<p>‘நீரின்றி அமையாது உலகு’ என்றார்.</p><p>நீங்கள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்தீர்கள்.</p><p>‘வானின்று உலகம் வழங்கி வருதலால்’</p><p>மழை அமிர்தம் என்றார்.</p><p>நீங்களோ பிச்சைப்பாத்திரங்களோடு</p><p>வான் நோக்கி நிற்கிறீர்கள்.</p><p>‘கற்க கசடற’ என்றார்.</p><p>நீங்களோ கல்வி வியாபாரத்தின்</p><p>கசடுகள் கற்றீர்கள்.</p><p>‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்’ என்றார்.</p><p>விவசாயிகள் தற்கொலை </p><p>செய்துகொள்வதற்கான கயிறுகளைத்</p><p>தயாரித்தீர்கள்.</p><p>‘கண்ணோடு கண்நோக்கினால்</p><p>வாய்ச்சொற்கள் பயனற்றவை’ என்றார்.</p><p>காதலர்களைப் பிணங்களாக்கி</p><p>பேச்சற்று ஆணவக்கொலை செய்தீர்கள்.</p>.<p>‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார்.</p><p>நாக்குகளை விற்றவர்களே</p><p>நாற்காலிகளைக் கைப்பற்றினீர்கள்.</p><p>‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார்.</p><p>ஊரும் சேரியும் இன்னமும் இருக்கின்றன.</p>.<p>‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார்.</p><p>நீங்கள் வள்ளுவரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்து</p><p>அவருக்கான மதச்சடங்கு செய்தீர்கள்.</p><p>நீங்கள் எப்படி இருக்கவேண்டும்</p><p>என்பதைச் சொன்னவர் வள்ளுவர்.</p><p>நீங்களோ வள்ளுவர் எப்படி இருந்தார் என்று</p><p>வாதம் செய்கிறீர்கள்.</p><p>இப்போது இருந்திருந்தால்</p><p>‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று</p><p>வள்ளுவர் வாளாதிருந்திருக்க மாட்டார்.</p><p>உங்கள் குற்றம் கடிந்து</p><p>‘பரந்து கெடுக இந்தப் பதர்கள்’ என்று</p><p>அறம் பாடியிருப்பார்.</p>
<p>‘நீரின்றி அமையாது உலகு’ என்றார்.</p><p>நீங்கள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்தீர்கள்.</p><p>‘வானின்று உலகம் வழங்கி வருதலால்’</p><p>மழை அமிர்தம் என்றார்.</p><p>நீங்களோ பிச்சைப்பாத்திரங்களோடு</p><p>வான் நோக்கி நிற்கிறீர்கள்.</p><p>‘கற்க கசடற’ என்றார்.</p><p>நீங்களோ கல்வி வியாபாரத்தின்</p><p>கசடுகள் கற்றீர்கள்.</p><p>‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்’ என்றார்.</p><p>விவசாயிகள் தற்கொலை </p><p>செய்துகொள்வதற்கான கயிறுகளைத்</p><p>தயாரித்தீர்கள்.</p><p>‘கண்ணோடு கண்நோக்கினால்</p><p>வாய்ச்சொற்கள் பயனற்றவை’ என்றார்.</p><p>காதலர்களைப் பிணங்களாக்கி</p><p>பேச்சற்று ஆணவக்கொலை செய்தீர்கள்.</p>.<p>‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார்.</p><p>நாக்குகளை விற்றவர்களே</p><p>நாற்காலிகளைக் கைப்பற்றினீர்கள்.</p><p>‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார்.</p><p>ஊரும் சேரியும் இன்னமும் இருக்கின்றன.</p>.<p>‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார்.</p><p>நீங்கள் வள்ளுவரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்து</p><p>அவருக்கான மதச்சடங்கு செய்தீர்கள்.</p><p>நீங்கள் எப்படி இருக்கவேண்டும்</p><p>என்பதைச் சொன்னவர் வள்ளுவர்.</p><p>நீங்களோ வள்ளுவர் எப்படி இருந்தார் என்று</p><p>வாதம் செய்கிறீர்கள்.</p><p>இப்போது இருந்திருந்தால்</p><p>‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று</p><p>வள்ளுவர் வாளாதிருந்திருக்க மாட்டார்.</p><p>உங்கள் குற்றம் கடிந்து</p><p>‘பரந்து கெடுக இந்தப் பதர்கள்’ என்று</p><p>அறம் பாடியிருப்பார்.</p>