<p><strong>சன்னல் வழியாக</strong></p><p><strong>ச</strong>ன்னல்வழியாக</p><p>வீட்டுக்குள்ளே எட்டிப்பார்க்கிறது</p><p>வெயில்</p><p>இசையொன்றை</p><p>அனுப்பி வைக்கிறது வேப்பமரக் குயில்</p><p>நுங்கு விற்றுப் போவதைத்</p><p>தெரியப்படுத்திப் போகிறான் வியாபாரி</p><p>தன் பயணத்தை </p><p>தட தட சப்தங்களோடு தெரிவிக்கிறது</p><p>தூரத்து ரயில்</p><p>பக்கத்து வீட்டில்</p><p>கோழி பிரியாணி என்று</p><p>அறிவிக்கிறது வாசம்</p><p>கடைசி நாள்களில்</p><p>வீட்டை விட்டு</p><p>வெளியே செல்ல முடியாதவனுக்கு</p><p>கண்களாகவும் காதாகவும் நாசியாகவும்</p><p>ஆகிவிடுகிறது சன்னல்.</p><p><em>- சௌவி</em></p>.<p><strong>நினைவுக் குறிப்புகள்</strong></p><p><strong>மூ</strong>ன்றாம் வகுப்பு ஆசிரியரை</p><p>தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது</p><p>நலம் விசாரிப்பில்</p><p>யாரோ ஒருவரின் வாழ்க்கையில்</p><p>தான் கூடுதலாக இருப்பதாகச் சொன்னார்</p><p>மேற்கொண்டு எதையும் எழுத</p><p>இடமில்லாமல் இருந்தது அவர் முகத்தில்</p><p>நினைவுக் குறிப்பிலிருந்து</p><p>என்னை எடுக்கமுடியவில்லை அவரால்</p><p>இருப்பினும்</p><p>தொடர்பு எண்ணைக் கேட்டு</p><p>எழுதத் தொடங்கிய கணத்தில் </p><p>நினைவுக் குறிப்பிலிருந்து வெளிவந்தது</p><p>அந்த மூன்றாம் வகுப்பிலிருந்து</p><p>என் கையெழுத்து.</p><p><em>- ஆண்டன் பெனி</em></p>.<p><strong>கீழிறங்கும் அச்சம்</strong></p><p><strong>மா</strong>லை ஆறு மணி</p><p>பத்திரமாகப் பிடித்துக்கொண்டேன்</p><p>ஏணியை</p><p>பதற்றமாக இருந்தது</p><p>என் பால்யம்</p><p>மின்கம்பத்தில் ஏறும்</p><p>மின் வினைஞரைப் பார்த்தல்ல</p><p>அவர் பிய்ந்த கம்பியிழையை</p><p>செப்பனிட்டு</p><p>மின் இணைப்பைத் தந்ததும்</p><p>அதுவரை வேடிக்கை பார்த்திருந்த</p><p>சிட்டுக்குருவி</p><p>கூடடையப் புறப்பட்டது</p><p>வானின் முற்றத்தில்</p><p>முகமொளிரத்தொடங்கியது நிலவு</p><p>மெல்ல இறங்கியது பயம்</p><p>வானையே துழாவிக்கொண்டிருந்தது</p><p>என் நிம்மதி.</p><p><em>- ச.அர்ஜூன்ராச்</em></p>.<p><strong>வனமும் மனமும் </strong></p><p><strong>ஆ</strong>லகால விருட்சத்தின் சிலிர்ப்பு மழையே</p><p>ஆழி மழையின் அகங்காரத்தைக் கட்டுக்குள் வைத்து</p><p>அவிழ்த்து விடுகிறது</p><p>சிங்கத்தின் கர்ஜனைகள்</p><p>வனங்களின் எத்தனை பரப்பை</p><p>ஆண்டுவிட முடியும்</p><p>சில்வண்டுகளின் ரீங்காரம்போலே</p><p>நான்கு டன்</p><p>யானைகளின் காலுக்கு அழியாத புல்வெளிகள்</p><p>50 கிலோ மனிதனின் காலுக்கு</p><p>அஞ்சுகின்றன</p><p>சிதறிக் கிடக்கும்</p><p>தேநீரை உதறிவிட்டு</p><p>ஒரு கோப்பைத் தேநீருக்கு</p><p>ஆசைப்பட்டு</p><p>இறந்துபோன ஈயைப்போல்</p><p>வனம் விட்டு ஊருக்குள் தாவுது மனம்!</p><p><em>- இளந்தென்றல் திரவியம்</em></p>
<p><strong>சன்னல் வழியாக</strong></p><p><strong>ச</strong>ன்னல்வழியாக</p><p>வீட்டுக்குள்ளே எட்டிப்பார்க்கிறது</p><p>வெயில்</p><p>இசையொன்றை</p><p>அனுப்பி வைக்கிறது வேப்பமரக் குயில்</p><p>நுங்கு விற்றுப் போவதைத்</p><p>தெரியப்படுத்திப் போகிறான் வியாபாரி</p><p>தன் பயணத்தை </p><p>தட தட சப்தங்களோடு தெரிவிக்கிறது</p><p>தூரத்து ரயில்</p><p>பக்கத்து வீட்டில்</p><p>கோழி பிரியாணி என்று</p><p>அறிவிக்கிறது வாசம்</p><p>கடைசி நாள்களில்</p><p>வீட்டை விட்டு</p><p>வெளியே செல்ல முடியாதவனுக்கு</p><p>கண்களாகவும் காதாகவும் நாசியாகவும்</p><p>ஆகிவிடுகிறது சன்னல்.</p><p><em>- சௌவி</em></p>.<p><strong>நினைவுக் குறிப்புகள்</strong></p><p><strong>மூ</strong>ன்றாம் வகுப்பு ஆசிரியரை</p><p>தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது</p><p>நலம் விசாரிப்பில்</p><p>யாரோ ஒருவரின் வாழ்க்கையில்</p><p>தான் கூடுதலாக இருப்பதாகச் சொன்னார்</p><p>மேற்கொண்டு எதையும் எழுத</p><p>இடமில்லாமல் இருந்தது அவர் முகத்தில்</p><p>நினைவுக் குறிப்பிலிருந்து</p><p>என்னை எடுக்கமுடியவில்லை அவரால்</p><p>இருப்பினும்</p><p>தொடர்பு எண்ணைக் கேட்டு</p><p>எழுதத் தொடங்கிய கணத்தில் </p><p>நினைவுக் குறிப்பிலிருந்து வெளிவந்தது</p><p>அந்த மூன்றாம் வகுப்பிலிருந்து</p><p>என் கையெழுத்து.</p><p><em>- ஆண்டன் பெனி</em></p>.<p><strong>கீழிறங்கும் அச்சம்</strong></p><p><strong>மா</strong>லை ஆறு மணி</p><p>பத்திரமாகப் பிடித்துக்கொண்டேன்</p><p>ஏணியை</p><p>பதற்றமாக இருந்தது</p><p>என் பால்யம்</p><p>மின்கம்பத்தில் ஏறும்</p><p>மின் வினைஞரைப் பார்த்தல்ல</p><p>அவர் பிய்ந்த கம்பியிழையை</p><p>செப்பனிட்டு</p><p>மின் இணைப்பைத் தந்ததும்</p><p>அதுவரை வேடிக்கை பார்த்திருந்த</p><p>சிட்டுக்குருவி</p><p>கூடடையப் புறப்பட்டது</p><p>வானின் முற்றத்தில்</p><p>முகமொளிரத்தொடங்கியது நிலவு</p><p>மெல்ல இறங்கியது பயம்</p><p>வானையே துழாவிக்கொண்டிருந்தது</p><p>என் நிம்மதி.</p><p><em>- ச.அர்ஜூன்ராச்</em></p>.<p><strong>வனமும் மனமும் </strong></p><p><strong>ஆ</strong>லகால விருட்சத்தின் சிலிர்ப்பு மழையே</p><p>ஆழி மழையின் அகங்காரத்தைக் கட்டுக்குள் வைத்து</p><p>அவிழ்த்து விடுகிறது</p><p>சிங்கத்தின் கர்ஜனைகள்</p><p>வனங்களின் எத்தனை பரப்பை</p><p>ஆண்டுவிட முடியும்</p><p>சில்வண்டுகளின் ரீங்காரம்போலே</p><p>நான்கு டன்</p><p>யானைகளின் காலுக்கு அழியாத புல்வெளிகள்</p><p>50 கிலோ மனிதனின் காலுக்கு</p><p>அஞ்சுகின்றன</p><p>சிதறிக் கிடக்கும்</p><p>தேநீரை உதறிவிட்டு</p><p>ஒரு கோப்பைத் தேநீருக்கு</p><p>ஆசைப்பட்டு</p><p>இறந்துபோன ஈயைப்போல்</p><p>வனம் விட்டு ஊருக்குள் தாவுது மனம்!</p><p><em>- இளந்தென்றல் திரவியம்</em></p>