<p>ஆயிரம் நிலாக்களை அழைத்துவந்தவன் நீ!</p><p>இயற்கை என்னும் இளைய கன்னி</p><p>எப்போதும் உன் குரலுக்கு</p><p>வயசாகாத வரம் தந்தாள்.</p><p>தாய்ப்பறவையின் முட்டையைக்</p><p>காக்கும் கவனத்துடன்</p><p>தலைமுறை தாண்டி உன் குரல் ஏந்தினோம்!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p><p>பிறந்தோம்...</p><p>‘கற்பூர பொம்மை ஒன்று... கைவீசும் தென்றல் ஒன்று ’ என</p><p>தாயின் விரலாய்த் தலைகோதினாய்!</p><p>வளர்ந்தோம்...</p><p>‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’</p><p>‘பருவமே... புதிய பாடல் பாடு’ என்றாய்!</p><p>இணைந்தோம்...</p><p>‘காதலின் தீபம் ஒன்றை’</p><p>இதயத்தின் அறைகளில் ஏற்றிவைத்தாய்!</p><p>பிரிந்தோம்...</p><p>‘உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன்’</p><p>என்று உருகவைத்தாய்!</p><p>மணந்தோம்...</p><p>‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்’ணுக்கும்</p><p>‘அழகான மனைவி அன்பான துணைவி</p><p>அமைந்தாலே பேரின்பமே’ என வாழும் ஆணுக்கும்</p><p>பாடல்களால் பூச்செண்டு தந்தாய்!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p>.<p>ஒலிநாடா, குறுவட்டு, பென்டிரைவ்,</p><p>வயலின் முதல் எலெக்ட்ரானிக் கீ போர்டு வரை</p><p>எத்தனை கருவிகள் மாறியிருக்கும்!</p><p>உன் குரலுக்கு உதடசைத்து</p><p>எத்தனை நாயகர்கள் உருவாகியிருப்பார்கள்!</p><p>உன் குரலுக்காய்</p><p>எத்தனை இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்!</p><p>நீ பாடுவதற்காய்</p><p>எத்தனை விரல்கள்</p><p>எத்தனை வரிகளை எழுதிக்குவித்திருக்கும்!</p><p>எல்லாம் மாறியது...</p><p>எங்களைக் கரையவைத்த உன் குரல் மட்டும்</p><p>எப்போதும் உடையாத</p><p>பனிக்கட்டிதானே பாலு!</p><p>எத்தனை பழரசம்</p><p>பிழிந்து தந்திருப்பாய்!</p><p>எத்தனை தேனடை</p><p>பிளந்து தந்திருப்பாய்!</p><p>எத்தனை கனவுகளை</p><p>எங்கள் கோப்பைகளில் மிதக்க விட்டிருப்பாய்!</p><p>‘திருமுகம் வந்து பழகுமோ</p><p>அறிமுகம் இன்றி விலகுமோ...</p><p>பொன்னிநதி கன்னிநதி ஜீவநதி...’</p><p>வீணை நரம்புகள் அறுபட...</p><p>கொலுசு மணிகள் தெறித்துவிழ</p><p>அந்த மண்டபத்தில் நீ</p><p>ஆடிப்பாடியபோது</p><p>உடைந்து அழுதோமே!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p><p>ஒவ்வொரு ஒலிப்பதிவின்போதும்</p><p>இளையராஜாவின் கைகள் உயர்ந்து தாழ்ந்தபோது</p><p>அதன் ஆணைக்கேற்ப</p><p>உற்சாக நீரூற்றாய்</p><p>உன் குரல் உயர்ந்து ஒலித்ததே பாலு!</p><p>சிலசமயம் அவர் சொல்பேச்சையும் மீறி</p><p>பாடலின் இடுப்பைக் கிள்ளி</p><p>சிணுங்கிச் சிரிக்கவைத்து</p><p>சிருங்காரம் கூட்டினாய்!</p><p>இசையை</p><p>இளையராஜா குரல் முன்மொழிந்தது</p><p>உன் குரல் வழிமொழிந்தது!</p><p>இளையராஜா சொன்னதையெல்லாம் கேட்டாயே பாலு!</p><p>‘எழுந்து வா பாலு, எழுந்து வா பாலு’</p><p>என்று அவர் சொன்னதை மட்டும்</p><p>ஏன் கேட்க மறுத்தாய் பாலு?</p>
<p>ஆயிரம் நிலாக்களை அழைத்துவந்தவன் நீ!</p><p>இயற்கை என்னும் இளைய கன்னி</p><p>எப்போதும் உன் குரலுக்கு</p><p>வயசாகாத வரம் தந்தாள்.</p><p>தாய்ப்பறவையின் முட்டையைக்</p><p>காக்கும் கவனத்துடன்</p><p>தலைமுறை தாண்டி உன் குரல் ஏந்தினோம்!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p><p>பிறந்தோம்...</p><p>‘கற்பூர பொம்மை ஒன்று... கைவீசும் தென்றல் ஒன்று ’ என</p><p>தாயின் விரலாய்த் தலைகோதினாய்!</p><p>வளர்ந்தோம்...</p><p>‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’</p><p>‘பருவமே... புதிய பாடல் பாடு’ என்றாய்!</p><p>இணைந்தோம்...</p><p>‘காதலின் தீபம் ஒன்றை’</p><p>இதயத்தின் அறைகளில் ஏற்றிவைத்தாய்!</p><p>பிரிந்தோம்...</p><p>‘உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன்’</p><p>என்று உருகவைத்தாய்!</p><p>மணந்தோம்...</p><p>‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்’ணுக்கும்</p><p>‘அழகான மனைவி அன்பான துணைவி</p><p>அமைந்தாலே பேரின்பமே’ என வாழும் ஆணுக்கும்</p><p>பாடல்களால் பூச்செண்டு தந்தாய்!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p>.<p>ஒலிநாடா, குறுவட்டு, பென்டிரைவ்,</p><p>வயலின் முதல் எலெக்ட்ரானிக் கீ போர்டு வரை</p><p>எத்தனை கருவிகள் மாறியிருக்கும்!</p><p>உன் குரலுக்கு உதடசைத்து</p><p>எத்தனை நாயகர்கள் உருவாகியிருப்பார்கள்!</p><p>உன் குரலுக்காய்</p><p>எத்தனை இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்!</p><p>நீ பாடுவதற்காய்</p><p>எத்தனை விரல்கள்</p><p>எத்தனை வரிகளை எழுதிக்குவித்திருக்கும்!</p><p>எல்லாம் மாறியது...</p><p>எங்களைக் கரையவைத்த உன் குரல் மட்டும்</p><p>எப்போதும் உடையாத</p><p>பனிக்கட்டிதானே பாலு!</p><p>எத்தனை பழரசம்</p><p>பிழிந்து தந்திருப்பாய்!</p><p>எத்தனை தேனடை</p><p>பிளந்து தந்திருப்பாய்!</p><p>எத்தனை கனவுகளை</p><p>எங்கள் கோப்பைகளில் மிதக்க விட்டிருப்பாய்!</p><p>‘திருமுகம் வந்து பழகுமோ</p><p>அறிமுகம் இன்றி விலகுமோ...</p><p>பொன்னிநதி கன்னிநதி ஜீவநதி...’</p><p>வீணை நரம்புகள் அறுபட...</p><p>கொலுசு மணிகள் தெறித்துவிழ</p><p>அந்த மண்டபத்தில் நீ</p><p>ஆடிப்பாடியபோது</p><p>உடைந்து அழுதோமே!</p><p>நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?</p><p>ஒவ்வொரு ஒலிப்பதிவின்போதும்</p><p>இளையராஜாவின் கைகள் உயர்ந்து தாழ்ந்தபோது</p><p>அதன் ஆணைக்கேற்ப</p><p>உற்சாக நீரூற்றாய்</p><p>உன் குரல் உயர்ந்து ஒலித்ததே பாலு!</p><p>சிலசமயம் அவர் சொல்பேச்சையும் மீறி</p><p>பாடலின் இடுப்பைக் கிள்ளி</p><p>சிணுங்கிச் சிரிக்கவைத்து</p><p>சிருங்காரம் கூட்டினாய்!</p><p>இசையை</p><p>இளையராஜா குரல் முன்மொழிந்தது</p><p>உன் குரல் வழிமொழிந்தது!</p><p>இளையராஜா சொன்னதையெல்லாம் கேட்டாயே பாலு!</p><p>‘எழுந்து வா பாலு, எழுந்து வா பாலு’</p><p>என்று அவர் சொன்னதை மட்டும்</p><p>ஏன் கேட்க மறுத்தாய் பாலு?</p>