<p><strong>தெய்வத்தின் மனசு</strong><br><br>தினமும் பூமாலை<br><br>சாத்தியும்<br><br>வாரம் தவறாமல்<br><br>அபிஷேகம் நடத்தியும்<br><br>மாதத்திற்கு ஒருமுறை<br><br>பட்டாடைகள்<br><br>வாங்கித் தந்தும்<br><br><br><br>அருகிலேயே அமர்ந்து<br><br>வணங்கியும்கூட<br><br>இன்னும் வேண்டுதல்<br><br>நிறைவேறவில்லை என<br><br>அலுத்துக்கொள்பவர்களுக்குத்<br><br>தெரிய வாய்ப்பில்லை<br><br><br><br>வணங்க நேரமின்றி<br><br>அவசர அவசரமாய்<br><br>கோபுர வாசலருகே<br><br>கன்னத்தில் போட்டுக்கொண்டு<br><br>வேலைக்கு ஓட்டமெடுக்கும் ஒருவனின்<br><br>பிரார்த்தனைக்கு செவி சாய்க்க<br><br>வெளியிலேயே கால் கடுத்தபடி<br><br>நின்றுகொண்டிருக்கிறது<br><br>தெய்வம் என்று.<br><br><br><br><em>தி.கலையரசி</em></p> <p><strong>பூச்சாண்டி</strong><br><br><br>முன்பு<br><br>பூச்சாண்டிகளின் உலகுக்குள்<br><br>குழந்தைகள் நுழைவதில்லை<br><br><br>அந்த<br><br>ரகசிய உலகின் கதவுகள்<br><br>திறக்கப்படாமலேயே<br><br>வளர்ந்துவிட்டார்கள் குழந்தைகள்<br><br><br>இன்று<br><br>பூச்சாண்டிகள்<br><br>தம் உலகிலிருந்து<br><br>வெளி வருவதேயில்லை<br><br><br><br>கார்ட்டூன் பார்த்தபடியே <br><br>இரவு உணவு<br><br><br><br>அனிமேஷன் வில்லன்களின் குகை<br><br>ரிமோட்டின் ஒற்றைப் பொத்தானில்<br><br>திறந்துகொள்கின்றன<br><br><br><br>வெறிச்சோடிய<br><br>முன்னிரவு நேரத் தெருக்களில்<br><br>சத்தமின்றிக் கடந்துபோகும்<br><br>பின்னிரவுப் பூச்சாண்டிகளை<br><br>ஊளையிட்டு வழியனுப்புகின்றன<br><br>தெருநாய்கள் மட்டுமே.<br><br><em>தக்ஷன்</em></p>.<p><strong>முகங்கள், கதைகள்!</strong><br><br><br>பத்து பன்னிரண்டு வயது மகன்<br><br>மகனாகத்தானிருக்கும்<br><br>இல்லாவிட்டால் என்ன<br><br>கலக்கத்துடன்<br><br>ஏதும் செய்வதறியாது நிற்பதும்<br><br>அவளைப் பார்க்கும் தொனியும்<br><br>அப்படித்தான் இருந்தன<br><br><br><br>குழந்தைகள் துணிக்கடை முன்<br><br>பைக் நிறுத்தும் மேட்டில்<br><br>அமர்ந்திருந்தாள் அம்மா<br><br>அம்மாவாகத்தான் இருக்க முடியும்<br><br>யாருக்கு அம்மாவாக இருந்தால் என்ன<br><br><br><br>விரித்துப்போட்ட தலைமயிரும்<br><br>இரவின் சாயம் போகாத நைட்டியும்<br><br>கண்ணில் துளிக் கண்ணீரும்<br><br>வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது<br><br>என்பதை ஒரு நொடியில் வெளிப்படுத்திவிட்டன<br><br><br><br>கடந்துதான் வந்துவிட்டேன்<br><br>ஒரு சில நொடிகளில்<br><br>அந்த முகங்களை<br><br>கடக்க முடியவில்லை<br><br>அந்தக் கதைகளை<br><br>நானும் ஒரு மகன்தானே!<br><br><br><br>தேடன்<br><br>பால்யகால தாயின் சாயல்<br><br><br><br>நதியின்<br><br>புடவை தலைப்பைப் பிடித்து<br><br>விளையாடிக்கொண்டிருக்கின்றன<br><br>மீன் குஞ்சுகள்<br><br>நிம்மதியாக<br><br>தன் அமைதியை<br><br>இழந்துகொண்டிருக்கும்<br><br>நதிக்கு<br><br>அப்படி என் பால்யகாலத்<br><br>தாயின் சாயல்.<br><br><br><br><em>- ச.அர்ஜூன்ராச்</em></p>
<p><strong>தெய்வத்தின் மனசு</strong><br><br>தினமும் பூமாலை<br><br>சாத்தியும்<br><br>வாரம் தவறாமல்<br><br>அபிஷேகம் நடத்தியும்<br><br>மாதத்திற்கு ஒருமுறை<br><br>பட்டாடைகள்<br><br>வாங்கித் தந்தும்<br><br><br><br>அருகிலேயே அமர்ந்து<br><br>வணங்கியும்கூட<br><br>இன்னும் வேண்டுதல்<br><br>நிறைவேறவில்லை என<br><br>அலுத்துக்கொள்பவர்களுக்குத்<br><br>தெரிய வாய்ப்பில்லை<br><br><br><br>வணங்க நேரமின்றி<br><br>அவசர அவசரமாய்<br><br>கோபுர வாசலருகே<br><br>கன்னத்தில் போட்டுக்கொண்டு<br><br>வேலைக்கு ஓட்டமெடுக்கும் ஒருவனின்<br><br>பிரார்த்தனைக்கு செவி சாய்க்க<br><br>வெளியிலேயே கால் கடுத்தபடி<br><br>நின்றுகொண்டிருக்கிறது<br><br>தெய்வம் என்று.<br><br><br><br><em>தி.கலையரசி</em></p> <p><strong>பூச்சாண்டி</strong><br><br><br>முன்பு<br><br>பூச்சாண்டிகளின் உலகுக்குள்<br><br>குழந்தைகள் நுழைவதில்லை<br><br><br>அந்த<br><br>ரகசிய உலகின் கதவுகள்<br><br>திறக்கப்படாமலேயே<br><br>வளர்ந்துவிட்டார்கள் குழந்தைகள்<br><br><br>இன்று<br><br>பூச்சாண்டிகள்<br><br>தம் உலகிலிருந்து<br><br>வெளி வருவதேயில்லை<br><br><br><br>கார்ட்டூன் பார்த்தபடியே <br><br>இரவு உணவு<br><br><br><br>அனிமேஷன் வில்லன்களின் குகை<br><br>ரிமோட்டின் ஒற்றைப் பொத்தானில்<br><br>திறந்துகொள்கின்றன<br><br><br><br>வெறிச்சோடிய<br><br>முன்னிரவு நேரத் தெருக்களில்<br><br>சத்தமின்றிக் கடந்துபோகும்<br><br>பின்னிரவுப் பூச்சாண்டிகளை<br><br>ஊளையிட்டு வழியனுப்புகின்றன<br><br>தெருநாய்கள் மட்டுமே.<br><br><em>தக்ஷன்</em></p>.<p><strong>முகங்கள், கதைகள்!</strong><br><br><br>பத்து பன்னிரண்டு வயது மகன்<br><br>மகனாகத்தானிருக்கும்<br><br>இல்லாவிட்டால் என்ன<br><br>கலக்கத்துடன்<br><br>ஏதும் செய்வதறியாது நிற்பதும்<br><br>அவளைப் பார்க்கும் தொனியும்<br><br>அப்படித்தான் இருந்தன<br><br><br><br>குழந்தைகள் துணிக்கடை முன்<br><br>பைக் நிறுத்தும் மேட்டில்<br><br>அமர்ந்திருந்தாள் அம்மா<br><br>அம்மாவாகத்தான் இருக்க முடியும்<br><br>யாருக்கு அம்மாவாக இருந்தால் என்ன<br><br><br><br>விரித்துப்போட்ட தலைமயிரும்<br><br>இரவின் சாயம் போகாத நைட்டியும்<br><br>கண்ணில் துளிக் கண்ணீரும்<br><br>வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது<br><br>என்பதை ஒரு நொடியில் வெளிப்படுத்திவிட்டன<br><br><br><br>கடந்துதான் வந்துவிட்டேன்<br><br>ஒரு சில நொடிகளில்<br><br>அந்த முகங்களை<br><br>கடக்க முடியவில்லை<br><br>அந்தக் கதைகளை<br><br>நானும் ஒரு மகன்தானே!<br><br><br><br>தேடன்<br><br>பால்யகால தாயின் சாயல்<br><br><br><br>நதியின்<br><br>புடவை தலைப்பைப் பிடித்து<br><br>விளையாடிக்கொண்டிருக்கின்றன<br><br>மீன் குஞ்சுகள்<br><br>நிம்மதியாக<br><br>தன் அமைதியை<br><br>இழந்துகொண்டிருக்கும்<br><br>நதிக்கு<br><br>அப்படி என் பால்யகாலத்<br><br>தாயின் சாயல்.<br><br><br><br><em>- ச.அர்ஜூன்ராச்</em></p>