<p><strong>க</strong>னவு நிகழ்வுகளில்</p><p>மனம் புண்படுவதில்லை</p><p>எல்லாம் செல்லத் துன்பங்கள்</p><p>கனவில் நிகழ்வு என்பது</p><p>செத்த எலியைக் காக்கை </p><p>கொத்திக் குதறுவதுபோல..</p><p>நனவில் நினைவு என்பது</p><p>உயிரோடு ஓடும் எலியை</p><p>பூனை துரத்துவதுபோல..</p><p>நல்லவேளை </p><p>இதெல்லாம் </p><p>கனவுதான் </p><p>எனப் பல நாட்கள்</p><p>விடிகிறது...</p>.<p><strong>உ</strong>ன் உடல் உறங்கி எழும்</p><p>உன்னோடு</p><p>ஒன்றை ஈனும்</p><p>நன்றாய் வளர்க்கும் கொஞ்சம்</p><p>என்றும் </p><p>புறம் உண்டு அகம் கழிக்கும்</p><p>ஊறவைத்துக் கசக்கிப் பிழிந்து உதறி</p><p>காயப்போட்டுக் கொடியில் உலரும்</p><p>உன் துணிமணிகள்</p><p>அவ்வளவுதான் </p><p>உன் காலப் பொருட்சேகர</p><p>வாழ்வாங்கு வாழ்வு</p><p>மீண்டும் </p><p>போய்த் தூங்கு பேசாமல்.</p>
<p><strong>க</strong>னவு நிகழ்வுகளில்</p><p>மனம் புண்படுவதில்லை</p><p>எல்லாம் செல்லத் துன்பங்கள்</p><p>கனவில் நிகழ்வு என்பது</p><p>செத்த எலியைக் காக்கை </p><p>கொத்திக் குதறுவதுபோல..</p><p>நனவில் நினைவு என்பது</p><p>உயிரோடு ஓடும் எலியை</p><p>பூனை துரத்துவதுபோல..</p><p>நல்லவேளை </p><p>இதெல்லாம் </p><p>கனவுதான் </p><p>எனப் பல நாட்கள்</p><p>விடிகிறது...</p>.<p><strong>உ</strong>ன் உடல் உறங்கி எழும்</p><p>உன்னோடு</p><p>ஒன்றை ஈனும்</p><p>நன்றாய் வளர்க்கும் கொஞ்சம்</p><p>என்றும் </p><p>புறம் உண்டு அகம் கழிக்கும்</p><p>ஊறவைத்துக் கசக்கிப் பிழிந்து உதறி</p><p>காயப்போட்டுக் கொடியில் உலரும்</p><p>உன் துணிமணிகள்</p><p>அவ்வளவுதான் </p><p>உன் காலப் பொருட்சேகர</p><p>வாழ்வாங்கு வாழ்வு</p><p>மீண்டும் </p><p>போய்த் தூங்கு பேசாமல்.</p>