<p><strong>சாமி சேவல்</strong></p><p><strong>கோ</strong>ழிகளின் வாசமற்ற</p><p>ஒற்றை வேப்பமரக் கோயில்</p><p>நேர்ச்சை சேவலுக்குக் கடும் பசி</p><p>ஏப்பம் விடுகிறது சாமி</p><p>ஐயோ</p><p>சின்ன வெடைச் சேவலை விரட்டிய அம்முனிக்கு</p><p>முட்டையைவிட கோழி</p><p>முக்கியமாய் இருந்தது</p><p>சேவலுக்கு ஆறுதல் சொல்வதாய்</p><p>கோழி அறுத்த நாளில்</p><p>தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்</p><p>அம்மா</p><p>ஒவ்வொரு கோழிக்கும்</p><p>பெயர் வைக்கும் பாட்டி</p><p>கோழிகளை சிநேகிதிகளாகப் பார்க்கிறாளா இல்லை</p><p>சிநேகிதிகளே கோழியா</p><p>தம்பிக்கு ஆன்லைன் தேர்வு</p><p>மொத்த வீட்டையும்</p><p>ம்யூட்டில் போட்டார் ஆசிரியர்</p><p>கொக்கரிக்கும் சேவலின்</p><p>குரல்வளை நெரித்தாள் அம்மா!</p><p><em>- அ.நிர்மலா ஆனந்தி</em></p>.<p><strong>நேர்கோட்டுப் பயணம்</strong></p><p><strong>இ</strong>ரை பழகும் ஆட்டுக்குட்டி</p><p>இலைகளில் வரைகிறது</p><p>விதவிதமாய்த்</p><p>தன் பசியின் ஓவியங்களை</p><p>நடைபயிலும் குழந்தையின்</p><p>குறிப்பிட்ட எல்லைக்குள்ளான</p><p>பயணங்கள்</p><p>ஒருபோதும் அலுப்பதேயில்லை</p><p>எழுதக் கற்கும் சிறுமி</p><p>தீட்டுகிறாள்</p><p>ஒவ்வொரு எழுத்தும்</p><p>உருவான வரலாற்றை</p><p>முதல் முதலாய்</p><p>சமைக்கப் பழகும்</p><p>ஒருவன் உணர்கிறான்</p><p>இதுவரையிலான</p><p>தான் சுவைக்க</p><p>விரும்பிய சுவைகளை.</p><p><em>- சாமி கிரிஷ்</em></p>.<p><strong>காத்திருக்கும் எருக்கம்பூ</strong></p><p><strong>எ</strong>ருக்கம் பூவில்</p><p>நனைந்த</p><p>அவளின் வியர்வை வாசம்</p><p>வெயிலையும் நனைக்கிறது</p><p>ஆடும் தொரட்டியும்</p><p>விட்டுப் போன மீதங்களில்</p><p>தன்னொத்த பூக்களைத்</p><p>தேடியலைகிறது</p><p>எருக்கம்பூ</p><p>அவள் அறுத்துச் சென்ற</p><p>தளைகளுக்கிடையே</p><p>அரிவாளுக்குத் தப்பிப் பிழைத்த</p><p>மலராத ஒற்றை எருக்கஞ்செடி</p><p>வீட்டிற்கும் காட்டிற்கும் இடையில்</p><p>காணாமல்போன</p><p>மரிபோல பாதை மாறுவதில்லை அது</p><p>பூத்தே இருக்கிறது</p><p>கரிசலில் எருக்கு</p><p>நாளை</p><p>மரியின் வருகைக்காக.</p><p><em>- வீரசோழன். க.சோ.திருமாவளவன்</em></p>
<p><strong>சாமி சேவல்</strong></p><p><strong>கோ</strong>ழிகளின் வாசமற்ற</p><p>ஒற்றை வேப்பமரக் கோயில்</p><p>நேர்ச்சை சேவலுக்குக் கடும் பசி</p><p>ஏப்பம் விடுகிறது சாமி</p><p>ஐயோ</p><p>சின்ன வெடைச் சேவலை விரட்டிய அம்முனிக்கு</p><p>முட்டையைவிட கோழி</p><p>முக்கியமாய் இருந்தது</p><p>சேவலுக்கு ஆறுதல் சொல்வதாய்</p><p>கோழி அறுத்த நாளில்</p><p>தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்</p><p>அம்மா</p><p>ஒவ்வொரு கோழிக்கும்</p><p>பெயர் வைக்கும் பாட்டி</p><p>கோழிகளை சிநேகிதிகளாகப் பார்க்கிறாளா இல்லை</p><p>சிநேகிதிகளே கோழியா</p><p>தம்பிக்கு ஆன்லைன் தேர்வு</p><p>மொத்த வீட்டையும்</p><p>ம்யூட்டில் போட்டார் ஆசிரியர்</p><p>கொக்கரிக்கும் சேவலின்</p><p>குரல்வளை நெரித்தாள் அம்மா!</p><p><em>- அ.நிர்மலா ஆனந்தி</em></p>.<p><strong>நேர்கோட்டுப் பயணம்</strong></p><p><strong>இ</strong>ரை பழகும் ஆட்டுக்குட்டி</p><p>இலைகளில் வரைகிறது</p><p>விதவிதமாய்த்</p><p>தன் பசியின் ஓவியங்களை</p><p>நடைபயிலும் குழந்தையின்</p><p>குறிப்பிட்ட எல்லைக்குள்ளான</p><p>பயணங்கள்</p><p>ஒருபோதும் அலுப்பதேயில்லை</p><p>எழுதக் கற்கும் சிறுமி</p><p>தீட்டுகிறாள்</p><p>ஒவ்வொரு எழுத்தும்</p><p>உருவான வரலாற்றை</p><p>முதல் முதலாய்</p><p>சமைக்கப் பழகும்</p><p>ஒருவன் உணர்கிறான்</p><p>இதுவரையிலான</p><p>தான் சுவைக்க</p><p>விரும்பிய சுவைகளை.</p><p><em>- சாமி கிரிஷ்</em></p>.<p><strong>காத்திருக்கும் எருக்கம்பூ</strong></p><p><strong>எ</strong>ருக்கம் பூவில்</p><p>நனைந்த</p><p>அவளின் வியர்வை வாசம்</p><p>வெயிலையும் நனைக்கிறது</p><p>ஆடும் தொரட்டியும்</p><p>விட்டுப் போன மீதங்களில்</p><p>தன்னொத்த பூக்களைத்</p><p>தேடியலைகிறது</p><p>எருக்கம்பூ</p><p>அவள் அறுத்துச் சென்ற</p><p>தளைகளுக்கிடையே</p><p>அரிவாளுக்குத் தப்பிப் பிழைத்த</p><p>மலராத ஒற்றை எருக்கஞ்செடி</p><p>வீட்டிற்கும் காட்டிற்கும் இடையில்</p><p>காணாமல்போன</p><p>மரிபோல பாதை மாறுவதில்லை அது</p><p>பூத்தே இருக்கிறது</p><p>கரிசலில் எருக்கு</p><p>நாளை</p><p>மரியின் வருகைக்காக.</p><p><em>- வீரசோழன். க.சோ.திருமாவளவன்</em></p>