<p>நிசப்தத்தின் நொடியில்<br>தொடங்குகிறது<br>கலவரம் மிகுந்த<br>வாழ்வியலுக்கான ஓசைகள்<br><br>தனிமையில்<br>என் இருப்பை<br>உறுதிப்படுத்துகின்றன<br>இந்த ஓசைகள்<br><br>அது ஒரு அற்புதமான<br>இசையாகப் பரிணமித்தால்<br>அதைவிட<br>என்னவாக இருக்கக்கூடும்<br>என் வாழ்தலின் அர்த்தம் சகா!<br><br><em>- ஷாலினி கணேசன்</em></p>.<p>வீட்டிற்கு இடமும் வலமுமாக<br>கண்களைப்போல் ஒளிர்ந்த<br>மாடங்களின் வெளிச்சப் பிறைகள்<br><br>தாழ்வாரத்தில் தூண்களைச் சுற்றி<br>வானத்தில் இருந்து இறைந்திருந்த<br>சின்னஞ்சிறு நட்சத்திரங்கள்<br><br>நடுக்கூடத்தின் பூசை மாடங்களில்<br>கண்சிமிட்டிக்கொண்டிருந்த<br>விடிவெள்ளித் துகள்கள்<br><br>ஒவ்வொரு அறையின் <br>சன்னல் திட்டுகளிலும்<br>யாருக்காகவோ காத்திருந்த<br>அழகான விட்டில் பூச்சிகள்<br><br>சமையலறையில் விறகடுப்பை<br>அலங்கரித்து<br>பாட்டியைத் திளைக்க வைத்திருந்த<br>புகையில்லாத நெருப்புத்துண்டுகள்<br><br>இரவானதும் புழக்கடையில்<br>நிலாத்துளிகளைச் சுரந்திருந்த<br>கிணற்றுமாடத்து ஒளிப்பேழைகள்<br><br>அத்தனை பிரகாசங்களும்<br>இருளுக்குள் போயிருந்தன<br>நகரத்து அடுக்கக வீட்டின் பால்கனியில்<br>கார்த்திகை தீபம் கொண்டாடிய பொழுது.<br><br><em>- தி.கலையரசி</em></p>.<p>சிங்காரப் பெருந்தலைநகர்<br>பிதுங்கி வழிய<br>பிறக்கிறது ஸ்மார்ட் சிட்டி<br><br>விரிந்து படர்ந்த பசிய விளைநிலங்களுக்கு<br>பாலூட்டிய திரவ தனங்களின் வேரில் செருகிநிற்கும் <br>விளம்பரப்பெரும்பலகைகள் சாய்ந்து கிடக்க<br>இன்னமும் கோபமாய்க் காற்று<br><br>ஊற்றுக்கண்கள் அடைத்த<br>அடுக்குமாடி ஆரண்யங்களைப்<br>புரட்டிக்கடாசிய பெரும்புயல்<br>தேங்குவதெங்கே<br>தெரியாப்புதிரில்<br>திரண்ட நீர்க்கூட்டம்<br>வாகாய் நுழையும் வாசல் திறப்புக்குள்<br>நீராலானதோ நகரம்<br><br>மகாமழை வருகையைச் சொன்ன சூசகத்தும்பிகள்<br>இருள் பூசிய விளக்குகளுள்<br>கூடடைய<br>கழிவும் மழையும் கலந்த வீதியில்<br>களித்து நீந்தும் பேரானந்த நீர்நாக இணை.<br><br><em>- அன்பாதவன்</em></p>.<p>அயர்ந்துறங்கும் அவளுக்குப் பாதுகாவலனாக இருக்கிறது இரவு<br>எலும்புகள் சில்லிடும் பனியில்<br>கம்பளிப் போர்வையின் வெதுவெதுப்பென<br>மென் கனவுகளை ஆரத் தழுவுகிறாள்<br>ஆசையாய் நட்டுவைத்த மரக்கன்று வளர்ந்து<br>தன் இலைகளை சரசரப்புடன் உதிர்ப்பதை உணர்கிறாள்<br>எப்படியும் வடிந்துவிடக்கூடிய இரவின் விளிம்பில்<br>உதயமாகும் சூரியப் பரல்களைத் தாங்கியபடி<br>அவள் விழிகள் மினுமினுப்பதைக் காண்கிறாள்<br>சரசரவெனத் தீண்டும் சர்ப்பமென<br>சாளரங்களின் திரைச்சீலைகளை அசைத்துப் பார்க்கிற பனிக்காற்றில்<br>புரண்டு படுக்கிற அவளின் பேரழகில்<br>ஒரு மின்னல் வந்து போனது<br>நாளை வானிலை அறிக்கை<br>பெரும் புயலென வரலாம்<br>வதனம் மிகுந்த வசந்த காலத்திற்கென<br>ஒரு பெருமழையின் மையமிது<br>அந்த அறை அத்தனை அமைதியில்லை<br>பாலுக்கேங்கும் இரவுப் பூனைகளின்<br>ஏக்கம் நிறைந்திருக்கிறது<br>மார்பு ஏறிஇறங்கும் பெருமூச்சில்</p><p>அந்த இரவும் ஏறி இறங்குகிறது<br>அவளுக்கென ஒரு ராஜகுமாரன்<br>கையில் ஒற்றை ரோஜாவோடு அவள் காதில் கிசுகிசுக்கலாம்<br>மஞ்சங்கள் நிறைந்த இந்த இரவின்<br>அத்தனை அழகிலும் பேரழகி நீ என்று<br>வாலிபம் தாண்டியவள் இளவரசி ஆனாலும்<br>வசந்தகாலப் பூக்கள் அவளுக்காகப் பூக்கும்!<br><br><em>- வதிலை பிரபா</em></p>
<p>நிசப்தத்தின் நொடியில்<br>தொடங்குகிறது<br>கலவரம் மிகுந்த<br>வாழ்வியலுக்கான ஓசைகள்<br><br>தனிமையில்<br>என் இருப்பை<br>உறுதிப்படுத்துகின்றன<br>இந்த ஓசைகள்<br><br>அது ஒரு அற்புதமான<br>இசையாகப் பரிணமித்தால்<br>அதைவிட<br>என்னவாக இருக்கக்கூடும்<br>என் வாழ்தலின் அர்த்தம் சகா!<br><br><em>- ஷாலினி கணேசன்</em></p>.<p>வீட்டிற்கு இடமும் வலமுமாக<br>கண்களைப்போல் ஒளிர்ந்த<br>மாடங்களின் வெளிச்சப் பிறைகள்<br><br>தாழ்வாரத்தில் தூண்களைச் சுற்றி<br>வானத்தில் இருந்து இறைந்திருந்த<br>சின்னஞ்சிறு நட்சத்திரங்கள்<br><br>நடுக்கூடத்தின் பூசை மாடங்களில்<br>கண்சிமிட்டிக்கொண்டிருந்த<br>விடிவெள்ளித் துகள்கள்<br><br>ஒவ்வொரு அறையின் <br>சன்னல் திட்டுகளிலும்<br>யாருக்காகவோ காத்திருந்த<br>அழகான விட்டில் பூச்சிகள்<br><br>சமையலறையில் விறகடுப்பை<br>அலங்கரித்து<br>பாட்டியைத் திளைக்க வைத்திருந்த<br>புகையில்லாத நெருப்புத்துண்டுகள்<br><br>இரவானதும் புழக்கடையில்<br>நிலாத்துளிகளைச் சுரந்திருந்த<br>கிணற்றுமாடத்து ஒளிப்பேழைகள்<br><br>அத்தனை பிரகாசங்களும்<br>இருளுக்குள் போயிருந்தன<br>நகரத்து அடுக்கக வீட்டின் பால்கனியில்<br>கார்த்திகை தீபம் கொண்டாடிய பொழுது.<br><br><em>- தி.கலையரசி</em></p>.<p>சிங்காரப் பெருந்தலைநகர்<br>பிதுங்கி வழிய<br>பிறக்கிறது ஸ்மார்ட் சிட்டி<br><br>விரிந்து படர்ந்த பசிய விளைநிலங்களுக்கு<br>பாலூட்டிய திரவ தனங்களின் வேரில் செருகிநிற்கும் <br>விளம்பரப்பெரும்பலகைகள் சாய்ந்து கிடக்க<br>இன்னமும் கோபமாய்க் காற்று<br><br>ஊற்றுக்கண்கள் அடைத்த<br>அடுக்குமாடி ஆரண்யங்களைப்<br>புரட்டிக்கடாசிய பெரும்புயல்<br>தேங்குவதெங்கே<br>தெரியாப்புதிரில்<br>திரண்ட நீர்க்கூட்டம்<br>வாகாய் நுழையும் வாசல் திறப்புக்குள்<br>நீராலானதோ நகரம்<br><br>மகாமழை வருகையைச் சொன்ன சூசகத்தும்பிகள்<br>இருள் பூசிய விளக்குகளுள்<br>கூடடைய<br>கழிவும் மழையும் கலந்த வீதியில்<br>களித்து நீந்தும் பேரானந்த நீர்நாக இணை.<br><br><em>- அன்பாதவன்</em></p>.<p>அயர்ந்துறங்கும் அவளுக்குப் பாதுகாவலனாக இருக்கிறது இரவு<br>எலும்புகள் சில்லிடும் பனியில்<br>கம்பளிப் போர்வையின் வெதுவெதுப்பென<br>மென் கனவுகளை ஆரத் தழுவுகிறாள்<br>ஆசையாய் நட்டுவைத்த மரக்கன்று வளர்ந்து<br>தன் இலைகளை சரசரப்புடன் உதிர்ப்பதை உணர்கிறாள்<br>எப்படியும் வடிந்துவிடக்கூடிய இரவின் விளிம்பில்<br>உதயமாகும் சூரியப் பரல்களைத் தாங்கியபடி<br>அவள் விழிகள் மினுமினுப்பதைக் காண்கிறாள்<br>சரசரவெனத் தீண்டும் சர்ப்பமென<br>சாளரங்களின் திரைச்சீலைகளை அசைத்துப் பார்க்கிற பனிக்காற்றில்<br>புரண்டு படுக்கிற அவளின் பேரழகில்<br>ஒரு மின்னல் வந்து போனது<br>நாளை வானிலை அறிக்கை<br>பெரும் புயலென வரலாம்<br>வதனம் மிகுந்த வசந்த காலத்திற்கென<br>ஒரு பெருமழையின் மையமிது<br>அந்த அறை அத்தனை அமைதியில்லை<br>பாலுக்கேங்கும் இரவுப் பூனைகளின்<br>ஏக்கம் நிறைந்திருக்கிறது<br>மார்பு ஏறிஇறங்கும் பெருமூச்சில்</p><p>அந்த இரவும் ஏறி இறங்குகிறது<br>அவளுக்கென ஒரு ராஜகுமாரன்<br>கையில் ஒற்றை ரோஜாவோடு அவள் காதில் கிசுகிசுக்கலாம்<br>மஞ்சங்கள் நிறைந்த இந்த இரவின்<br>அத்தனை அழகிலும் பேரழகி நீ என்று<br>வாலிபம் தாண்டியவள் இளவரசி ஆனாலும்<br>வசந்தகாலப் பூக்கள் அவளுக்காகப் பூக்கும்!<br><br><em>- வதிலை பிரபா</em></p>