<p>மூழ்குவதற்கு முந்தின வாரம்</p><p>வங்கியிலிருந்து வந்த கடிதத்தில்</p><p>அடகில் வைத்த நகை</p><p>ஏலம் போவதாய் எழுதியிருந்தது</p><p>அங்கேயும் இங்கேயுமாய்</p><p>உருட்டிப் புரட்டி</p><p>கெடுவிலிருந்த கடைசி நாளில்</p><p>மீட்பதற்கென நின்றிருந்த வரிசையில்</p><p>இரண்டு பெண்களுட்பட</p><p>எவர் கழுத்திலும் நகைகளில்லை</p><p>அசலும் வட்டியுமாய் பணத்தைக் கட்டிய</p><p>அரை மணி நேரத்தில்</p><p>லாக்கரிலிருந்த நகை</p><p>மதிப்பீட்டாளரின் கையில்</p><p>குட்டிச் சர்ப்பமெனச் சுருண்டிருந்தது</p><p>கையெழுத்துப் போட்டு</p><p>வாங்கிய செயினை</p><p>பாக்கெட்டில் வைப்பதற்காய்</p><p>ஞெகிழியில் மடித்தவனைப் பார்த்து</p><p>வங்கி ஊழியர் சொன்ன</p><p>‘கழுத்துல போட்டுக்குங்க சார்' என்ற</p><p>சொற்களின் கருணையில்</p><p>தங்கம் ஜொலித்தது.</p><p><em>- ப.செல்வகுமார்</em></p>.<p>கடலில்</p><p>மீனவன் மாயம் செய்த</p><p>வலையைப்போட்டு இழுக்கிறான்</p><p>அதில்</p><p>கட்டுண்டு வருகிறது</p><p>கொஞ்சம் கடல்</p><p>கலைந்து ஓடுகிறது முழு நிலா</p><p>இரண்டாய்க் கிழிபடுகிறது நீல வானம்</p><p>கரைந்து காணாமல் போகின்றன</p><p>எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்</p><p>துள்ளிக்குதித்து</p><p>அடங்க மறுப்பதென்னவோ</p><p>பிடிபட்ட மீன்கள் மட்டும்.</p><p><em>- கெளந்தி மு</em></p>.<p>எதார்த்தம்</p><p>பேரத்தில் படியாது</p><p>நீட்டிக்கப்பட்ட ஆயுளில்</p><p>புற்களை வழக்கத்தினும் மேலாக</p><p>ரசித்து மேய்ந்து</p><p>வாழத் தொடங்குகிறது</p><p>இளங்கிடாயொன்று</p><p>இயல்புநிலைக்குத் திரும்ப</p><p>வாய்ப்பில்லையென</p><p>மருத்துவரால்</p><p>கை விரிக்கப்பட்டும்</p><p>வழக்கத்திற்கு வந்துவிட்ட</p><p>தன் கைகளே அவனுக்கு தெய்வமாகிப்போகின்றன</p><p>நீண்டகாலமாய்</p><p>குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு வலியை</p><p>இரட்டிப்பாய்த் தந்தனர்</p><p>பிள்ளைகள் பிறந்து</p><p>ஒற்றைக்கனவைச்</p><p>சுமந்து அலைந்தவன்</p><p>கனவு நிறைவேறியபிறகு</p><p>கனவுக்காய் அலைய வேண்டியிருந்தது</p><p>வாழ்வின்</p><p>இறுக்கங்களும்</p><p>நகர்வுகளும்</p><p>வாழ்வே அறிந்திராத</p><p>ரகசிய எதார்த்தங்கள்.</p><p> <em> - சாமிகிரிஷ்</em></p>.<p>நரியிடம் தின்னக் கொடுத்த வடையோடு</p><p>சிறகிலிருந்து சிறிது வானத்தையும் பரிசளித்தது காகம்</p><p>நரி பாடிக்கொண்டிருக்கிறது</p><p>நீங்கள் ஊளை என்கிறீர்கள்.</p><p><em>- அகராதி</em></p>
<p>மூழ்குவதற்கு முந்தின வாரம்</p><p>வங்கியிலிருந்து வந்த கடிதத்தில்</p><p>அடகில் வைத்த நகை</p><p>ஏலம் போவதாய் எழுதியிருந்தது</p><p>அங்கேயும் இங்கேயுமாய்</p><p>உருட்டிப் புரட்டி</p><p>கெடுவிலிருந்த கடைசி நாளில்</p><p>மீட்பதற்கென நின்றிருந்த வரிசையில்</p><p>இரண்டு பெண்களுட்பட</p><p>எவர் கழுத்திலும் நகைகளில்லை</p><p>அசலும் வட்டியுமாய் பணத்தைக் கட்டிய</p><p>அரை மணி நேரத்தில்</p><p>லாக்கரிலிருந்த நகை</p><p>மதிப்பீட்டாளரின் கையில்</p><p>குட்டிச் சர்ப்பமெனச் சுருண்டிருந்தது</p><p>கையெழுத்துப் போட்டு</p><p>வாங்கிய செயினை</p><p>பாக்கெட்டில் வைப்பதற்காய்</p><p>ஞெகிழியில் மடித்தவனைப் பார்த்து</p><p>வங்கி ஊழியர் சொன்ன</p><p>‘கழுத்துல போட்டுக்குங்க சார்' என்ற</p><p>சொற்களின் கருணையில்</p><p>தங்கம் ஜொலித்தது.</p><p><em>- ப.செல்வகுமார்</em></p>.<p>கடலில்</p><p>மீனவன் மாயம் செய்த</p><p>வலையைப்போட்டு இழுக்கிறான்</p><p>அதில்</p><p>கட்டுண்டு வருகிறது</p><p>கொஞ்சம் கடல்</p><p>கலைந்து ஓடுகிறது முழு நிலா</p><p>இரண்டாய்க் கிழிபடுகிறது நீல வானம்</p><p>கரைந்து காணாமல் போகின்றன</p><p>எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்</p><p>துள்ளிக்குதித்து</p><p>அடங்க மறுப்பதென்னவோ</p><p>பிடிபட்ட மீன்கள் மட்டும்.</p><p><em>- கெளந்தி மு</em></p>.<p>எதார்த்தம்</p><p>பேரத்தில் படியாது</p><p>நீட்டிக்கப்பட்ட ஆயுளில்</p><p>புற்களை வழக்கத்தினும் மேலாக</p><p>ரசித்து மேய்ந்து</p><p>வாழத் தொடங்குகிறது</p><p>இளங்கிடாயொன்று</p><p>இயல்புநிலைக்குத் திரும்ப</p><p>வாய்ப்பில்லையென</p><p>மருத்துவரால்</p><p>கை விரிக்கப்பட்டும்</p><p>வழக்கத்திற்கு வந்துவிட்ட</p><p>தன் கைகளே அவனுக்கு தெய்வமாகிப்போகின்றன</p><p>நீண்டகாலமாய்</p><p>குழந்தைகள் இல்லாமல் தவித்தவர்களுக்கு வலியை</p><p>இரட்டிப்பாய்த் தந்தனர்</p><p>பிள்ளைகள் பிறந்து</p><p>ஒற்றைக்கனவைச்</p><p>சுமந்து அலைந்தவன்</p><p>கனவு நிறைவேறியபிறகு</p><p>கனவுக்காய் அலைய வேண்டியிருந்தது</p><p>வாழ்வின்</p><p>இறுக்கங்களும்</p><p>நகர்வுகளும்</p><p>வாழ்வே அறிந்திராத</p><p>ரகசிய எதார்த்தங்கள்.</p><p> <em> - சாமிகிரிஷ்</em></p>.<p>நரியிடம் தின்னக் கொடுத்த வடையோடு</p><p>சிறகிலிருந்து சிறிது வானத்தையும் பரிசளித்தது காகம்</p><p>நரி பாடிக்கொண்டிருக்கிறது</p><p>நீங்கள் ஊளை என்கிறீர்கள்.</p><p><em>- அகராதி</em></p>