறாய் </p><p>இந்த உள்ளங்கைகளை வைத்துப் பயனென்ன</p><p>உனக்குத் தெரியுமா </p><p>இவையெல்லாம் வெறும் ரேகையென்று </p><p>கருதுகிறாயா, இல்லை</p><p>‘விளையாது’ என்று தெரிந்தும் </p><p>மின்கலப்பையால் நானே உழுததன் தடங்கள்.</p>
<p><strong>இ</strong>றக்கும் தறுவாயில் என் அம்மா</p><p>இரண்டு உள்ளங்கைகளைத் தந்தாள்</p><p>இறுக்கித் தைக்கப்பட்ட </p><p>ரேகையின் தையல்</p><p>எங்கே விடுபடுமோவென</p><p>அன்றிலிருந்து கையை உதறுவதேயில்லை</p><p>நெற்குறியின் உடலைத் தலையிலிருந்து </p><p>இப்படி ! அறுத்துக் காண்பிக்கிறது</p><p>கதிரரிவாளின் கேள்விக்குறி.</p><p>கறையான் வனைந்து மீதம்வைத்த </p><p>ஏர்க்கலப்பையை</p><p>சுத்தியலாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறான்</p><p>ஒரு மடையன்.</p><p>மாடுகளின் கொம்புகளை () அடிக்கடி</p><p>அடைப்புக்குறிகளாகப் பயன்படுத்துவதோடு சரி.</p><p>வேறு தொழிலின்றி </p><p>வலையோடு கடலுக்குப் புறப்படுகின்றன </p><p>காலிகிணற்றுக்குள் கூடுகட்டிப் பழகிய சிலந்திகள்</p><p>பனிவயலில் புகைமூட்டம்,</p><p>அணைந்தணைந்து மிதக்கும் மின்மினிகளென</p><p>சிதறிய கங்குகள்</p><p>எட்டு புள்ளி நாலு வரிசையென </p><p>மறுகாலை விழுந்துகிடந்தது.</p><p>வழிதப்பிய ஆட்டுமேகத்தை </p><p>பீடிப்புகையால் கட்டியிழுத்துப்போகிறவன்</p><p>இரவு வானைப் பார்த்துக் கேட்டேன்,</p><p>இத்தனை விதைகளிருந்தும் பயனென்ன</p><p>கண்ணுக்குத் தெரியும்படியா விதைப்பது</p><p>கண்டுகொள்ளப்படாத சிறுநகரத்தின்</p><p>கூரையின் மேல்நின்று </p><p>குதித்துவிடுவேனென வேடிக்கை </p><p>காட்டுகிறேன்.</p>.<p>பிறகு குதித்தும் காட்டுகிறேன்.</p><p>நிம்மதியாகச் சிதறினேனா </p><p>அதுதான் இல்லை</p><p>படமெடுக்கும் டிஜிட்டல் பாம்புகளால் </p><p>அந்தரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளேன்</p><p>முன்னொரு காலம்</p><p>வரப்பெங்கிலும் உருகிவழிந்த </p><p>தானிய மெழுகுவத்திகளே</p><p>அதன் நுனியின் வந்தமர்ந்த நான்</p><p>உம்மைக் கடித்ததென</p><p>நசுக்கியெறிப்பட்ட பூச்சி.</p><p>தடுக்கி விழுந்திடாது</p><p>விளக்கெங்கும் ஓடித்திரியும் </p><p>சேறுபூசிய பனித்துளிகள்,</p><p>இன்னும் அதனுள்ளே தெரிகிறது</p><p>வெட்டியெறியப்பட்ட </p><p>கபிலர் கண்ட பனைமரம்</p><p>முடிவாக என்னதான் கூறவருகிறாய் </p><p>இந்த உள்ளங்கைகளை வைத்துப் பயனென்ன</p><p>உனக்குத் தெரியுமா </p><p>இவையெல்லாம் வெறும் ரேகையென்று </p><p>கருதுகிறாயா, இல்லை</p><p>‘விளையாது’ என்று தெரிந்தும் </p><p>மின்கலப்பையால் நானே உழுததன் தடங்கள்.</p>