<p><strong>காலத்தைத் தாங்கும் ஆணிகள்</strong></p><p><strong>சு</strong>வர்களில் அறையப்படும் ஆணிகள்</p><p>நினைவுகளைத் தாங்கும்</p><p>பாட்டன் பூட்டன் தாத்தா என</p><p>நமக்குத் தெரியா காலங்களின்</p><p>வரலாறு பேசும்.</p><p>ஆச்சி பாட்டி பூட்டியின்</p><p>தோடுகளும் காது வளர்த்த</p><p>கதைகளும் நிழற்படம் நிரப்பியே</p><p>இருக்கும்</p><p>அம்மா ஆச்சியின் கதையைச்</p><p>சொல்கையிலும்</p><p>ஆச்சி பூட்டியின் கதையைச்</p><p>சொல்கையிலும்</p><p>சீதனமாய் வந்த உரலும்</p><p>அம்மிக்கல்லும் அதன் காலங்களைக்</p><p>கணக்கெடுத்துச் சொல்லும்</p><p>ஆணிகள் எப்போது</p><p>அடிக்கப்பட்டதெனத் தெரியாது</p><p>நிழற்படத்தில் குறிக்கப்பட்ட</p><p>எண்களால் வருடத்தை நினைவுகூரலாம்</p><p>ஆணிகள் காலத்தையே தாங்கும்</p><p>வரம் பெற்றவை</p><p>சுதந்திரத்திற்காக</p><p>காந்தியோடிருந்த பூட்டன்</p><p>என்னிடம் பேசுகிறார்</p><p>ஐஎன்ஏவில் கேப்டனாக இருந்த தாத்தா</p><p>இப்போதும்</p><p>கம்பீரமாகவே மீசை முறுக்குகிறார்</p><p>ஆவணங்கள் பேசுவதை</p><p>ஆணிகள் தாங்குகின்றன</p><p>காலத்தை அழித்துவிட்டு</p><p>ஆணிகளை அப்புறப்படுத்த முடியாது.</p><p><em><strong>- வீரசோழன் க.சோ.திருமாவளவன்.</strong></em></p>.<p><strong>வரமா சாபமா?</strong></p><p><strong>நா</strong>ன் கடவுள்</p><p>நகரில் வாகனங்கள் பெருகி</p><p>சாலைகள் விரிவாக்கப்பட்ட நாளில்</p><p>ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன</p><p>பறவைகள் தங்க இடமில்லாமல் பெயர்ந்தன</p><p>அந்தநாளில்</p><p>நவநாகரிக மனிதன் ஒருவனுக்குப்</p><p>பறவையாகும் ஆசை பிறந்தது</p><p>கடவுளாகிய என்னிடம் வந்தான்</p><p>முதலில் ஊர்வனவாகவும்</p><p>பின் பறக்கும்படியும் மாற்றுகிறேன் என்றேன்</p><p>மனதில் பட்டாம்பூச்சி நினைவுக்கு வரவும்</p><p>சரியெனத் தலையாட்டினான் அவன்</p><p>பின்னாளில்</p><p>சிக்னல் விழும்போது</p><p>வாகனத்தில் ஊர்ந்துகொண்டும்</p><p>சிக்னல் விழுந்தபின்பு</p><p>பறந்துகொண்டும்</p><p>வாழ ஆரம்பித்திருந்தான்</p><p>என்னை நினைத்து </p><p>அவன் நொந்துகொண்ட நாளிலிருந்து</p><p>அவனைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தேன்.</p><p><em><strong>- இரா.செந்தில் கரிகாலன்</strong></em></p>.<p><strong>தாமத வலி</strong></p><p><strong>அ</strong>ம்மாவின் ஒரேயொரு இருமல்</p><p>இரண்டு மூன்றாகத் தொடர்கிறது</p><p>அருகில் சென்று</p><p>தலையை ஆறுதலாகப்பற்றி</p><p>`என்னம்மா?' என்றதும்</p><p>`ஒண்ணுமில்லப்பா இப்ப </p><p>சரியாகிடுச்சி' என்கிறார்</p><p>முதல் இருமலிலேயே </p><p>நான் கேட்டிருக்கலாம்</p><p>எத்தனையோ வலிகளைத் தந்துவிடுகிறது</p><p>தாமதமாகும் ஒற்றை ஆறுதல்.</p><p><em><strong>- ஆண்டன் பெனி</strong></em></p>.<p><strong>காணவில்லை</strong></p><p><strong>கா</strong>ந்தி சிலை பின்புறம்</p><p>உரச் சாக்கு நிழலில்</p><p>ஒற்றைக்காலை மடித்தும்</p><p>பிறிதொன்றை நீட்டியும்</p><p>செருப்புத் தைத்துக்கொண்டிருந்த</p><p>எழுபது வயதைக் கடந்த முதியவர்</p><p>நாளொன்றுக்கு மூன்றுமுறை</p><p>எல்லாப் பேருந்திலும் ஏறியிறங்கும்</p><p>இரண்டு கைகளின் விரலிடுக்கில்</p><p>பாப்கார்ன் பூத்திருக்கும்</p><p>பதினைந்து வயதுக்குக் குறைவான சிறுவன்</p><p>எடை பார்க்கும் மிஷினுக்கு அருகில்</p><p>இடுப்புக்குக் கீழே தொங்கும் பூச்சரத்துடன் </p><p>சிரித்தபடி கண்சிமிட்டும் கலைமகள்</p><p>‘கண்ணில்லாதவன்மா தர்மம் பண்ணுங்கம்மா’வென</p><p>சுதிமாறாமல் நாள்முழுதும் வளையவரும்</p><p>பார்வையற்ற வயோதிக தம்பதியர்</p><p>உச்சி வெயிலில் வெற்றுடம்பில்</p><p>கன்றி குருதியொழுகும் கோடுகளுடன்</p><p>சுளீரென சாட்டையால் விளாசிக்கொள்ளும்</p><p>சலங்கை கட்டிய அந்த அண்ணனும்</p><p>சுதிசேர்த்து மேளம் கொட்டும்</p><p>அவர் மனைவியும்</p><p>மேலாடையில்லாமல்</p><p>தட்டேந்தி வரும் அவர்கள் மகனும்</p><p>இயல்புக்குத் திரும்பிய பிறகும்</p><p>எங்கும் காணவில்லை</p><p>கடந்து செல்லும் நொடியில்</p><p>இமைச் சிறகில் நகைசிந்தும்</p><p>என்னையும்கூடத் தேடலாம்</p><p>அவர்கள் எங்காவது.</p><p><em><strong>- ப.செல்வகுமார்</strong></em></p>
<p><strong>காலத்தைத் தாங்கும் ஆணிகள்</strong></p><p><strong>சு</strong>வர்களில் அறையப்படும் ஆணிகள்</p><p>நினைவுகளைத் தாங்கும்</p><p>பாட்டன் பூட்டன் தாத்தா என</p><p>நமக்குத் தெரியா காலங்களின்</p><p>வரலாறு பேசும்.</p><p>ஆச்சி பாட்டி பூட்டியின்</p><p>தோடுகளும் காது வளர்த்த</p><p>கதைகளும் நிழற்படம் நிரப்பியே</p><p>இருக்கும்</p><p>அம்மா ஆச்சியின் கதையைச்</p><p>சொல்கையிலும்</p><p>ஆச்சி பூட்டியின் கதையைச்</p><p>சொல்கையிலும்</p><p>சீதனமாய் வந்த உரலும்</p><p>அம்மிக்கல்லும் அதன் காலங்களைக்</p><p>கணக்கெடுத்துச் சொல்லும்</p><p>ஆணிகள் எப்போது</p><p>அடிக்கப்பட்டதெனத் தெரியாது</p><p>நிழற்படத்தில் குறிக்கப்பட்ட</p><p>எண்களால் வருடத்தை நினைவுகூரலாம்</p><p>ஆணிகள் காலத்தையே தாங்கும்</p><p>வரம் பெற்றவை</p><p>சுதந்திரத்திற்காக</p><p>காந்தியோடிருந்த பூட்டன்</p><p>என்னிடம் பேசுகிறார்</p><p>ஐஎன்ஏவில் கேப்டனாக இருந்த தாத்தா</p><p>இப்போதும்</p><p>கம்பீரமாகவே மீசை முறுக்குகிறார்</p><p>ஆவணங்கள் பேசுவதை</p><p>ஆணிகள் தாங்குகின்றன</p><p>காலத்தை அழித்துவிட்டு</p><p>ஆணிகளை அப்புறப்படுத்த முடியாது.</p><p><em><strong>- வீரசோழன் க.சோ.திருமாவளவன்.</strong></em></p>.<p><strong>வரமா சாபமா?</strong></p><p><strong>நா</strong>ன் கடவுள்</p><p>நகரில் வாகனங்கள் பெருகி</p><p>சாலைகள் விரிவாக்கப்பட்ட நாளில்</p><p>ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன</p><p>பறவைகள் தங்க இடமில்லாமல் பெயர்ந்தன</p><p>அந்தநாளில்</p><p>நவநாகரிக மனிதன் ஒருவனுக்குப்</p><p>பறவையாகும் ஆசை பிறந்தது</p><p>கடவுளாகிய என்னிடம் வந்தான்</p><p>முதலில் ஊர்வனவாகவும்</p><p>பின் பறக்கும்படியும் மாற்றுகிறேன் என்றேன்</p><p>மனதில் பட்டாம்பூச்சி நினைவுக்கு வரவும்</p><p>சரியெனத் தலையாட்டினான் அவன்</p><p>பின்னாளில்</p><p>சிக்னல் விழும்போது</p><p>வாகனத்தில் ஊர்ந்துகொண்டும்</p><p>சிக்னல் விழுந்தபின்பு</p><p>பறந்துகொண்டும்</p><p>வாழ ஆரம்பித்திருந்தான்</p><p>என்னை நினைத்து </p><p>அவன் நொந்துகொண்ட நாளிலிருந்து</p><p>அவனைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தேன்.</p><p><em><strong>- இரா.செந்தில் கரிகாலன்</strong></em></p>.<p><strong>தாமத வலி</strong></p><p><strong>அ</strong>ம்மாவின் ஒரேயொரு இருமல்</p><p>இரண்டு மூன்றாகத் தொடர்கிறது</p><p>அருகில் சென்று</p><p>தலையை ஆறுதலாகப்பற்றி</p><p>`என்னம்மா?' என்றதும்</p><p>`ஒண்ணுமில்லப்பா இப்ப </p><p>சரியாகிடுச்சி' என்கிறார்</p><p>முதல் இருமலிலேயே </p><p>நான் கேட்டிருக்கலாம்</p><p>எத்தனையோ வலிகளைத் தந்துவிடுகிறது</p><p>தாமதமாகும் ஒற்றை ஆறுதல்.</p><p><em><strong>- ஆண்டன் பெனி</strong></em></p>.<p><strong>காணவில்லை</strong></p><p><strong>கா</strong>ந்தி சிலை பின்புறம்</p><p>உரச் சாக்கு நிழலில்</p><p>ஒற்றைக்காலை மடித்தும்</p><p>பிறிதொன்றை நீட்டியும்</p><p>செருப்புத் தைத்துக்கொண்டிருந்த</p><p>எழுபது வயதைக் கடந்த முதியவர்</p><p>நாளொன்றுக்கு மூன்றுமுறை</p><p>எல்லாப் பேருந்திலும் ஏறியிறங்கும்</p><p>இரண்டு கைகளின் விரலிடுக்கில்</p><p>பாப்கார்ன் பூத்திருக்கும்</p><p>பதினைந்து வயதுக்குக் குறைவான சிறுவன்</p><p>எடை பார்க்கும் மிஷினுக்கு அருகில்</p><p>இடுப்புக்குக் கீழே தொங்கும் பூச்சரத்துடன் </p><p>சிரித்தபடி கண்சிமிட்டும் கலைமகள்</p><p>‘கண்ணில்லாதவன்மா தர்மம் பண்ணுங்கம்மா’வென</p><p>சுதிமாறாமல் நாள்முழுதும் வளையவரும்</p><p>பார்வையற்ற வயோதிக தம்பதியர்</p><p>உச்சி வெயிலில் வெற்றுடம்பில்</p><p>கன்றி குருதியொழுகும் கோடுகளுடன்</p><p>சுளீரென சாட்டையால் விளாசிக்கொள்ளும்</p><p>சலங்கை கட்டிய அந்த அண்ணனும்</p><p>சுதிசேர்த்து மேளம் கொட்டும்</p><p>அவர் மனைவியும்</p><p>மேலாடையில்லாமல்</p><p>தட்டேந்தி வரும் அவர்கள் மகனும்</p><p>இயல்புக்குத் திரும்பிய பிறகும்</p><p>எங்கும் காணவில்லை</p><p>கடந்து செல்லும் நொடியில்</p><p>இமைச் சிறகில் நகைசிந்தும்</p><p>என்னையும்கூடத் தேடலாம்</p><p>அவர்கள் எங்காவது.</p><p><em><strong>- ப.செல்வகுமார்</strong></em></p>