<p>வண்ண, வடிவங்களின் விரிந்த கலவை</p><p>திறந்து வைத்த ஆர்மோனியமாகச் சிரிக்கிறது</p><p>நீள, அகலங்களின் கச்சிதம்</p><p>வயலினின் ஸ்வர அளவுகளைக் காட்டுகிறது.</p><p>காற்றோடு படபடக்கும் மேலாக்கு</p><p>தவிலின் கனமான இசைப்பை ஞாபகப்படுத்துகிறது</p><p>வெயில், மழைக்கு கீரிடமாய் மாறி</p><p>தலை காக்கையில்</p><p>நாகஸ்வரத்தின் நாதம் நீள்கிறது.</p><p>கூட்ட நெரிசலிலும்</p><p>தனித்த பயணங்களிலும்</p><p>கழுத்தைச் சுற்றி ஊரும் கதகதப்பில்</p><p>துடிதுடிக்கிறது வீணையின் தந்தி</p><p>வியர்த்த பொழுதில் விசிறியாய் அசைந்து</p><p>ஆசுவாசப்படுத்துகிறது </p><p>புல்லாங்குழலின் குயில் குரல்.</p><p>யோசனைகளின் விரிவுகளில்</p><p>மோதிரமாய் விரலேறி</p><p>கசங்குகிறது தம்புராவின் ஒற்றை ஒலி.</p><p>ஆங்காங்கே சிதறிச் சிரிக்கும் பூக்கள்</p><p>உடலின் வாசனையை குரலிசையாய் மணக்கச்செய்கிறது</p><p>நடைக்கு பின்னணியாய் </p><p>உடலோடு சரசரக்கையில்</p><p>ஒரு வசீகரப் பாடலின் இசைக்குறிப்பை</p><p>உடுத்திய உடல் மீது எழுதிச் செல்கிறது</p><p>புடவை.</p><p><em>- ஸ்ரீநிவாஸ் பிரபு</em></p>.<p>அவர்களுக்காக...</p><p>முன்பெல்லாம் இந்த சிக்னலில்</p><p>மழைக்காலத்தில் குடை விற்பார்கள்</p><p>கோடையில் தொப்பி</p><p>சின்னச் சின்ன சீனாப் பொருள்கள்</p><p>காருக்கான நாய் பொம்மை</p><p>ஐ.பி.எல் நேரத்தில் மட்டையும் பந்தும்</p><p>விநாயகர் சதுர்த்தி வந்தால்</p><p>கூடை நிறைய தொப்பை கணபதி</p><p>இப்படி வயிற்றுக்காக வாடி வதங்கியோரை</p><p>கொரோனா </p><p>காணாமற்போகச் செய்ததை</p><p>எண்ணிக்கொண்டிருக்கும்போதே பச்சை ஒளிர்ந்தது</p><p>சிந்தனை முழுதும் அப்பிக்கொண்டது சிவப்பு.</p><p><em>- ப்ரணா</em></p>.<p>எப்ப வருவீங்க</p><p>என்ற உன் கேள்வியை</p><p>நானும்</p><p>நல்லா இருக்கியா</p><p>என்ற என் கேள்வியை</p><p>நீயும்</p><p>கவனிக்காத மாதிரி</p><p>கதைக்கப் பழகிவிட்டோம்.</p><p>காணொலிக்காக</p><p>ஒப்பனையிட்டு</p><p>சௌகரியமாக இருப்பதான</p><p>பாவனைகளில் பேசவும்</p><p>பழகிவிட்டோம்</p><p>கை உதறி</p><p>வந்து கலந்துவிட</p><p>எண்ணும் நேரங்களில்</p><p>வீட்டுக் கடனும்</p><p>எதிர்காலமும்</p><p>நினைவூட்டப்படுகையில்</p><p>கையாலாகாமல்</p><p>கலங்கும் கண்களை</p><p>கவனமாக மறைக்கவும்</p><p>முடிகிறது</p><p>அலைபேசியில் முகம்பதித்து</p><p>அப்பா எப்ப வருவ</p><p>என மழலையில்</p><p>மகள் கேட்கும் </p><p>அந்த நொடியில்தான்</p><p>பூமி ஒருகணம்</p><p>சுழலாமல் நின்றுவிடுகிறது.</p><p><em>- மதுரா</em></p>.<p>தினந்தோறும் வட்டிலில்</p><p>நீர் நிரப்பி வெளிச்சுவரில்</p><p>வைக்கிறேன்</p><p>பறவை விமானங்கள்</p><p>தரையிறங்கி</p><p>எரிபொருள் நிரப்பி</p><p>குரலெழுப்பி</p><p>வருகைப் பதிவேட்டில்</p><p>கையொப்பமிட்டு</p><p>மீண்டும் வான்வெளியில்</p><p>படபடக்கின்றன</p><p>எங்களுக்கான</p><p>சங்கேத மொழிபெயர்ப்பு</p><p>அன்பின் வழியில்</p><p>அனுதினமும் கடத்தப்படுகிறது</p><p>எச்சங்களில் கவனம்</p><p>செலுத்துவோருக்கு</p><p>அன்பின் மொழி</p><p>என்றும் புரிவதில்லை!</p><p><em>- பா.சிவகுமார்</em></p>
<p>வண்ண, வடிவங்களின் விரிந்த கலவை</p><p>திறந்து வைத்த ஆர்மோனியமாகச் சிரிக்கிறது</p><p>நீள, அகலங்களின் கச்சிதம்</p><p>வயலினின் ஸ்வர அளவுகளைக் காட்டுகிறது.</p><p>காற்றோடு படபடக்கும் மேலாக்கு</p><p>தவிலின் கனமான இசைப்பை ஞாபகப்படுத்துகிறது</p><p>வெயில், மழைக்கு கீரிடமாய் மாறி</p><p>தலை காக்கையில்</p><p>நாகஸ்வரத்தின் நாதம் நீள்கிறது.</p><p>கூட்ட நெரிசலிலும்</p><p>தனித்த பயணங்களிலும்</p><p>கழுத்தைச் சுற்றி ஊரும் கதகதப்பில்</p><p>துடிதுடிக்கிறது வீணையின் தந்தி</p><p>வியர்த்த பொழுதில் விசிறியாய் அசைந்து</p><p>ஆசுவாசப்படுத்துகிறது </p><p>புல்லாங்குழலின் குயில் குரல்.</p><p>யோசனைகளின் விரிவுகளில்</p><p>மோதிரமாய் விரலேறி</p><p>கசங்குகிறது தம்புராவின் ஒற்றை ஒலி.</p><p>ஆங்காங்கே சிதறிச் சிரிக்கும் பூக்கள்</p><p>உடலின் வாசனையை குரலிசையாய் மணக்கச்செய்கிறது</p><p>நடைக்கு பின்னணியாய் </p><p>உடலோடு சரசரக்கையில்</p><p>ஒரு வசீகரப் பாடலின் இசைக்குறிப்பை</p><p>உடுத்திய உடல் மீது எழுதிச் செல்கிறது</p><p>புடவை.</p><p><em>- ஸ்ரீநிவாஸ் பிரபு</em></p>.<p>அவர்களுக்காக...</p><p>முன்பெல்லாம் இந்த சிக்னலில்</p><p>மழைக்காலத்தில் குடை விற்பார்கள்</p><p>கோடையில் தொப்பி</p><p>சின்னச் சின்ன சீனாப் பொருள்கள்</p><p>காருக்கான நாய் பொம்மை</p><p>ஐ.பி.எல் நேரத்தில் மட்டையும் பந்தும்</p><p>விநாயகர் சதுர்த்தி வந்தால்</p><p>கூடை நிறைய தொப்பை கணபதி</p><p>இப்படி வயிற்றுக்காக வாடி வதங்கியோரை</p><p>கொரோனா </p><p>காணாமற்போகச் செய்ததை</p><p>எண்ணிக்கொண்டிருக்கும்போதே பச்சை ஒளிர்ந்தது</p><p>சிந்தனை முழுதும் அப்பிக்கொண்டது சிவப்பு.</p><p><em>- ப்ரணா</em></p>.<p>எப்ப வருவீங்க</p><p>என்ற உன் கேள்வியை</p><p>நானும்</p><p>நல்லா இருக்கியா</p><p>என்ற என் கேள்வியை</p><p>நீயும்</p><p>கவனிக்காத மாதிரி</p><p>கதைக்கப் பழகிவிட்டோம்.</p><p>காணொலிக்காக</p><p>ஒப்பனையிட்டு</p><p>சௌகரியமாக இருப்பதான</p><p>பாவனைகளில் பேசவும்</p><p>பழகிவிட்டோம்</p><p>கை உதறி</p><p>வந்து கலந்துவிட</p><p>எண்ணும் நேரங்களில்</p><p>வீட்டுக் கடனும்</p><p>எதிர்காலமும்</p><p>நினைவூட்டப்படுகையில்</p><p>கையாலாகாமல்</p><p>கலங்கும் கண்களை</p><p>கவனமாக மறைக்கவும்</p><p>முடிகிறது</p><p>அலைபேசியில் முகம்பதித்து</p><p>அப்பா எப்ப வருவ</p><p>என மழலையில்</p><p>மகள் கேட்கும் </p><p>அந்த நொடியில்தான்</p><p>பூமி ஒருகணம்</p><p>சுழலாமல் நின்றுவிடுகிறது.</p><p><em>- மதுரா</em></p>.<p>தினந்தோறும் வட்டிலில்</p><p>நீர் நிரப்பி வெளிச்சுவரில்</p><p>வைக்கிறேன்</p><p>பறவை விமானங்கள்</p><p>தரையிறங்கி</p><p>எரிபொருள் நிரப்பி</p><p>குரலெழுப்பி</p><p>வருகைப் பதிவேட்டில்</p><p>கையொப்பமிட்டு</p><p>மீண்டும் வான்வெளியில்</p><p>படபடக்கின்றன</p><p>எங்களுக்கான</p><p>சங்கேத மொழிபெயர்ப்பு</p><p>அன்பின் வழியில்</p><p>அனுதினமும் கடத்தப்படுகிறது</p><p>எச்சங்களில் கவனம்</p><p>செலுத்துவோருக்கு</p><p>அன்பின் மொழி</p><p>என்றும் புரிவதில்லை!</p><p><em>- பா.சிவகுமார்</em></p>